20 August, 2006

பாகிஸ்தான்தூதுவரின் கொலைமுயற்சியின் பின்னனி?

இந்தக் கேள்விக்கான விடையை அறிவதற்கு முன்னர் இந்த இராஜதந்திரி மீதான சில அடிப்படை விளக்கங்களை அறிந்துகொள்ள வேணடும். யார் இந்த இராஜதந்திரி ? இவர் ஏன் ஸ்ரீலங்காவுக்கு அனுப்பப்பட்டார்? இவரது பின்னணி என்ன? இவை எல்லாவற்றிற்கும் மேலாக இவர் மீதான குறி யாரால் வைக்கப்பட்டது ? பாக்கிஸதானின் இராணுவப் புலனாய்வுத்துறையின் ஓய்வுபெற்ற கேர்ணல் தரத்திலாலான இந்த பஷீர் வாலி மொகமட் 4 வருடங்களுக்கு மேலாக ஸ்ரீலங்காவுக்கான பாக்கிஸதானின் தூதுவராக கடமையாற்றுகின்றார். இவரது ஸ்ரீலங்காவக்கான தூதுவர் நியமனம் கடந்த 2002 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அறிவிக்கப்பட்டது. இவரது நியமனம் தொடர்பாக இந்தியா அப்போது தனது கண்டனத்தையும் எதிர்ப்பையும் ஸ்ரீலங்கா அரசக்கு தெரியப்படுத்தியிருந்து. இருந்தும், தமிழர்கள் விடயத்தில் குறிப்பாக விடுதலைப்புலிகள் விடயத்தில் இந்தியா கடும் நடவடிக்கைகளை எடுக்காத காரணத்தினாலும், ஸ்ரீலங்காப்; பாதுகாப்புப் படைகளுத் தேவையான ஆயத உதவிகளை முழுமையாக வழங்குவதற்கு இந்தியா பின்னடித்ததைக் கருத்தில் கொண்டும், இந்தியாவிற்கு தகுந்த பாடத்தை கற்பிக்க வேண்டும் என்ற காரணத்தினாலும் ஸ்ரீலங்கா அரசு இந்தத் தூதுவர் நியமனத்தை ஏற்றுக்கொண்டது. பஷீர் வாலி மொகமட்டின் நியமனத்திற்கான இந்தியாவின் எதிர்ப்பு இவரது நியமனம் இந்தியாவின் இறைமை மற்றும் தேசியப் பாதுகாப்பு என்பவற்றிற்கு பாரிய அச்சுறுத்தலை கொடுக்கும் என இந்திய உளவு மற்றும் இராஜதந்திரிகள் இந்திய அரசுக்கு எடுத்துக் கூறியிருந்தனர். மேலும், பஸீர் வாலி, கொழும்பைத் தளமாகக்கொண்டு தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில் அமைந்துள்ள அணுமின் நிலையங்கள் மற்றும் ஏவகணை செலுத்தும் தளங்கள் தொடர்பான புலனாய்வை மேற்கொள்ளும் முகமாகவே நியமிக்கப்பட்டார். இது மட்டுமல்லாமல், 1990 ஆம் ஆண்டு பாக்கிஸ்தானின் கொழும்புத் தூதுவராலத்தில் உருவாக்கப்பட்ட புலனாய்வு செயற்பாட்டின் முக்கிய பொறுப்பு அதிகாரியாகவும் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தக் காலப்பகுதியில், தமிழ்நாட்டைத் தளமாகக்கொண்ட அல் உம்மா என்ற பயங்கரவாத அமைப்பிற்கான சகல உதவிகளும் இவரால் கொடுக்கப்பட்டு, தமிழ்நாட்டில் இந்த அமைப்பு தனது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதே காலப்பகுதியில் மட்டக்களப்பு மாகாணத்தின் தமிழ் முஸ்லீம்கள் சிலரினை தெரிவு செய்து, கராச்சியில் அமைந்திருக்கும் ஃபினோரி மதராஸ் என்ற தீவிரவாத சிந்தனைகளை கற்பிக்கும் பாடசாலைக்கு அனுப்பி வைத்தார். இந்தப் பாடசாலைகளை நிர்வாகிப்பவரும் நிதியளிப்பவர் ரி.ஜே. முவ்ற்றி நிசாமுடின். இவர் வேறுயாருமல்ல பாக்கிஸ்தான ஜிகாத், தலிபன், அல்கையிடா அமைப்புக்களின் போஷகர் என்பது இங்கு சுட்டிக்காட்டப்படவேண்டிய உண்மை. இவர் 2004 ஆம் ஆண்டு மெ மாதம் 30 ஆம் திகதி இனம் தெரியாத குழவொன்றினால் கராச்சியில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். பாக்கிஸ்தானின் தூதுவர் பஷீர் வாலி, இந்தியாவின் பஞ்சாப் தீவிரவாதிகளுக்கு பெருமளவில் ஆயத மற்றும் பயிற்சி நெறிகளை பாக்கிஸ்தானிய காஷ்மீர் பகுதிகளில் தொண்ணூறுகளின் பிற்பகுதியில் நடாத்தியும் வந்துள்ளார். இவ்வாறாக இந்தியாவின் நலன்களுக்கும் பாதுகாப்பக்கும் அச்சுறுத்தலாக விளங்கியவரும், இன்றும் விளங்கி வருபவருமான ஓய்வுபெற்ற புலனாய்வு அதிகாரி கேர்ணல் ஃபஷீர் வாலி மீதான தாக்குதல் யாரால் நடாத்தப்பட்டிருக்கும் என்ற தீர்ப்பினை வாசகர்ளாகிய உங்களிடத்திலே விட்டுவிடுகிறேன். தென்னிலங்கையில் நடைபெற்ற அனைத்துப் படுகொலைகளும் விடுதலைப் புலிகளினாலேயே நடாத்தப்பட்டதாக ஸ்ரீலங்கா அரசு கூறுகின்றது. ஒவ்வொரு கொலைகளின் பின்னரும் விசாரணைக் குழக்களையும் அமைத்து வந்ததை நாம் எல்லோரும் அறிவோம். எனினும் எந்தவொரு விசாரணக்குழவின் அறிக்கையும் முற்றுமுழுதாக நிறைவு பெற்றதாக சரித்திரம் இல்லை! இனியும் நிறைவடையப்போவதில்லை என்பதே உண்மை! இறுதியாக, தமிழர் விடுதலைப் போராட்டத்தை அழிப்பதற்கு பாக்கிஸ்தான தற்போது தனது ஆளணி முதல் ஆயத தளபாடம் வரை சகல வளங்களையும் ஸ்ரீலங்கா அரசக்கு வழங்கிவருகின்றது உண்மை. இதற்கு ஆதாரம் அண்மையில் தமிழர் தாயகப் பகுதிகளில் மேற்கொண்ட வான்வழித் தாக்குதல்! இன்று ஸ்ரீலங்கா விமானப் படைகளின் யுத்த விமானங்களின் பிரதான ஓட்டியாகவிருப்பவர்கள் பாக்கிஸ்தானிய விமான ஓட்டிகள் என்பது இங்கு கூர்ந்து கவனிக்கப்படவேண்டிய ஓர் உண்மை நன்றி>நிதர்சனம். பாக். தூதரின் வாகன அணி தாக்குதல்: பின்னணியில் "றோ' என்று குற்றச்சாட்டு! கொழும்பில் பாகிஸ்தான் நாட்டின் தூதர் பயணம் செய்த வாகனத் தொடரணி மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் இந்தியப் புலனாய்வுத் துறைக்கு தொடர்பு இருப்பதாக பாகிஸ்தான் பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது. கடந்த 14ஆம் திகதி பாகிஸ்தானின் சுதந்திரதினத்தன்று அந்நாட்டுத் தூதரும் அவரது குடும்பத்தினரும் பயணம் செய்த வாகனத் தொடரணி மீது கொழும்பில் கிளைமோர் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது தெரிந்ததே. தூதரின் வாகனத் தொடரணியில் சென்ற கொமாண்டோ படையினரை இலக்குவைத்து நடத்தப்பட்ட இத்தாக்குதலில் நான்கு கொமாண்டோ படையினர் உயிரிழந்தனர். தூதர் பஷீர் வலி முஹமட் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதல் இந்தியப் புலனாய்வுத்துறையான "றோ' வின் வேலை என்று இஸ்லாமாபாத்தில் வெளியாகும் பத்திரிகை ஒன்று பெயர் குறிப்பிடவிரும்பாத அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டிருக்கிறது. பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையே அதிகரித்துவரும் இராணுவ, பொருளாதார ஒத்துழைப்புக் கண்டு சீற்றமடைந்துள்ள இந்தியப் புலனாய்வுத்துறை இந்தத் தாக்குதலைத் திட்டமிட உதவியிருக்கின்றது. தூதர் வலி முஹமட் பாகிஸ்தான் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர். பாகிஸ்தான் இராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற இராணுவ கேணல். இலங்கையில் தனது கடமைக் காலத்தைப் பூர்த்திசெய்யும் தருணத்தில் அவர் இலக்கு வைக்கப்பட்டிருக்கிறார். விடுதலைப் புலிகளுக்கு எதிராகச் சண்டையிடும் இலங்கைப் படைகளுக்கு இரண்டு கப்பல்களில் ஆயுதங்கள் தரையிறக்கப்பட்டுக்கொண்டிருந்த வேளையில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருக்கிறது. இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உறவுகளைப் பலப்படுத்துவதில் தூதர் வலி முஹமட் முக்கிய குறிப்பிடக்கூடிய பங்கை வகித்தவர். "கொழும்பில் அவருடைய பணி இந்தியாவுக்கு உகந்ததாக இருக்கவில்லை' என்று அதிகாரிகள் கூறுகின்றனர். தென்னாசியாவில் சுதந்திர வர்த்தக உடன் படிக்கையைக் கொண்டுள்ள இரண்டு நாடுகள் பாகிஸ்தானும் இலங்கையுமே ஆகும். பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நெருக்கத்தை இந்தியப் புலனாய்வு அமைப்பு இந்தத் தாக்குதல் மூலம் எடுத்துக்காட்டியிருக்கிறது. இவ்வாறு பாகிஸ்தானின் ஐ.ஏ.என்.எஸ். செய்தி தெரிவிக்கிறது. நன்றி> உதயன் கொல்பிட்டியில் உள்ள கருணா குழுவின் அலுவலகம் இதுக்கு பாவிக்கப்பட்டதாக சிங்கள பத்திரிகை வேறு எழுதியது. இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையிலான நிழல் யுத்தத்தின் களமாக தென்னிலங்கை மாறுகிறது போலுள்ளது. ஜிகாத் குழு கருணா குழு போன்றவர்களிற்கு முன்னிறுத்தி நிழல் யுத்தம்... ஒளிமயமான எதிர்காலம் கொழும்பில் தெரிகிறது.

2 comments:

Anonymous said...

பாகிஸ்தான் தலையிட்டால் தமிழீழ்ம் என்ற நாடு விரைவில் உருவாகும். இப்போதே எனது வாழ்த்துக்கள்.

Anonymous said...

யோசிக்க வேண்டியவர்கள் யோசிக்கவேண்டிய விடயம்.