22 August, 2006

புலிகளின் சர்வதேச தொடர்பாளராக நோர்வே செயற்படுகிறது:

சர்வதேச தொடர்பாளர்களாகவும், சர்வதேச தரப்பினருடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுப்பவர்களாகவும், விடுதலைப் புலிகளின் நேரடி உதவியாளர்களாக நோர்வே நாட்டினர் செயற்படுகின்றனர் என்று ஜே.வி.பி. மற்றும் ஹெல உறுமய கட்சியினர் குற்றம் சுமத்தியுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை தவறானது என்று ஹன்சன் பெளயர் கூறியிருப்பதன் மூலம், நோர்வேயின் இந்த இரகசிய புலிகள் ஆதரவு வெளிப்பட்டுள்ளதாக ஜே.வி.பி. தெரிவித்தது. விடுதலைப் புலிகள் பலவீனப்படும் போது உடனடியாக அவர்களைக் காப்பாற்ற நோர்வே வந்து விடுவதைப் பார்க்க முடிகிறது என்று ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசநாயக்க தெரிவித்தார். விடுதலைப் புலிகளை ஐரோப்பிய ஒன்றியம் தடைசெய்வதற்கு முயற்சிக்கும்போதே அதை நோர்வே எதிர்த்து வந்ததைச் சுட்டிக்காட்டிய அவர், விடுதலைப் புலிகளின் அபிலாசைகளுக்கு இணங்க நோர்வே செயற்படுகிறது என்பதை சிறிலங்கா அரசு புரிந்துகொண்டு, நோர்வேயின் அனுசரணைப் பணியை நிராகரிக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார். நன்றி>புதினம்.

1 comments:

Anonymous said...

Why should Norway help LTTE? What is the deal here?