31 May, 2006

சர்வதேசத்தின்மீது தமிழர்கள் அவநம்பிக்கை.

ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது விதித்துள்ள தடையுடன் தமிழ் மக்களுக்கு அற்ப சொற்பமாக சர்வதேச சமூகத்திடம் இருந்த நம்பிக்கையும் அற்றுப்போய்விட்டது. இதனை வன்னிப் பெருநிலப் பரப்பில் வெகுசன ஒன்றியத்தினர் வெளியிட்ட அறிக்கையே வெளிக்காட்டி நிற்கின்றது. அவ்வறிக்கையில், "எமது மக்கள் கொல்லப்படும்போது தனது கண்களை இறுகப் பொத்திக் கொள்ளும் சர்வதேசம் சிங்களவர்களின் தலைமயிர் உதிரும்போதுகூடக் கண் விழித்துக் கொண்டு உரத்த குரல் எடுக்கின்றது. இவற்றின் மூலம் ஒரே ஒரு முடிவிற்கு வருகின்றோம்.நாடற்றவர்கள் உலகில் வாழும் தகுதியற்றவர்கள். அவர்கள் விலங்குகளுக்கும் கீழான நிலையிலேயே கணிக்கப்படுவார்கள்" எனத் தெரிவித்திருப்பதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதியற்ற செயல் குறித்துத் தமது வேதனையை வெளியிட்டுள்ளனர். தமிழ் மக்கள் நீண்ட அனுபவத்தின் அடிப்படையில் உலக நாடுகளின் அதிகார வர்க்கத்தின் செயற்பாடுகள் குறித்து நம்பிக்கை இழந்தவர்களாகவே உள்ளனர். ஏனெனில், நீண்ட போராட்ட வரலாற்றில் தமிழ் மக்கள் அனுபவித்த துன்ப துயரங்கள் குறித்து எவருமே கவனத்தில் கொள்ளவில்லை. தமிழ் மக்களின் நீதியான போராட்டத்திற்கு அவை என்றுமே ஒத்துழைத்ததில்லை. நீதியான போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்காதுவிடினும், தமிழ் மக்களுக்கும் அடிப்படை மனித உரிமைகள் மற்றும் சனநாயக உரிமைகள் உண்டு என்ற அடிப்படையில் அவர்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கத்தானும் அவை தயாராக இருந்ததில்லை. மாறாக, தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை ஆயுத முனையில் நசுக்க முற்படும் அரசிற்கே அவர்கள் ஆதரவு வழங்கி வந்துள்ளனர். ஒரு தரப்பினரால் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கான நியாயப்பாடு சர்வதேச மயப்படுத்தப்பட்டு சரியான முறையில் உலக நாடுகளிடம்எடுத்துச் செல்லப்படவில்லை எனக் கூறப்படுவதுண்டு. சரி அவ்வாறு தான் வைத்துக் கொண்டாலும், சர்வதேச சமூகமே கரிசனை செலுத்தியதாகக் கூறப்படும் சுனாமி அனர்த்த புனர்வாழ்வுப் பணிகளில் சிறிலங்கா தமிழ் மக்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தியமை சர்வதேச சமூகத்திற்குத் தெரியாத தொன்றா? இதனைச் சர்வதேச சமூகம் தெரியாது எனக் கூறுமாயின் அதனைவிட மோசடித்தனமான விடயம் வேறு எதுவுமே இருக்க முடியாது. ஏனெனில், ஐ.நா. செயலாளர் கொபி அனானில் இருந்து அமெரிக்காவின் முன்னாள்; சனாதிபதி பில் கிளிங்டன் வரையில் இவ்விடயத்தில் நேரடியாகக் கரிசனை காட்டியிருந்தனர். இலங்கையில் சுனாமியால் தமிழ் மக்களும் பேரழிவைச் சந்திருந்தனர் என்பதைத் தெரிந்திருந்தனர். ஆனால், அவர்களால் கூட தமிழ் மக்களின் மனிதாபிமான தேவைகளைப் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. இதற்கு அவர்கள் இயலாது போய்விட்டது எனக் காரணம் கூறினால் அது நகைப் பிற்கிடமானதாகிவிடும். உரிமைக்காகப் போராடுகின்றார்கள் என்பதற்காக தமிழ் மக்களின் மனிதாபிமான உதவிகளைப் பெற்றுக் கொடுக்கக்கூட அவர்கள் தயாராக இல்லை என்பதே நிதர்சனமாகும். இது தனியாக அரசுகள் இடத்தில் மட்டும் காணப்படும் போக்கல்ல. தம்மை உலகில் மனித நேய அமைப்புக்களாகவும், பாதிக்கப்படும் மக்களுக்காகவும், உரிமைக்காகவும் குரல் கொடுக்கும் உதவி வழங்கும் அமைப்புக்களாகவும் கூறிக்கொள்ளும் அமைப்புக்களுக்கும் பொருத்தப்பாடானவையே. ஒடுக்கப்படும் மக்களின் உணர்வுகள் குறித்து அக்கறை காட்டாத அவ் அமைப்புக்கள் ஒடுக்குமுறை அரசுகளின் நலன்கள் பாதிக்கப்படாது பார்த்துக்கொள்வதில் பெரும் கவனம் செலுத்துகின்றன. இதற்கு ஐ.நா. அமைப்புக்கள்கூட விதிவிலக்காக இல்லை. சரி, விடுதலைப்புலிகள் இயக்கத்தைப் பயங்கரவாத பட்டியலில் சேர்த்துக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம், யுத்த நிறுத்தம் அமுலில் இருந்த காலத்தில் பல கொலைகளைப் புலிகள் புரிந்ததாகக் குற்றம் சாட்டியுள்ளது. இக்குற்றச்சாட்டுக்கள் எதற்கும் ஆதாரம் இல்லை என்பது ஒருபுறம் இருக்க, ஐரோப்பிய ஒன்றியம் யுத்த நிறுத்த காலத்தில் இடம்பெற்ற அனைத்துக் கொலைகளுக்கும் புலிகள் தான் காரணம் எனக் கருதுகின்றதா? அதாவது, தமிழ் தேசிய கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் தேசிய உணர்வாளர்கள், ஊடகவியலாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், அல்லைப்பிட்டிப் படுகொலை, விடுதலைப்புலிகளின்; மூத்த உறுப்பினர்கள், சிரேஸ்ட தளபதிகள் மற்றும் இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தில் நடந்த படுகொலைகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பணியாளர் கடத்தல் யாவற்றிற்கும் புலிகள்தான் காரணம் என்று கருதுகின்றதா? அவ்வாறு ஐரோப்பிய ஒன்றியம் கருதுமாக இருந்தால் அதனதுடன் பேசிப் பயனில்லை. அவ்வாறு இல்லை எனில், விடுதலைப்புலிகள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களைவிட சிறிலங்கா இராணுவமும், அதன் ஏவுதலில் இயங்கும் ஒட்டுக்குழுக்களும் புரிந்த படுகொலைகள் அதிக அளவிலானதாகவும், ஆதாரபூர்வமானவையாக நிரூபிக்கத்தக்கவையாகவும் உள்ளன. ஆனால், இவை ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்களுக்குத் தெரியாதுபோனது ஏன்? படுகொலைகள் புரிய அரசிற்கு அங்கீகாரம் உண்டு என்பதினாலா?அவ்வாறானால் தம்மைப் பாதுகாத்தல் தமிழருக்கு உரிமை இல்லையா? ஆனால், இவை எல்லாவற்றையும் கண்டு கொள்ளாது ஆட்சி அதிகாரம் அற்ற இனம் என்ற ஒரே காரணத்தின் அடிப்படையில் தமது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சர்வதேசநாடுகள் மீதும், அமைப்புக்கள் மீதும் எவ்வாறு மக்கள் நம்பிக்கை கொள்ள முடியும். அவர்களை ஒடுக்குமுறையாளர்களின் அனுசரணையாளர்கள் என்று கூறாது, நீதியின் காவலர்கள் என எவ்வாறு கூறமுடியும்? நன்றி: ஈழநாதம்

மகிந்தவுடன் புலம்பெயர் கனடா தமிழர் போர் பிரகடனம்!

அன்பான உறவுகளே! எமது உறவுகள் நாளும் எம் தாயக மண்ணில் கொன்றொழிக்கப்பட்ட வண்ணம் உள்ளனர். நாயைப் போல், தெருவிலும், பயிலும் இடத்திலும், தொழிலகத்திலும், படுக்கையிலுமாக எம் உறவுகள் குதறப்படுகின்றனர். நான்கு வருடம் சர்வதேசத்தின் வேண்டுதலுக்காக எம் உறவுகள் ஒரு சமாதானப் பயணத்தில் நம்பிக்கையுடன் பயணித்தனர். என்ன நடந்தது? சமாதானம் வந்ததா? தீர்வு கிட்டியதா? ஒரு போர் நிறுத்த ஒப்பந்தமே நான்கு ஆண்டுகளின் பின் தனது வாழ்நாளை எண்ணிக்கொண்டிருக்கின்றது. முதலில் இயல்பு வாழ்க்கை வரும் என்றது சர்வதேசம். இன்று எம் மக்கள் தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள தங்கள் வாழ்விடங்களைவிட்டே ஓடிக் கொண்டிருக்கின்றார்கள். ஆக்கிரமிப்பு நாய்களின் வெறியாட்டம் எங்கும் தலைவிரித்தாடுகின்றது. இந்நிலையில் தான் உதவுகிறேன் நம்புங்கள் என்று வந்த சர்வதேசமும் மனிதத்தை தொலைத்துவிட்டு நிற்கின்றது. வழிசமைத்து கொடுப்பதை விடுத்துவிட்டு, வழியடைத்து படுகொலை ஒன்றிற்கு துணைபோகின்றது. தாயகத்தில் ஒரு இனப்படுகொலையை நடாத்தியவாறு, புலம்பெயர்ந்த மக்கள் மீதும் வீண்பழி சுமத்தி, அங்கும் அவர்களை வாழா மடந்தையாக்க சிங்களத்தின் மகிந்தர் முனைந்து நிற்கின்றார். இன்று, எம் தாயக உறவுகளுக்காக, அவர்கள் உண்மை நிலையை சர்வதேசத்திற்கு வெளிக்கொணருவதற்காக சர்வதேசமெங்கும் ஒன்றுகூடி நிற்கின்றோம். இவ்வொன்று கூடலை எமது அடுத்த நகர்வுகளின் படிகற்களாக கொள்வோம். ஆம், நாம் சிந்தித்து ஒற்றுமையுடன் விரைந்து செயலாற்றும் காலம் இன்று எம் முன்னால் விரிகின்றது. துன்பத்தை தருபவனுக்கு அந்த துன்பத்தை திருப்பிக் கொடுப்போம். எம் உறவுகளை சர்வதேசத்தில் இருந்து அன்னியப்படுத்தி அவர்களை ஒரு பெரும் இனப்படுகொலைக்கு உள்ளாக்கி, அடிமைப்படுத்தி விடலாம் என மகிந்தர் கனவு காண்கின்றார். இன்று, 12 நாடுகளில் நாம் அணிவகுத்து நிற்கின்றோம். நாங்கள் சர்வதேசத்தில் அதன் குடிமக்களாக நிமிர்ந்து நிற்கின்றோம். 2006ஆம் ஆண்டின் தோற்றுப் போன தேசங்களில் ஒன்றான அறிவிக்கப்பட்டுள்ள சிறீலங்காவை சர்வதேசத்தில் இருந்து முழுமையாக அன்னியப்படுத்துவோம். முதலில், எம் உறவுகள் மீது ஏற்கனவே ஒரு உத்தியோகப்பற்றற்ற பொருளாதாரத் தடையை விதித்திருக்கும், மதிந்தருக்கு அதிர்ச்சி வைத்தியமான எமது பொருளாதாரத் தடையை அமுல்செய்வோம். சிறீலங்கா அரசின் பொருட்களின் கொள்வனவுகளை எமது புலம்பெயர்ந்த நாடுகளில் தவிர்ப்போம். தற்போது உள்ள சரக்குக்கள் போக தொடர்ந்த சிறீலங்கா அரச பொருட்கள் தொடர்பான கொள்வனவுகளை நிறுத்துமாறு எமது வணிகர்களை அன்புடன் வேண்டுவோம். மாற்றீடான கொள்வனவுகள் உண்டு என்பதால், அது குறித்த முயற்சிகளில் உடன் கவனம் செலுத்துமாறு வணிகர்களை வேண்டுவோம். எமது கொள்வனவுகளால் மட்டும், பல மில்லியன் டொலர்களை மகிந்தர் அரசு வருவாயாகப் பெறுகின்றது என்பதை நாம் அனைவரும் நன்கறிவோம். எம்பணத்தில் எம் உறவுகளை கொல்லுகின்றார் மகிந்தர். புலம்பெயர்ந்த 8 லட்சம் தமிழர்ளை வேறு மதிந்தர் சீண்டிப் பார்க்கின்றார். அவருக்கு பதில் சொல்லும் வலுவில், வல்லமையில் புலம்பெயர்ந்த தமிழர்கள் நாம் இருக்கின்றோம்; என்பதை உடன் காட்டும் முயற்சியில் இது வெறும் ஆரம்பமே. வரும் நாட்களில் மேலும் பல விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வோம். எமது வர்த்தகர்களுக்கு பங்கம் வராத வகையிலும் எமது ஒற்றுமையின் வெளிப்பாடாகவும் கனடா தினமான வரும் யுூலை 1ஆம் நாள் முதல் முழுமையான சிறீலங்கா பொருட்களின் புறக்கணிப்பை அனைவருமான முன்னெடுப்போம். சமாதானத்திற்கான கனடா தமிழர்கள் நன்றி>சங்கதி. இதேபோன்று ஜரோப்பிய, அவுஸ்ரேலிய தமிழரும், வர்தகர்களை பாதிக்காதவாறு போராட முன்வரவேண்டும், வர்தகர்கள் இந்தியா, மலேசியா,சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து தமது வர்தகபொருட்களை இறக்குமதி செய்து இப்போராட்டத்துக்கு ஆதரவு நல்க வேண்டும்.

30 May, 2006

தமிழ் கவுன்சிலர் லண்டனில் 101 மணித்தியாலம் உண்ணாவிரதம்.

பிரித்தானிய அரசின் விசேட அனுமதியுடன் தயா இடைக்காடர் எதிர்வரும் 2ம் திகதிமுதல் 6ம் திகதிவரை தொடர் 101 மணிநேரம் உண்ணாவிரதம் இருக்க முடிவு எடுக்கபட்டுள்ளது. இதற்கான அனுமதியும் பிரித்தானிய அரசு வழங்கியுள்ளதுடன் ஒரு மீற்றர் நீளமும் மூண்று மீற்றர் அகலமும் உடைய பிரதேசத்தை இவருடைய உண்ணாவிரதத்திற்கு கொடுத்துள்ளது. இரவு பகலாக தொடர்சியாக நடைபெறும் இந்த உண்விரதத்தில் ஆதரவு கொடுக்கும் பலரும் உதவிக்கு சுற்றவர நிப்பதுடன் பிரித்தானிய அரசியல்வாதிகளின் ஆதரவும் இதன்ஊடாக பெறமுடியும் எண்று தயா தெரிவித்துள்ளார். தேர்தல் காலத்தில் தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிக்கு அமைய தமிழர் அவலத்தை பிரித்தானியாவில் அரசியல்வாதிகளுக்கு எடுத்தக்காட்ட இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளதுடன் வாக்கு போட்ட ஈழத்தமிழ் மக்களின் கோரிக்கைகளை பிரித்தானிய அரசியல்வாதிகளுக்கு புரியும் விதத்தில் தெரியப்படுத்தவதே தனது பூரண விருப்பம் எனவும் வடக்கு கிழக்கு தமிழர் மிதான அரச பயங்கரவாத செயல்கள் நிறுத்தப்படல் வேண்டும் தமிழ் பொதுமக்கள் அரச நிர்வாக பகுதியில் கோரமானமுறையில் கொல்லபடுவதை முண்டங்களாக மிதப்பதையும் உலகம் கண்டித்து இலங்கை அரசிற்கு உரிய அளுத்தம் கொடுக்கவேண்டும். பெண்கள் சிறுவர்கள் பாதுகாக்கபடல்வேண்டும். தமிழருக்கு நீதியான சுதந்திரம் கிடைக்க பிரித்தானியா உதவவேண்டும். எண்ற கோரிக்கைகள் அடங்கிய சுலோக அட்டைகளும் 101 மணிநேரம் வைக்கப்பட உள்ளது. இவருக்கு ஆதரவாகவும் அனைத்துக்கும் பாதுகாவலனாக திரு.றாஜன் (07751717097) என்பவருக்கு பொலிசார் அனுமதி கொடுத்துள்ளனர். இவருக்கு அச்சுறத்தல் ஏற்படுத்தாத விதத்தில் பலரும் ஆதரவு கொடுக்க இருப்பதுடன் அனைத்து ஊடகங்களும் இவருக்கான ஆதரவை கொடுக்க இருப்பதாக அறியமுடிகிறது. நன்றி>யாழ்.கொம்

28 May, 2006

நாளை உலகம் முழுதும், ஓங்கி ஒலிக்கிறது உரிமைக்குரல்.

நாளை 29ந்திகதி தடைக்கு எதிரான உலகம் தழுவிய, ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள். தமிழ் உணர்வாளர்களே ஒன்று கூடுங்கள். பாராளமண்றங்களை நோக்கிய முற்றுகை. 'உலகே உனக்கு கண்ணில்லையா?" 'உலக மக்கள்தான் மக்களா? எங்கள் தமிழீழ மக்கள் என்ன கற்களா?" அனைத்துலக மனக்கதவின் மேல் எங்கள் கரங்களை தட்டி எமது உடன் பிறப்புகளை காப்பாற்றுவோம். அமைதி வழிமூலம் தமிழ் மக்கள் தங்களுடைய உரிமைகளை வென்றெடுக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் இவ் வேளையில் சிறிலங்கா அரசும் அதனுடைய கூலிப்படைகளும்; தமிழ் மக்களை கொன்றொழித்து தமிழர்களின் சாத்வீக போராட்டத்தை நசுக்க முயற்சிக்கின்றன. இவர்கள் குழந்தைகள் சிறுவர்கள் என்று கூட பார்க்காமல் நான்கு மாத குழந்தை, நான்கு வயுது குழந்தைகளை கொல்லுகிறார்கள். நியுூசிலாந்து தமிழ் மக்கள், சிறிலங்கா அரசாங்கத்தின் இனப் படுகொலைக்கு எதிராக குரல் கொடுக்கும் முகமாக கவனயீர்ப்பு போரட்டம் ஒன்றை வெலிங்டனிலும, நீர் கூட அருந்தாமல், ஒருநாள் உண்ணாவிரத்தை ஒக்லாந்திலும் நடாத்துகிறார்கள். ஒக்லாந்து - உண்ணாவிரதப் போராட்டம் காலம்: 29.05.2006 (திங்கட்கிழமை) நேரம்: காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை இடம்: அயோத்தியா சதுக்கம் ஒக்லாந்து நகர மையம் வெலிங்டன் - கவனயீர்ப்பு போரட்டம் காலம்: 30.05.2006 (செவ்வாய்கிழமை) நேரம்: மதியம் 12.15 மணி முதல் 1.30 மணிவரை இடம்: பாராளுமன்றம் முன்பாக எமது இனத்திற்கு இழைக்கப்படும் கொடுமைகளை சர்வதேச உலகத்திற்கு எடுத்துச் சொல்லும் இறுதித் தருணம் இது என்பதால் அனைத்;து தமிழ் மக்களையும், மனிதாபிகளையும் உணர்வெழுச்சியுடன் வந்து இவ் உண்ணாவிரதப் போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளுகின்றோம். மனிதாபிமானம் உள்ள உலகத் தமிழினம் அனைத்தும் ஒன்று திரண்டு திடசங்கற்ப்பம் கொண்டிருக்கும் இவ்வேளை நியுூசிலாந்து தமிழர்களாகிய நாங்களும் எழுந்து எமது இனத்தின் உயிர்களை காக்க முயல்வோம். 'புலம் பெயர் தமிழர்களாகிய எமது குரல்களே ஈழத்தமிழர்களின் உயிரைக் காக்கும். தமிழ் மக்கள் மீது தொடரும் சிறீலங்காவின் மனிதப்படுகொலை நடவடிக்கைகளை தடுத்துநிறுத்திட உதவிடுமாறு உலக சமூகத்தினைக் கோரி உரிமைக்குரல்! 29 மே 2006 - திங்கட்கிழமை இடம்: Sergels Torg, Stockholm நேரம்: 14.00 (ஊர்வலமாக பாராளுமன்றம் நோக்கி செல்லல்) சிறிலங்காவின் முப்படைகளும், துணைப்படைகளும் இணைந்து நடத்தும் இன அழிப்பு வன்முறைகள் சமாதான காலத்தில் - சர்வதேச சமூகத்தின் கண்முன்னே - தினசரி நடந்தேறுகின்றது. தமிழின அழிப்பை நோக்காகக் கொண்டு திருமலை - யாழ்ப்பாணம் - மட்டக்களப்பு உள்ளடங்கலாக தமிழர் நகரங்களும் கிராமங்களும் கொலைக்களங்களாக்கப்பட்டு வருகின்றது. பலநு}று மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த மிகப்பெரும் படுகொலைகளை தடுத்து நிறுத்தி சிறீலங்காவின் இனஅழிப்பு நோக்கிற்கு எதிரான சர்வதேச கவனஈர்ப்பைக் கோரி அணிதிரளும் மிகப்பெரும் தேசியப் பணி இது! சர்வதேச சமூகமே... சிறிலங்காவின் இன அழிப்பை தடுத்து நிறுத்து! ஆக்கிரமிப்புப் படைகளே தமிழர் தாயகத்தை விட்டு வெளியேறு! போர்க்குற்றம் புரியும் சிறிலங்காவை குற்றக்கூட்டில் நிறுத்து! தமிழர் விடுதலைக்கான குரலை அங்கீகரி ! தமிழர்களின் தேசிய தலைமைக்கு மதிப்பளியுங்கள்! எங்கள் வேர்கள் ஆழப் பதிந்த தாயகத்தின் பாதுகாப்பிற்குக் குரல்கொடுப்பது எங்கள் சனநாயக உரிமை! அனைவரும் வாருங்கள் - அனைத்துலகையும் திரும்பிப்பார்க்க வைப்போம்! தொடர்புகள்: ராஜன்: 070 594 20 47 புனிதா: 070 759 30 88 வடக்கு-கிழக்கில் இடம்பெறும் மனிதப் படுகொலைகளையும் அவர்களது பாதுகாப்பை சர்வதேச சமூகம் உறுதிப்படுத்தத் தவறியதையும் கண்டித்து புலம்பெயர் தமிழர்கள் சர்வதேச சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டுவரும் உரிமைக்குரல் ஒன்றுகூடல். புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் இந்த உரிமைக்குரல் ஒன்றுகூடலுக்கு அவுஸ்திரேலிய வாழ் தமிழ் மக்களும் தம் ஆதரவை நல்கி, எமது மக்களின் துன்பங்களையும் துயர்களையும் சர்வதேச சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம். மனித உரிமைகளையும் மனித உரிமை மீறல்களையும் பற்றி கண்டனங்களை வெளியிடும் சர்வதேச சமூகம், 4 மாத, 4 வயது குழந்கைள் உட்பட 13 அப்பாவி பொதுமக்கள் ஓரிரவில் அல்லைப்பிட்டியில் கொல்லப்பட்டது தொடர்பாக எந்தவித கண்டனங்களும் தெரிவிக்காமல் மௌனம் சாதிப்பதைக் கண்டித்து அவுஸ்திரேலிய வாழ் தமிழ் மக்களும் தமிழ் அன்பர்களும் சிட்னி, மெல்பேர்ன், கன்பரா, பிறிஸ்பேர்ன் நகரங்களிலிருந்து, பெருந்திரளாக கன்பராவில் அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்திற்கு முன்பாக கூட இருக்கின்றார்கள். அன்புத் தமிழ்ச் சமூகமே, அல்லலுறும் எம்மக்களின் துயர்தீர்க்கவும் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் உங்கள் பங்களிப்பைச் செய்ய வேண்டிய காலம் இது. அனைவரும் பெருந்திரளாக ஒன்றுகூடி, எமது ஒருங்கிணைந்த எதிர்ப்பை சர்வதேச உலகிற்கு எடுத்துக்காட்டவும் சர்வதேசத்தின் கவனத்தை எம்மக்களின் பால் திசை திருப்பவும் ஒன்று கூடுங்கள். காலம்: மே மாதம் 29 ஆம் திகதி (திங்கட்கிழமை) நேரம்: காலை 10 மணி இடம்: கன்பரா பராளுமன்றத்திற்கு முன்பாக சிட்னியில் பிரயாண ஒழுங்குகளுக்கும் மேலதிக விபரங்களுக்கும் ஜெகன் 0410 310 499, 02-9642 1126 ஆகிய இலக்கங்களில் தொடர்பு கொள்ளவும். மெல்பேணில் பிரயாண ஒழுங்குகளுக்கும் மேலதிக விவரங்களுக்கும் டொக்டர் சிவா 03-9803 6239 அல்லது சிவகுமார் 0404 894 591 ஆகியோருடன் தொடர்பு கொள்ளவும்.

23 May, 2006

தடையை நிறுத்த, புலம்பெயர் தமிழரால் முடியும்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கையை தடுத்து நிறுத்துவது புலம் பெயர் தமிழரின் கைகளில் உள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொள்ளவுள்ள விடுதலைப்புலிகளிற்கு எதிரான நடவடிக்கையை தடுத்து நிறுத்துவது புலம் பெயர் தமிழர்களின் கைகளில் உள்ளது என பெயர் குறிப்பிடதா ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஐரோப்பிய ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு சிறிலங்காவின் சரியான நிலைப்பாடு தெரியாது இறமையுள்ள இலங்கை என்ற நாட்டு அரசிற்கு எதிராக தீவிரவாத அமைப்பு ஒன்று போராடுகின்றது என்று தான் பெரும் பாலான ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு தெரியும். தமிழர்களின் உரிமை போராட்டம் பற்றி எதுவும் தெரியாது. எனவே உண்மை நிலையை ஐரோப்பிய மக்களிற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும் எடுத்துச் செல்வது புலம் பெயர் தமிழர்களின் பொறுப்பு அண்மையில் அடக்குமுறையில் இருந்து சேர்பிய போன்ற பல ஐரோப்பிய நாடுகளை விடுவிப்பதற்கு உதவியளித்த ஐரோப்பிய ஒன்றியம் தமிழர்கள் விடயத்தில் தலைகீழாக நடந்து கொள்வது தமிழர்களின் பிரசினையை ஐரோப்பிய நாடுகள் சரியாக புரிந்து கொள்ளமையே என்று தெரிவித்தார். நன்றி>பதிவு.

யாழ்நூலகம் அது தமிழர்களின் ஆயுதம்.

நமது நாட்டின் பக்கம் உலகின் கவனத்தைத் திருப்பி நாம் நமது நாட்டின் சிறப்புப் பற்றியும், ஆற்றல் பற்றியும் பாட்டிலேபாடி சொல்லிலே சொல்விட்டோம். நீர்வளம் உண்டு. நிலவளம் உண்டு. என்றெல்லாம் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குப்பினர் வழி முழுவதும் கயஸ்வாகனம், சினிமாவின் வருகை, எல்லாம் சரி எமது நாட்டின் கல்விநிலை பற்றிக் கேட்டால் நாம் வெட்கித்தலை குனியும் நிலைதான் இருக்கிறது. அண்மையில் யாழ் பல்கலைக்கழக உதவி நூலகரினால் கல்லூரிகளின் அதிபர்கள்,ஆசிரியர்களுக்கான நூலகமும் அதன் பயன்பாடும் பற்றி ஒரு கருத்தமர்வு நடாத்தப்பட்டது. 'கற்றது கைமண்ணளவு' என்று தொடங்கியவர் நாம் கற்றறிந்தது 1 வீதமான அறிவுதான் மீதி 99 வீத அறிவை எங்கே? எப்படி? பெற்றுக்கொள்வது என வினா எழுப்பினார். உண்மையிலேயே 99 வீத அறிவை உலக நூலகங்களிலிருந்தே பெற்றுக்கொள்ளமுடியும் என்பதைத் தெளிவு படுத்தினார். நூலகம் பாடசாலைகளிலும் இருக்கவேண்டும். ஆனால் எமது வன்னிப் பெருநிலப்பரப்பு பாடசாலைகளில் நாம் படிக்கும் காலம் தொட்டு இன்றுவரையும் ஒரு சிறிய அறையில் விளையாட்டு உபகரணங்கள், விஞ்ஞான ஆய்வுகூட உபகரணங்கள், மனையியற் கூட உபகரணங்களுடன் கூடவே நூலக புத்தகங்களும் அடுக்கப்பட்டிருந்தன. அந்த அறைக்குள் இருப்பதற்கு இடமில்லை. அப்படியிருக்கும்போது எப்படி நல்ல நூல்களைத்தேடி எடுத்துக் கற்கமுடியும். அன்று பாட்டி சொன்ன பாண்டவர் கதையும் ஆத்திசூடியும, சிலப்பதிகாரமும், கந்தபுராணமும்தான் எமக்குத் தெரிந்த சிறிய அறிவு. 21ம் நூற்றாண்டு தகவல் தொழில்நுட்ப ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டு பலவேலைகள் துரிதகதியில் நடந்தேறிக் கொண்டிருக்கும் உலகில் நாமும் ஒரு மூலையில் முடங்கி இருப்பது வேதனைக்குரிய விஷயமாகும். இன்று மாறிவரும் உலகில் கல்வித்திட்டங்களும், கல்விக்கொள்கைகளும் பிரிவுபடுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன. நூலகத்தை முன்னுரிமைப்படுத்தி கல்வித்திட்டங்கள் தீட்டப்பட்டிருக்கும் இவ்வேலையில் இலங்கையின் தென்பகுதியில் நூலகங்கள் கணனி மயப்படுத்தப்பட்டிடுக்கொண்டிருக்கும் போது இலங்கையின் வட புறத்தில் குறிப்பாக வன்னியில் 1AB தரப் பாடசாலைகளில் கூட நூலகம் இல்லாத அவல நிலை. எமது பிரதேசத்தில் 1AB பாடசாலையின் நூலகத்திற்காக அரசால் நிதி ஒதுக்கப்பட்டு 1-1/2 ஆண்டுகளாகியும் கட்டடத்திற்கான அத்திவாரம் மட்டும் போட்டநிலையில் காலம் கழிந்து போகிறன. அதுமட்டுமல்லாமல் அரசால் வழங்கப்படும் நூலகத்திற்கான நூல்கள் பெரும்பாலும் இன்றைய கல்விக்கொள்கைக்கு அமைவாக அல்லாமல் அபிதான கோஷம், அபிதான சிந்தாமணி, அபிராமி அந்தாதி என்றும் கடைகளில் விற்பனையாகாத புத்தங்களை மலிவுவிலையில் பெற்று அன்பளிப்பாகச் செய்து கொண்டிருக்கிறது. அரசின் இச்செயலானது குருடர்களைக் கூட்டிவந்து 'வழிகாட்டுவோர் வாழும் இடம்" என்று பெயரிடுவதற்கு ஒப்பானதாகும். ஒழுங்கான நூலகமோ நூல்களோ இல்லாத நிலையில் நூலகங்களைப் பயன்படுத்துவது பற்றிய அறிவு எப்படி வரும்? இத்தனை அவலங்களையும் கண்ணுற்ற கேட்டறிந்த உதவி நூலகர் 'கல்வியே எங்கள் மூலதம் கத்தி வைக்கிறது ஆழும் இனம்' என்பதை தெளிவுபடுத்தினார். அவர் இறுதியாகக் கூறியது தத்தம் பிரதேசங்களையும், பிரதேச வாழ் மக்களையும் வளப்படுத்துவது அப்பிரதேச கல்விமான்களையே சாரும். சிறு துளியாகச் சேர்க்கப்படும் பணம் மூலம் மன வளத்தை ஏற்படுத்தும் உலக அறிவை உருப்படியான காரியத்தைத் தரும் நூலகத்தை உருவாக்கி வளப்படுத்த வேண்டும். அப்படிச் செயல் வடிவம் காட்டுவீர்களேயானால் என்னாலும் உங்களுக்கு உதவி செய்ய முடியும். என பெருந்தன்மையோடு கூறியதை கருத்தமர்வில் கலந்துகொண்ட அதிபர்கள், ஆசிரியர்கள் வரவேற்றனர். உள்ளதை மறைக்காதிருக்க வேண்டுமானால் எமது நாட்டுநிலைகண்டு உலகம் மதிக்கவேண்டுமானால் இந்த சூழ்நிலை மாற்றியாக வேண்டும். அறிவு ஆயுதமாகிவிட்ட நாட்களிலே வாழும் நாம் இனியும் இந்தக் காரியத்தைக் கவனியாதிருப்பது நாம் எமது நாட்டிற்கு மறைமுகமாகச் செய்யும் துரோகமாகும். பல புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ள மட்டுமல்ல, ஏற்கனவே நமது மக்களுக்கு தெரிந்திருக்கும் (மூடநம்பிக்கைகள்) பல விஷயங்களை மறந்து போகச்செய்வதற்கும் பல நூல்கள் தேவை எனவே நூலகம் அவசியம் தேவை. தமிழர்களின் அறிவு வளர்ச்சியும் அறிவுத் தேடலும்தான் சிங்கள அரசின் கண்களுக்குள் யாழ்நூலகம் அன்று தமிழர்களின் வலுமிகு ஆயுதமாகத்தென்பட்டது. இதன் நீட்சியாகவே யாழ் நூலகம் குறிவைக்கப்பட்டு தீ மூட்டி எரிக்கப்பட்டது. 1981 ஜீன் 01 அன்று இனவெறி பிடித்த காமினிதிசாநாயக்காவின் நேரடி கண்காணிப்பில் தீமூட்டப்பட்ட நிகழ்வை இங்கு நினைவுகூறுவது பொருத்தப்பாடுடையதாக இருக்கும். இருபத்து மூன்று ஆண்டுகளின் பின்னான இன்றைய நாட்களில் கூட நூலகத்தின் தேவையும் அதன் அவசியத்தை எமக்கு உணர்த்திய படி இருப்பதை எவரும் மறுதலிக்க முடியாது. நன்றி>சூரியன்.கொம்

21 May, 2006

ஜரோப்பிய தடையை எதிர்த்து, லண்டனில் ஆர்ப்பாட்டம்.

இது கடலா? கடல் அலையென தெரியும் தமிழர் தலையா? 29 ந்திகதி ஜேர்மன் டுஸுல்டோபில் ஆர்ப்பாட்டம். நன்றி>நிதர்சனம்.

தமிழ்தேசியத்தை மீண்டும் ஆதரித்த உள்ளூராட்சி தேர்தல்.

தமிழர் தாயகத்தில் நடத்தப்பட்ட சிறிலங்காவின் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாரிய வெற்றியடைந்துள்ளதன் மூலம் தமிழ்த் தேசியத்தின் மீதான தமிழ் மக்களின் பற்றுதல் மீண்டும் ஒருமுறை சர்வதேச அரங்கத்தின் முன்பாக நிரூபிக்கப்பட்டுள்ளது. தென் தமிழீழத்தில் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் மட்டும் தேர்தல் நடத்தப்பட்டது. அம்பாறையில் மொத்தம் 18 உள்ளுராட்சி சபைகள் உள்ளன. இவற்றில் 12-க்கு தேர்தல் நடத்தப்பட்டன. திருகோணமலையில் 13 உள்ளுராட்சி சபைகளுக்கு 12-க்கு தேர்தல் நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் 45 உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கல்முனை மாநகர சபை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, பொத்துவில், நாவிதன்வெளி, நிந்தாவூர் பிரதேச சபைகளுக்கான தேர்தலுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. திருகோணமலை நகர சபை மற்றும் 5 பிரதேச சபைகளை இரு மாவட்டங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்ரியுள்ளது. அம்பாறை நகர சபை, காரைத்தீவு, திருக்கோவில், ஆலையடி வேம்பு, சம்மாந்துறை உள்ளிட்ட பிரதேச சபைகளுக்கு அம்பாறை மாவட்டத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. திருக்கோவில் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச சபைகளைக் கைப்பற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திருக்கோவில் பிரதேச சபையின் 9 இடங்களையும் புதிதாக உருவாக்கப்பட்ட காரைத்தீவு பிரதேச சபையின் 5 இடங்களில் 4 ஐயும் கைப்பற்றியுள்ளது. திருக்கோவில் பிரதேச சபைத் தேர்தலில் மொத்தம் 98.29 விழுக்காடு வாக்குகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுள்ளது. காரைத்தீவில் 67.05 விழுக்காடு வாக்குகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுள்ளது. வெருகல் பிரதேச சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியின்றி கைப்பற்றியுள்ளது. இது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஈச்சிலம்பற்று அரச அதிபரின் பிரிவுக்குட்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட எல்லையில் உள்ளது. வெருகல் பிரதேச சபையின் தலைவராக சபாபதிப்பிள்ளை சௌந்திரராஜவும் வைரன் நாகேந்திரன் பிரதித் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை மாவட்டத்தில் 2 நகர சபைகள் மற்றும் 10 பிரதேச சபைகளுக்குத் தேர்தல் நடத்தப்பட்டது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு 66 ஆண்டுகால பழமை வாய்ந்த திருகோணமலை நகரசபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. மேலும் 12 இடங்களில் 10 இடங்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. தமிழீழத்தின் தலைநகரமான திருகோணமலை நகர சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 75.06 விழுக்காடு வாக்குகளைப் பெற்று தமிழர் தாயகம்தான் திருகோணமலை என்று நிரூபித்து சிங்களவர்களின் செவுளில் அறைந்துள்ளது.இதர 2 இடங்களை சுயேட்சைக் குழுவினர் வென்றுள்ளனர். திருகோணமலை நகரசபைத் தேர்தலில் போட்டியிட்ட ஜே.வி.பி. 4.10 விழுக்காடு. துணை இராணுவக் குழுவினரான ஈ.பி.டி.பி. 1.19 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 10 உறுப்பினர்களில் சாகுல் ஹமீட் என்ற முஸ்லிம் மற்றும் ஒரு பெண் ஆகியோர் அடங்குவர். எஸ். கௌரிமுத்துநாதன், கே. செல்வராசா, கே. துரைராசா, ஜே. புலேந்திரராஜ், பி. முனியாண்டி, எஸ். அருட்செல்வம், டி. கரிகாலன், ஆர்.என்.வரதன், ஏ.எச். சாகுல் ஹமீட், ஆர். கண்மணி அம்மா ஆகியோர் திருகோணமலை நகர சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராவார். திருகோணமலையில் 1884 ஆம் ஆண்டு இங்கிலாந்து ஆட்சியின் கீழ் உள்ளுராட்சி நிர்வாக முறை அறிமுகப்படுத்தப்பட்டது. 1933 ஆம் ஆண்டு வரை உள்ளுராட்சி சபை என்ற பெயரில் திருகோணமலை நிர்வகிக்கப்பட்டது. 1933 ஆம் ஆண்டு முதல் 1939 ஆம் ஆண்டு வரை உள்ளுராட்சி அபிவிருத்தி சபை என்று அது மாற்றப்பட்டது. 1940 ஆம் ஆண்டு சனவரி 1 முதல் நகரசபையாக அது உயர்த்தப்பட்டது. இருப்பினும் திருகோணமலை நகரசபையை மாநகர சபையாக மாற்ற வேண்டும் என்று அம்மக்கள் தொடர்ந்து எழுப்பி வரும் கோரிக்கை கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது. 1994 ஆம் ஆண்டு திருகோணமலை நகரசபை தேர்தல் நடத்தப்பட்டபோதும் 1999 ஆம் ஆண்டு அது கலைக்கப்பட்டது. அதன் பின்னர் சிறிலங்கா அரசாங்கத்தினாலே நேரடியாக திருமலை நகரசபை நிர்வகிக்கப்பட்டு வந்தது. சிறிலங்கா அரசியல் யாப்பின் 13 ஆவது திருத்ததிற்கமைய மாகாண சபைகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு 1998 ஆம் ஆண்டு வடக்கு - கிழக்கு மாகாண சபையின் தலைநகராக திருகோணமலை இயங்கி வருகிறது. திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச சபையையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பறியுள்ளது. பிரதேச சபையின் 9 இடங்களில் 6 இடங்களைக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. மொத்தம் 60.55 விழுக்காடு வாக்குகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுள்ளது. இங்கு போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 19.87, ஐக்கிய தேசியக் கட்சி 13.68, ஜே.வி.பி. 4.74, துணை இராணுவக் குழுவான ஈ.பி.டி.பி. 1.16 விழுக்காடு வாக்குகளையே பெற்றனர். மூதூர் பிரதேச சபையை சுயேட்சைக் குழுவாகப் போட்டியிட்ட சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எம். தௌபீக் தலைமையிலான குழு கைப்பற்றியது. 11 இடங்களில் 7 இடங்களை சுயேட்சைக் குழுவினரும் 4 இடங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கைப்பற்றியுள்ளது. மூதூரில் சுயேட்சைக் குழுவினர் 58.45 விழுக்காடு வாக்குகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 41.35 விழுக்காடு வாக்குகளையும் ஈ.பி.டி.பி. 0.12 விழுக்காடு வாக்கினையும் பெற்றுள்ளன. கிண்ணியா பிரதேச சபையை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றியுள்ளது. இதில் ஒரு இடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வென்றுள்ளது. குச்சவெளி பிரதேச சபையை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பறிய போதும் 5 இடங்களில் 4 இடங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வென்றுள்ளது. குச்சவெளியில் ஐக்கிய தேசியக் கட்சி 38.73 விழுக்காடு வாக்குகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 37.64 விழுக்காடு வாக்குகளையும் பெற்றுள்ளது. ஈ.பி.டி.பி. 0.57 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளது. சேருவில பிரதேச சபையில் 5 இடங்களை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் ஒரு இடத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 2, ஜே.வி.பி. 1 இடங்களையும் பெற்றுள்ளன. கடந்த முறை நடைபெற்ற சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகள் என்ற முழக்கத்தை முன்வைத்து தேர்தலைச் சந்தித்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. தற்போதும் போல் தமிழர் தாயகம் முழுமைக்கும் பாரிய வெற்றி பெற்று தமிழ்த் தேசியத்தின் மீதான தமிழர்களின் பற்றுதலை- தமிழீழத் தேசியத் தலைமையின் மீதான நம்பிக்கையை தமிழர்கள் வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி>புதினம்.

20 May, 2006

என் இனமே, என் சனமே, உலகத்தமிழினமே.

என் இனமே, என் சனமே என்னை உனக்கு தெரிகிறதா? நான் 21 வருடங்களின் முன் சிங்கள இராவத்தினரால், தீவகப்போக்குவரத்து படகான குமுதினியில் வைத்து, சுட்டும் வெட்டியும் கொல்லப்பட்ட சிறுவர்களில் நானும் ஒருத்தன், இந்தவயதில் நான் செய்திருக்ககூடிய குற்றம் என்ன? ஈழத்தில் தமிழனகப் பிறந்ததுதான் நான் செய்த குற்றமாம். எனக்குகிடைத்தது என்மார்பில் ஈயச்சன்னங்கள். காலவோட்டத்தில் சிங்களவனின் கொலைவெறி தணிந்திருக்குமா? 21 வருடமாகியும் இன்னமும் தணியவில்லை, அவர்கள் கொலைவெறி. அல்லைபிட்டியில் சிங்கள ராணுவத்தினால் கொல்லப்பட்டவர்களில் நாமும் இருவர், நாம் செய்த குற்றம் என்ன? ஈழத்தில் தமிழராகப்பிறந்ததுதான், நாம்செய்த குற்றம். அதற்கு கிடைத்தது எமது பெற்றோருடன் உறங்கி கொண்டிருந்த எமக்கு வாள் வெட்டுக்கள். எமக்கு நாம்தான் பாதுகாப்பு, எமது பாதுகாப்பு விடுதலைப்புலிகளின் கையில், அவர்கள் கட்டுப்பாட்டில் இல்லாத இடத்தில் இருந்தது எமது மற்றயதவறு, இன்று எமது ஊரவர் ஊரையே காலிசெய்து கொண்டு புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் போய்விட்டார்கள். முன்னமே இம்முடிவினை எடுத்திருந்தால் இன்று நாம் உயிருடன் இருந்திருப்போம். எம்போன்ற சிறுவர்களதும், மக்களளினதும் பாதுகாப்பு புலிகளிடம்தான் உண்டு. அதுவே எமது ஊரவரது இன்றய இடம்பெயர்வின் நிதர்சனம். தண்ணீர்விட்டோ வளர்த்தோம் இப்பயிரை சர்வேசா கண்ணீரும் சென்னீரும் விட்டல்லோ காத்தோம். இன்று ஜரோப்பிய ஒன்றியத்தில் கருக்கத்திருவுளமோ? அதை வாய்மூடி பேசாதிருந்து ஆதரிப்போமா? என் இனமே, என்சனமே உன் ஆகக்குறைந்த எதிர்ப்பையாவது தெரிவி. உணர்வுள்ளோர் எதிர்ப்பை தெரிவிக்கவேண்டியது, அனுப்பவேண்டிய தொலைநகல் இலக்கங்கள் (இரண்டுக்கும் அனுப்ப வேண்டும்) Fax 00435011592210 Fax 003222981299. மாதிரிவடிவம், இங்கே உங்களது திகதி முகவரி. Ms.URSULA PLASSNIK, The Foreign Minister of Austria (The Presidency of EU) Austrian Federal Ministry for Foreign Affairs Minoritenplatz 8 A1014 Wien Austria Dear Hon. Minister, Sub: Don't Ban LTTE Tamils are perturbed at the trend of thought circulating currently in the International Media, Reuters in particular, quoting International Diplomats in Colombo as saying Europe would include the LTTE on its list of banned organisations by Friday. This perhaps gives momentum to the statement issued by Donald Camp during his visit to Colombo at the beginning of the week, in which he said the US was recommending such action to the EU. We wish to appeal to the EU to refrain from proscribing the LTTE in Europe. With the Sri Lanka armed forces and the paramilitaries already on a rampage with massacres of Tamil civilians, involuntary disappearances and extrajudicial killings with impunity exceeding 190 in number within six weeks, we are making this urgent appeal to the International Community at large and the EU in particular, to warn the terrorist state of Sri Lanka to refrain from atrocities perpetrated against the Tamil civilians and prevail on President Rajapakse to remove barriers for the resumption of Peace Talks. We should also point out to the EU that any punitive action against the LTTE would encourage the hardline elements in the south clamouring for abrogation of the peace process and recommending resumption of war. We wish to place the following facts, for your kind perusal, and request humbly, to take necessary protective measure, to save guard Tamil civilians, who should not be made to suffer for no fault of theirs The Tamil people, have undergone tremendous sufferings during war time. Today there is no regular war, but undeclared war is going on, The Sri Lankan Army with Tamil paramilitaries, is unceasing widespread killings of Tamil civilians in northeast including children,closer to their camps . Though there are many incidence from the beginning of the year 2006. one recent example, is the killings of nine Tamil civilians including small children in the village of Allapiddy or Mankumban.This is very pathetic and heartwrenching incident, besides nearly thirty people been killed within the last 20 days. There is also a practice of assaulting school going children as well ordinary people brutally when they happen to pass their camps, which is on their way. People fear if this goes our Jaffna would again be an area of mass disappearances .The limit and purpose of these human rights violations are heavy The SLMM and Human Rights Commission are full with reports from civilians, regarding the atrocities of the Sri Lankan army forces, besides complaints from Civil organizations, regarding ceasefire violations of Sri Lankan government forces. But actions are not coming forth. We annex here with photos depicting the incidents, where Sri Lankan Army is involved for your perusal http://web.amnesty.org/library/Index/ENGASA370142006?open&of=ENG2AS http://www.tamilnet.com/img/publish/2006/05/LTTE_report_may_15_06.pdf The present struggle of the Tamils is for their survival. The actions of the LTTE are geared towards preventing the total annihilation of the Tamil nation. The Tamil people, both at home and abroad, is expressing its support to the LTTE in their attempt to help Tamils realise their aspirations. We need not point out to the EU that a proscription at this stage would seriously affect future negotiations for peace. Tamils appeal for wisdom and understanding. Yours sincerely, இங்கே உங்களது கைஒப்பம். Tamils around the world

அல்லைபிட்டி என்ற ஒரு கிராமம் கை விடப்படுகிறது.

வன்னியை நோக்கி ஒட்டுமொத்த கிராமமே இடம்பெயர்கிறது, இதை தடுக்க ரானுவத்தினர் பகீரதபிரயத்தனம் படுகின்றனர். இங்குதான் குழந்தைகள் உட்பட 13 பொதுமக்கள் கடற்படையினரால் வெட்டி கொலைசெய்யப்பட்டார்கள். நன்றி>சங்கதி.

விடுதலைப் புலிகள் இனி சுயாதீனமாக செயற்படுவார்கள்.

சர்வதேச சமூகத்தைப் புறக்கணித்துவிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் தற்போது சுயாதீனமாக செயற்படுகிற நிலை ஏற்பட்டுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத் தீர்மானம் குறித்து அவர் கூறியுள்ளதாவது: தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நடவடிக்கையானது அமைதி முயற்சிகளில் எதிர்விளைவை உருவாக்கும். சர்வதேச சமூகத்தை புறக்கணித்துவிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இப்போது சுயாதீனமாக இயங்க முடியும். எதிர்காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளை சர்வதேச சமூகம் பொறுப்பாக்க முடியாது. இந்தத் தடையால் நிதி திரட்டல் மற்றும் ஆயுதக் கொள்வனவுக்கு தடை ஏதும் இல்லை. வேறு வழிகளில் இத்தடைகள் எதிர்கொள்ளப்படும். அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட போதும் அதனது நடவடிக்கைகள் தொடரவே செய்தன என்றார் அவர். ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறுகையில், தற்போதைய சூழ்நிலையில் சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளை சுதந்திரமாக செயற்பட அனுமதிக்கக் கூடாது. ஆனால் பேச்சுக்களை நடத்துவதற்கான மேலதிக சந்தர்ப்பங்களை பயன்படுத்த வேண்டும் என்றார். தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடை செய்துவிடுவதால் மட்டுமே வடக்கு கிழக்குப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாது என்று முஸ்லிம் காங்கிரசின் பொதுச் செயலாளர் ஹசன் அலி கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது: இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா மற்றும் இந்தியாவில் பல ஆண்டுகளுக்கு முன்னரே விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட போதும் இலங்கையில் புலிகள் செயற்பாடுகளுக்கு எதுவித பாதிப்பும் இல்லை. ஐரோப்பிய ஒன்றியத் தடைக்குப் பின்னரும் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்து தங்களது நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். யுத்த நிறுத்தம் மற்றும் இராணுவப் பிரச்சனைகளை மட்டுமே பேசிக் கொண்டிருப்பதால் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாது. பேச்சு முறைகளில் மாற்றம் வேண்டும் என்றார் அவர். இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் வலியுறுத்தியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத் தீர்மானத்தை ஜே.வி.பி. வரவேற்றுள்ளது. ஐரோபிய ஒன்றிய நாடுகள் அனைத்திலும் தமிழீழ விடுதலைப் புலிகளை முழுமையாகத் தடை செயய் வேண்டும் என்று ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற குழுத் தலைவர் விமல் வீரவன்ச வலியுறுத்தியுள்ளார். நன்றி>புதினம்

உருப்படாத நாடுகளின் பட்டியலில் சிறிலங்கா.

உலகில் உருப்படாத நாடுகளின் பட்டியலில் சிறிலங்கா இணைக்கப்பட்டிருக்கின்றது ரூவண்டா,எதியோப்பிய மற்றும் சில ஆசிய வறிய நாடுகளும் இப்பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளான. 28 நாடுகளை உருப்படாத நாடுகளின் பட்டியலை அமெரிக்கவை தளமாக கொண்டு இயங்கும் அமைதிக்கான நிதி வெளியுறவு கொள்கைகளிற்கான மையம் வெளியிட்டுள்ளது. நன்றி>புதினம்

19 May, 2006

ஈழத்தமிழர் பயங்கரவாதிகளா?

சர்வதேசமும் சிறிலங்காவும் கூறுவது போல் தமிழர்கள் பயங்கரவாதிகளானால் இலங்கைத் தீவே சுடுகாடாகிவிடும் என்று தமிழீழ நிதித்துறைப் பொறுப்பாளர் செ.வ. தமிழேந்தி எச்சரித்துள்ளார். கிளிநொச்சியில் நிதித்துறைச் செயற்பாட்டாளர்களிடையே நேற்று வியாழக்கிழமை நடந்த சமகால அரசியல் கருத்தரங்கில் செ.வ.தமிழேந்தி பேசியதாவது: இலங்கைத் தீவில் எங்கள் இனத்தின் இருப்பை நிலை நிறுத்திக் கொள்வதற்காக- இலங்கைத் தீவில் தமிழர் தங்கள் இருப்பை- தங்கள் தாயகத்தில் தமிழீழத்தில் நிலைப்படுத்திக்கொள்வதற்காக- இலங்கை விடுதலை பெறுவதற்கு முன்பே பல்வேறு அமைதி வழி முயற்சிகள் செய்யப்பட்டுள்ளன. வெள்ளைக்காரரிடமிருந்து இலங்கை விடுதலை பெற வேண்டும் என்பதற்காக- 1944 ஆம் ஆண்டு சோல்பரி ஆணைக் குழு அமைக்கப்பட்டது. அதற்கு முன்னால் தமிழர் தரப்புக் கருத்துகளை அப்போதிருந்த ஜி.ஜி. பொன்னம்பலம் முன்வைத்தார். அவரது கருத்துகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதன் பின்னாலே இலங்கையில் ஒற்றையாட்சியின் கீழ் தமிழர் தங்கள் அனைத்து உரிமைகளோடும் வாழ வேண்டும் என்ற நோக்கத்தோடு ஜி.ஜி.பொன்னம்பபலம் முன்வைத்த கருத்துகள் எவையுமே ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதற்குப் பின்னர் இணைப்பாட்சி திட்டத்தின் கீழ் ஐக்கிய இலங்கையில் கூட்டாட்சித் திட்டத்தின் கீழ் தமிழர் தங்கள் தாயகத்தில் மத, மொழி உரிமையைப் பேணி ஆட்சி புரிவதற்கான ஒரு திட்டத்தை தமிழரசுக் கட்சியின் தந்தை செல்வா முன்வைத்தார். ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சி என மாறி மாறி அமைந்த சிறிலங்கா அரசாங்கங்களோடு அவர் பேசினார். 1957 ஆம் ஆண்டு தந்தை செல்வாவுடன் பண்டா ஒப்பந்தம் செய்தார். அது பண்டா- செல்வா ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகிறது. அந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்படவில்லை. 1965 ஆம் அண்டு டட்லி சேனநாயக்கவுடன் ஒப்பந்தம் செய்தார். அது டட்லி-செல்வா ஒப்பதம் என அழைக்கப்படுகிறது. அதுவுமே செயலற்றதானது. பேச்சுவார்த்தைகள் மற்றும் அறப் போராட்டங்கள் என எல்லாவற்றைய்ம் நடத்தினர். எல்லாமே தோற்றுப் போயின. எவையுமே நிறைவேறவில்லை. 1970-களில் ஆயுதப் போராட்டம் உருவாகி பல்வேறு அமைப்புகள் உருவாகின. எங்கள் விடுதலைப் போராட்டத்தில் இந்திய அரசு தலையிட்டது. இந்திரா காந்தி அம்மையார் காலத்தில் தங்களது நலன்களுக்காக எங்களுக்குப் பயிற்சி அளித்தார்கள். இந்திரா அம்மையார் காலத்தில் கூட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. வட்டமேசை மாநாடு ஒன்று இஙகே நடந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியினர் அதில் கலந்து கொண்டனர். அந்தப் பேச்சுக்களிலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. அதற்குப் பின்னால் ஆயுதம் தாங்கிப் போராடியய அமைப்புகள் மற்றும் விடுதலைக் கூட்டணி உட்பட அன்றைக்கிருந்த அமைப்புகள் அனைத்தும் திம்புவிலே இந்திய அரசின் அனுசரணையோடு நடத்திய பேச்சுக்களும் தோல்வியடைந்தன. அந்தப் பேச்சுக்களில் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். தமிழரின் ஒப்புதலின்றி தன்னிச்சையாகவே முடிவெடுத்து இந்தியா தலையிட்டது. இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தைச் செய்தது. அந்த ஒப்பந்தத்தின்படி வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபை உருவாக்கபட்டது. அதன் அதிகாரங்கள் எவையும் தமிழரது நலன்களைப் பேணுபவையாக இருக்கவில்லை. மாகாண சபையை ஈ.பி.ஆர்.எல்.எப். ஆட்சி செய்து இந்த மண்ணை விட்டு போவதற்கு முன்னால் மாகாண சபையில் ஒரு தீர்மானம் கொண்டுவந்தனர். இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் கீழ் அமைந்த மாகாண சபை தமிழர்களுக்கு எந்த உரிமையும் தராதபடியால் தமிழீழத்தைப் பிரகடனப்படுத்துகிறோம் என்று போலியான ஒரு நாடகத்தை ஆடினார்கள். ஆனால் அவர்கள் சில கருத்துகளை முன்வைத்தார்கள். இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் கீழ் தமிழரது நலன்கள் பேணப்படவில்லை என்ற கருத்தை- இந்தியாவின் கையாட்களாக இருந்த அவர்களே முன்வைத்தனர். ஆக இலங்கை- இந்திய ஒப்பந்தமும் எதனையும் தமிழர்களுக்குப் பெற்றுத்தரவில்லை என்பதற்கு அவர்களுடைய அந்தத் தீர்மானம் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. அதற்குப் பின்னால் பிரேமதாசவுக்கும் எங்களுக்கும் இடையே பேச்சு நடந்தது. அதுவும் தோல்வியில் முடிந்தது. 1994 ஆம் ஆண்டு சந்திரிகா பிரதமராக வந்தபோது போர் நிறுத்தம் செய்யப்பட்டு பேச்சு நடந்தது. அதுவும் தோல்வியில் முடிந்தது. 2002 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எங்கள் தலைவருக்கும் செய்யப்பட்ட உடன்பாடு- போர் நிறுத்தம் இப்போது என்ன நிலையில் இருக்கிறது உங்களுக்குத் தெரியும். அமைதி உடன்படிக்கை ஒன்று அப்படியே இருகிறது. போர் நிறுத்த உடன்படிக்கை அப்படியே இருக்கிறது. அதே நேரத்தில தமிழர் மீதான கொலை நடவடிக்கையும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. சிறிலங்கா அரசாங்கம் தன்னோடு இணைந்து நிற்கிற ஒட்டுக் குழுக்கள் மூலம் விடுதலைப் புலிகளோடு இணைந்து நின்று உழைப்பவர்களையும் தமிழ்த் தேசியத்திற்காக உழைக்கின்றவர்களையும் கொன்று குவித்து வருகின்றனர். ராஜபக்ச ஆட்சிக்கு வந்தபின்பு இந்த நிலைமைகள் மேலும் சீரழியும் நிலைக்கு வந்தன. ஆனாலும் எங்கள் தலைவர் பொறுமை காத்தார். இந்த அரசாங்கத்தோடும் பேசவும் முன்வந்தார். ஜெனீவாவில் நடந்த பேச்சில் உடன்பாட்டுக்கும் வந்தனர். துணைக் குழு அல்லது ஒட்டுக்குழுக்களின் ஆயுதங்களைக் களைவது என்று அவர்கள் உறுதி தந்தனர். அதன்பின்னர் திருமலையில் தமிழ்த் தேசியத்திற்காக உழைத்த- தமிழரது மேம்பாட்டுக்காக உழைத்த- திருமலையில் தமிழர் இருப்பை பேணுவதற்காக அயராது உழைத்த விக்னேஸ்வரன் கொல்லப்பட்டர். அண்மையில் அல்லைப்பிட்டியில் 4 மாத குழந்தை- பால் மணம் மாறாத பச்சிளம் குழந்தை- அன்னைக்கும் தந்தைக்கும் நடுவே சுட்டுக் கொல்லப்பட்டுக் கிடக்கும் காட்சியை பார்த்திருப்பீர்கள். இந்த மண்ணில் வாழும் பச்சிளம்குழந்தைக்கும் கூட பாதுகாப்பு இல்லை. நாளைக்கு உங்கள் குழந்தைக்கும் அதே நிலை வரும். அந்த நிலை வராது என்பதற்கு உறுதி எதுவும் இல்லை. ஆகவே வலிமை உடைய- வயது வேறுபாடின்றி- அனைத்துத் தமிழர்களும் ஆயுதப் பயிற்சி; பெறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அப்போதுதான் தமிழர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். சிங்கள இரணுவம் ஊடுருவித் தாக்குதல் நடத்துகிறது. அதனோடு ஒட்டுப்படைகளும் வருகின்றனர். கொல்லப்பட்டவர்கள் விடுதலைப் புலிகள் மட்டுமல்ல. பொதுமக்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆகையால் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான நேரமிது. தமிழினத்தை இந்த மண்ணில் பூண்டோடு அழித்துவிட வேண்டும் என்பதற்கான நடவடிக்கைகளை சிங்களவர்கள் நீண்டகாலமாகவே செய்து வருகின்றனர். யாழில் சிங்கள இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்ற "இந்த நாட்டில் சிங்களவர்தான் வாழமுடியும்- தமிழரும் சிங்களவரும் வாழ முடியாது" கூறிவருகின்றனர். இது சிங்கள இராணுவத்தின் கருத்து அல்ல- சிங்களவர் மற்றும் சிங்கள அரசின் கருத்து. வரலாற்றில் துட்டகைமுனுவுக்கும் எல்லாளனுக்கும் நடந்த போரில் எல்லாளன் கபடமாகக் கொல்லப்பட்டான். நேருக்கு நேர் நின்று போரில் கொல்லப்படவில்லை. போர் அறத்துக்கு மாறாக அவனது யானையைத் தாக்கி அவன் விழுகின்றபோது கொன்றார்கள். அறத்தின்பால் நேருக்கு நின்று வீழ்த்தவில்லை. வஞ்சகமாக எல்லாளனைக் கொலை செய்தார்கள். அந்த எல்லாளன் இந்திய ஆக்கிரமிப்பாளன் என்று சொல்லுகிறார்கள்- எங்களையும் இந்திய ஆக்கிரமிப்பாளர்கள் என்றுதான் சிங்களவர் சொல்லுகிறார்கள்;. ஆனால் தமிழர் இந்த மண்ணின் சொந்தக்காரர்கள். இலங்கைத் தீவு தமிழர்களுக்கே சொந்தமானது. சிங்களவர்கதான் இந்த நாட்டின ஆக்கிரமிப்பாளர்கள்- இந்த நாட்டினது வந்தேறு குடிகள். தமிழர் தங்களது சமகால வரலாற்றை சான்றுகளோடு எழுதி வைக்கவில்லை என்பது மிகப் பெரும் குறை. நாம் விட்ட தவறு அது. ஆனால் கிடைக்கக் கூடிய தொல்லியல் சான்றுகள் அனைத்தும் தமிழ்ரே இந்த மண்ணின் உரிமையாளர்க்ள் என்று தெட்டத் தெளிவாக சொல்லுகின்றன. வந்தேறி சிங்களவர்கள் தாங்கள் வந்தேறியவர்கள் என்பதால் முந்திக் கொண்டு எம்மை வந்தேறு குடிகள் என்கிறார்கள். அப்படியானால் இந்த மண்ணிலே தமிழர்கள் எப்படி சிறுபான்மையினராக உள்ளனர்? என்ற கேள்வி எழலாம். கடந்த கால வரலாற்றை- குடிசன மதிப்பீட்டை எடுத்துப் பார்த்தால் தமிழர்களைவிட சிங்களவர் பெருக்க வீதம் அதிகமாக இருந்துள்ளது. 1881 ஆம் அண்டு குடிசன மதிபபீட்டையும் 1981 ஆம் ஆண்டு கணக்கையும் ஆய்வு செய்து பார்த்தால் உண்மை புரியும். நூறு ஆண்டுகளில் ஏற்பட்ட குடிசன வளர்ச்சியின் படி இந்த நாட்டிலே 492 விழுக்காடு சிங்களவர்கள் பெருகியிருக்கிறார்கள். 462 விழுக்காடு முசுலிம்கள் பெருகியிருக்கிறார்கள். ஆனால் தமிழர்களோ............ எங்களது இனம் சிறுபான்மைப்பட்டமைக்கு இதுவும் காரணம். சிங்களம் செய்த சதிகளால் இந்த மண்ணில் சிறுபான்மையினராக தமிழர்களாக்கப்பட்டு விட்டனர். துட்டகைமுனுவுக்கும் எல்லாளனுக்கும் போர் நடந்த பின்னால் லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதாக அவர்கள் வரலாற்றில் குறிக்கப்பட்டுள்ளது. அன்றைக்கு அது இரண்டு இலட்சமெனில் இன்றைக்கு அது பல லட்சமாக இருந்திருக்கும். இப்படித் தமிழரக்ள் அழிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழருக்கும் சிங்களவருக்கும் இடையே உள்ள இந்த முரண்பாடு இன்று நேற்று ஏற்பட்டதல்ல. ஆயிரமாயிரமாண்டு காலமாக இருந்து வரும் முரண். அவர்கள் எம்மை அழித்துவிடவேண்டும் என்று கருதுகிறார்கள். ஆனால் நாம் அவர்களை அழிக்கவேண்டும் என்று கருதவில்லை. அவர்களும் நாங்களும் இந்த மண்ணில் வாழ வேண்டும் என்று தமிழர் கருதுகின்றனர். அவர்களோ சிங்களவர் மட்டுமே வாழ வேண்டும் என்கின்றனர். அவர்கள் சொல்வது போல் வந்தேறு குடிகள் வெளியேற வேண்டுமேயானால் முதலில் சிங்களவர்கள்தான் வெளியேற வேண்டும். நாங்கள் ஒன்றும் இந்த மண்ணின் வந்தேறிகள் அல்ல. இந்த உலகில் குமரிக் கண்டனம் என்று ஒன்று இருந்தது. அதனது வடக்கெல்லை இமயம். மேற்கு எல்லை ஆப்பிரிக்கா. தெற்கெல்லை அண்டார்ட்டிக். தென்கிழக்கு எல்லை அவுத்திரேலியா. கிழக்கு எல்லை- கிழக்கிந்திய தீவுகள். இதற்கிடையே ஒரு பெருந்தேசம் இருந்தது. கடல்கோளிலே இந்த தேசம் அழிந்து போயிற்று. இதில் எஞ்சியிருப்பது இந்தியாவும் இலங்கையும் ஆப்பிரிக்காவின் மடகாஸ்கர் தீவும்தான். இந்த மண்ணிலே தோன்றிய மக்கள் நாங்கள். எங்களுக்கே உரியது இந்த மண். வந்தேறுகுடிகள் வெளியேற வேண்டுமானால் சிங்களவர்கள் வெளியேற வேண்டும். உலகின் பல பகுதிகளிலும் வந்தேறிகுடிகள்தான் வெளியேற வேண்டும். இந்தியா- தமிழருடைய நாடு. 3,500 ஆண்டுகளுக்கு முன்பாக ஆரியர்கள் குடியேறினார்கள். அங்கிருந்து அவர்கள் வெளியேற வேண்டும். அமெரிக்கா செவ்விந்தியர் நாடு. அங்கிருந்து வெள்ளைக்காரர்கள் வெளியேறிச் செல்ல வெண்டும். அவுஸ்திரேலியா அபோர்ஜினியர்களின் நாடு. அங்கிருந்து வெள்ளைக்காரர்கள் வெளியேற வேண்டும். இப்படியெல்லாம் கூறினால் நடக்கப்போவதும் இல்லை- வாய்ப்பும் இல்லை- அந்த அந்த மண்ணில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஒன்றிணைந்து வாழ்ந்தவர்களை உள்ளே போ வெளியே வா என்று சொல்வது மூடச் செயல். சிங்களவர்களுக்கு இது புரியாது. அவர்களுடைய இனவாதம் எல்லாவற்றையும் மறைத்துவிடுகிறது. இந்த மண்ணுக்குரிய நாங்கள் எங்கேயும் போக வேண்டியதில்லை. எங்கள் மண்ணில எங்கள் இருப்பைக் காப்பாற்ற நாம் போராட வேண்டும். இலங்கை விடுதலை அடைகிற போது நீர்கொழும்பில் 53 தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் இருந்தன. இன்றைக்கு ஒரே ஒரு பள்ளிக்கூடம் மட்டுமே இருக்கிறது. மற்ற பள்ளிக்கூடங்கள் எல்லாம் சிங்களப் பள்ளிக்கூடங்களாக மாற்றப்பட்டுவிட்டன. தமிழ் மூலம் கற்பிக்கக் கூடிய ஆசிரியர்களை அந்தப் பள்ளிகளுக்கு நியமிக்காமல் நிறுத்தி சிங்கள ஆசிரியர்களை அமர்த்தினார்கள். சிங்கள மொழியிலே கல்வி கற்பித்து படிப்படியாக அங்கே எங்கள் இனமே இல்லாமல் முற்றாக அழித்தொழித்திருக்கிறார்கள். நீர்கொழும்பில் இன்றைக்கு சிங்களவர் என்று சொல்லிக் கொண்டு வாழ்கிறவர்கள் யார் என்றால் இலங்கை விடுதலையடைவதற்கு முன்பு தமிழர்களாக இருந்தவர்கள்தான். நீர்கொழும்பிலும் மட்டுமல்ல. சிலாபத்திலும் தெற்குப் பகுதியிலும் வாழ்ந்த தமிழர்களும் இவ்வாறு மாற்றப்பட்டவர்களே. ஒரு இனத்தினது பயிற்று மொழி அழிந்தால் அந்த இனமே அழிந்து போகும். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து பீஜி, மொரீசியஸ், தென்னாப்பிரிக்கா என்று பல்வேறு நாடுகளுக்கும் தமிழர்கள் தொழிலாளர்களாகக் கொண்டு செல்லப்பட்டனர். இன்றைக்கு அங்கே வாழ்கிற அவர்கள் யாருக்குமே தமிழ் தெரியாது. அவர்கள் இனமாற்றம் அடைந்து விட்டனர். ஏன் உங்களுடைய உறவினர்கள் இன்றைக்கு வெளிநாடுகளில் வாழ்கிறார்களே- அவர்களில் எத்தனை பேருக்கு தமிழ் தெரியும்.? இங்கிருந்து போனவர்கள் மட்டும் தமிழ் பேசுகின்றனர். 4 வயதில் போனவர்கள் கூட தமிழை மறந்துவிட்டனர். ஏனென்றால் தமிழைப் படிக்கக் கூடிய வாய்ப்பு இல்லை. மொழி என்பது ஒரு இனத்தினது அடையாளம்- உயிர். அது இல்லாது போனால் அந்த இனம் தனது அடையாளத்தை இழந்துவிடும். கனடவில் 3.5 இலட்சம் தமிழர்கள் வாழ்கின்றனர். ஆனால் மூவாயிரம் பிள்ளைகள்தான் தமிழைப் படிக்கிறார்கள் அப்படியானால் அங்கே உள்ள நிலைமையை புரிந்து கொள்ள வேண்டும். தங்கள் இனத்தின் அடையாளத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று கருதுகிற பெற்றோர், தங்கள் பிள்ளைகள் தமிழில் கற்க வேண்டு என்கிற பெற்றோர் பிள்ளைகளுக்கு வீட்டிலே தமிழைச் சொல்லிக்கொடுக்கிறார்கள். அதை பொருட்படுத்தாதவர்கள் விட்டுவிட்டார்கள். பெற்றோருக்கு அந்த நாட்டு மொழி தெரியாததால் பெற்றாருடன் பிள்ளைகள் தமிழில் கதைக்க வேண்டியிருக்கிறது. எழுதவோ படிக்கவோ அவர்களுக்குத் தெரியாத நிலையும் உள்ளது. இந்த நிலைமை தொடருமானால் வெளிநாட்டுக்குப் போன தமிழர்கள் இனமாற்ம் அடைந்து விடுவார்கள். தமிழீழத்தில் எங்கள் எண்ணிக்கையில் அரைவாசிப் பேர் வெளியே சென்றுவிட்டனர். அவர்களில் மிகக்குறந்த எண்ணிக்கையே இங்கே திரும்பி வருவர். தமிழ் மறந்து போன தமிழ்ச் சிறார் இங்கே வரப்போவதில்லலை. அடுத்த தலைமுறை வருமா என்பதும் உறுதியில்லை. இந்த மண் விரைந்து விடுதலையடைந்தால் அவர்கள் வரலாம். இந்த விடுதலைப் போராட்டம் தொடர்ந்தும் 30 ஆண்டுகள் இழுபட்டால் வாய்ப்பு மிக மிகக் குறைவு. மொழி அழியவும் அழிக்கப்படவும் கூடியது. அதைத்தான் சிங்கள அரசாங்கம் இங்கே செய்து கொண்டிருக்கிறது. நீர்கொழும்பிலும் சிலாபத்திலும் செய்ததை மலையகத்திலும் செய்ய முயற்சிக்கின்றனர். மலையகத்தில தமிழ் ஆசிரியர்களை நியமிப்பதை நிறுத்திவிட்டு சிங்கள ஆசிரியர்களை நியமிக்கிறார்கள். அச்சத்தின் காரணமாக மலையகத்தில் சிலர் தங்களது பெயரை சிங்களப் பெயராக மாற்றிக் கொண்டுள்ளனர். அம்பாறை மாவட்டத்திலும் கூட தமிழர்கள் முஸ்லிம்களாகவும் சிங்களவர்களாவும் தங்களை மாற்றிக்கொள்ள முனைந்திருப்பதை அறிந்தபோது மிகவும் துயரப்பட்டேன். இனம் மாற்ற நடவடிக்கைக்கு புறம்பாக வன்முறைகள் மூலமாக இந்த மண்னில் காலத்துக்கு காலம் தமிழர்கள் எப்படியெல்லாம் கொல்லப்படிருக்கிறார்கள் என்பது உங்கள் எல்லோருக்கு ;தெரியும். 1958, 77, 81, 83 ஆண்டுகளில் சிங்கள அரசுகளின் துணையோடு சிங்கள இனவாதிகள் கட்டவிழ்த்துவிட்ட வன்முறைகளில் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டு தமிழினம் அழிக்கப்பட்டிருக்கிறது. ஒரு இனத்தைக் கொல்வதினால் மட்டும் அந்த இனம் அழிக்கப்படுவதில்லை. பொருளாதாரம்- கல்வி- நிலம் பறிக்கப்படுவதூடாகவும் அழிக்கப்படுகிறது. 1891 இல் தென் தமிழீழத்தில் 5,947 சிங்களவர்கள் இருந்தார்கள். 75 ஆயிரம் தமிழர்கள் இருந்தனர். 43 ஆயிரம் முஸ்லிம்கள் இருந்தனர். 100 ஆண்டுகளுக்குப் பின்னைய புள்ளிவிவரப்படி 1981 இல் தென் தமிழீழத்தில் 4 இலட்சத்து 11 ஆயிரம் தமிழர்கள், 2 இலட்சத்து 50 ஆயிரம் சிங்களவர்கள்- 3 இலட்சத்து 19 ஆயிரம் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். சிங்களவர்களையும் முஸ்லிம்களையும் சேர்த்தால் தமிழர்கள் சிறுபான்மையாகி விடுவர். 12 தமிழருக்கு ஒரு சிங்களவர் என்ற நிலை அன்று இருந்தது. இன்றைக்கு ஒரு சிங்களவருக்கு 2 தமிழர் கூட இல்லை என்ற நிலைமை உருவாகியுள்ளது. இன்றைக்கு வன்முறைகள் எங்கள் மண்ணிலேயே நடக்கிறது. சிங்கள அரசங்கத்தின் ஒப்புதலோடு இந்தப் படுகொலை நடக்கிறது. இந்தப் படுகொலை வரிசையின் கடைசிதான் அல்லைப்பிட்டி படுகொலை. எங்கள் இனத்தின் விடுதலைக்குப் போராடுவது பயங்கரவாதம் என்று சிறிலங்கா சொல்கிறது. இலங்கையிலிருந்து நன்மை பெற வேண்டிய சில நாடுகள் அதற்கு சங்கு ஊதுகின்றன. அமெரிக்காவிலிருந்து ஒரு அமைச்சர் வந்தாராம். உலகத்திலேயெ இருக்கிற மிகப்பெரிய பயங்கரவாத இயக்கம் விடுதலைப் புலிகள் என்று சொல்லியிருக்கிறார். நாங்கள் ப்யங்கரவாதிகள் அல்லர்- எங்கள் இன விடுதலைக்காக போராடுகிறோம். சிங்களவர்களும் நாங்களும் இணைந்து வாழ வேண்டும் என்பதற்காக போராடிக் கொண்டிருக்கிறோம். சிங்களவர்களுக்கும் உலகத்துக்கும் நாங்கள் ஒன்றைச் சொல்ல கடமைப்பட்டுள்ளோம். தமிழரை இந்த மண்ணிலிருந்து முற்றாக அழிக்க வேண்டும் என்பதற்கான நடவடிக்கையை சிங்களவர்கள் மேலும் எடுப்பார்களேயானால்- நங்கள் பயங்கரவாதிகளாக மாறினால் இலங்கைத் தீவு அழிந்துவிடும் என்பதை சிங்களவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். கண்டிப்பாக இலங்கைத் தீவு அழியும். தமிழர் இந்த மண்ணில் வாழ முடியாது போனால்- தமிழர்கள் பயங்கரவாதிகளாக மாறினால் இலங்கைத் தீவு அழிந்துபோகும். சிறிலங்காவும் அதற்கு வழிபாடு ந்டத்தும் நாடுகளும் இதைப் புரிந்துகொள்ள வேண்டும். எங்களுக்கு வாழ்வில்லை என்கிற போது கைகட்டி வாய்பொத்தி பார்த்திருக்க வேண்டியதில்லை. எல்லாவற்றையும் அழித்துவிட்டு நாங்களும் அழிந்துவிடலாம் என்ற முடிவுக்கு வரலாம். அப்படியான முடிவை நாங்கள் எடுத்தால் இலங்கைத் தீவு சுடுகாடாக மாறாகும். சிங்களப் பகுதிகளளைத் தாக்குவது ஒன்றும் விடுதலைப் புலிகளுக்கு சிக்கலான விடயம் அல்ல. எங்கள் தேசியத் தலைவரை ஒரு பயங்கரவாதி என்கிறார்கள்- என்ன காரணத்துக்காக சொல்கிறார்கள்? பிரபாகரன் செய்த குற்றம் என்ன? - தமிழர் இந்த மண்ணில் அழிந்துபோகாமல் இருப்பதற்காக பிரபாகரன் போராடுவதுதான் அவர் செய்த குற்றம - தமிழர் தாய்மண்ணை மீட்டெடுக்க போராடுவதுதான் பிரபாகரன் செய்கிற குற்றம அது குற்றமாகுமேயானால் அந்தக் குற்றத்தை அந்தப் பயங்கரவாதச் செயலைக கோடி முறையும எல்லாத் தமிழர்களும் செய்ய அணியமாக வேண்டும். அதைத்தான் இந்த இலங்கை விரும்புமேயானால் வேறுவழியில்லை. எப்படியாவது விடுதலைப் புலிகளின் தலைவரை அழித்துவிடலாம் என்று சிங்கள அரசு முயற்சித்து வருகிறது. அதற்குத்தான் ஊடுருவல் நடத்துக்கிறார்கள். உங்கள் தலைவர் மீது அளப்பரிய பற்று வைத்திருக்கிறவர்கள் நீங்கள்- உயிரைவிட நீங்கள் அவரை மதிக்கிறீர்கள்- அவர் இல்லையெனில் கண்டிப்பாகத் தமிழினம் இல்லை. உலகம் முழுவதும் 8 கோடித் தமிழர்கள் வாழ்வதாகச் சொல்லுகிறார்கள். இந்தியாவிலும் 6 கோடித் தமிழர்கள் அடிமைகளாக வாழ்கின்றனர். தங்களைத் தமிழர் என்று சொல்ல முடியாத நிலை உள்ளது. எந்தப் பதிவிலும் இந்தியர் என்றுதான் பதிய வேண்டும். தமிழர் என்ற ஒரு இனம் தன் இன அடையாளத்தை இருப்பை வெளிப்படுத்டும் ஒரே இடம் இந்த மண். அதனால்தான் எங்கள் தலைவரை இல்லாது ஒழித்துவிட்டால் உலகில் தமிழினம் என்பதையே இல்லாது செய்துவிடலாம் என்று கருதுகிறார்கள். தமிழர்கள் இங்கே விடுதலையடைந்து விட்டால் தமிழ்நாட்டிலும் அந்த சிக்கல் உருவாகுமோ என்று இந்தியா அஞ்சுகிறது. இந்திய நடுவன் அரசு அஞ்சுவது போல் எதுவும் நடக்காது. எங்கள் தலைவரது வாழ்வுதான் தமிழரது வாழ்வு. எங்களிடம் மானம் ஒன்றுதான் உள்ளது. அந்த மானத்தை விட்டு விடப் போகிறோமா என்று முடிவு செய்ய வேண்டும். தமிழர் இந்த உலகத்துக்கு நாகரீகம்- பண்பாட்டை கறுத்தந்தவர்கள். நாம் பெருமைப்பட வேண்டும். வீரர்கள் நிறைந்த இனம் என்று இன்று பொருள்படும் படியான நிலைமையைத் தலைவர் உயர்த்தியிருக்கிறார். தமிழ் மொழி உலகின் முதலாவது மொழி. தமிழர் தான் உலகில் முதலில் தோன்றியவர்கள் என்று ரசியாவின் ஆய்வாளர் சொல்லியிருக்கிறார். இந்துமாக்கடல் மர்மங்கள் என்ற பெயரில் அவரது நூல் தமிழில் வெளி வந்துள்ளது. நாங்கள் தொன்மை மிக்க நாகரிகத்தையும் உலகத்துக்கு பண்பாட்டையும் கொடுத்தவர்கள். உலகில் தமிழ், சமஸ்கிருதம், கீப்ரூ, லத்தீன், கிரீக், சீனம் ஆகியவை மூத்த மொழிகளாக சொல்லப்படுகின்றன. தற்போது லத்தீனும் சமஸ்கிருதமும் செத்த மொழிகள் என்று சொல்லப்படுகின்றன. இந்த மொழிகளில் ஒன்று கீப்ரு. யேசுநாதரின் மொழி எபிரேயம். அது அழிந்த மொழி. உலகம் முழுவதும் ஒன்றரை கோடி யூதர்களே இருக்கின்றனர். ஜெர்மானியர்கள் அந்த யூதர்களை படாதபாடுபடுத்தினர். யூதர்களைக் கொண்டு புதைகுழிகளைத் தோண்டி அதற்குள் யூதர்களையே புதைத்தார்கள். இத்தனை கொடுமைகளுக்கும் இடையேய தங்களது தேசத்தை அவர்கள் உருவாக்கினார்கள். இஸ்ரேல் உருவாக்கப்ட்டது. இஸ்ரேலை எதுவும் செய்ய முடியாத படி இன்று வளர்ந்துள்ளனர். மொத்தம் இஸ்ரேலிய மக்கள் தொகை 50 இலட்சம் பேர்தான். உலகில் பல்வேறு நாடுகளில் 100 கோடி முஸ்லிம்கள் இருக்கலாம். இத்தனை கோடி முஸ்லிம்கள் இருந்தும் யூதர்களை எதுவும் செய்ய முடியவில்லை. ஏனெனில் அவர்களது இனப்பற்று காரணம். தங்களது தேசத்துக்காக எதையும் செய்யத் தயார் என்று அவர்கள் இருப்பதால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. யூதர்கள் ஒன்றரை கோடி பேரும் யூதர் என்ற எண்ணத்தோடு யூத தேசியம்- இஸ்ரேல் என்ற எண்ணத்தோடு உள்ளனர். அமெரிக்கா யூதர்களைப் பக்க பலமாக பாதுகாத்து வருகிறது. அமெரிக்காவில் நியூயோர்க் நகரில் மட்டும் 20 இலட்சம் யூதர்கள் வாழ்கின்றனர். அமெரிக்காவினது அரசியலை தீர்மானிக்கிற- பொருளாதாரத்தை தீர்மானிக்கிற மிகப் பெரும் சக்தியாக யூதர்கள் உள்ளனர். அவர்களை விஞ்சி அமெரிக்காவால் எதுவும் செய்ய முடியாது. எந்த அமெரிக்கக் குடியரசுத் தலைவரும் யூதர்களுக்கு மாறாக எதுவும் செய்ய முடியாது. அப்படிச் செய்தால் அடுத்த முறை ஆட்சிக்கு வரமுடியாது. - யூதர்கள் தங்கள் தேசத்தை நேசிக்கிறார்கள - இஸ்ரேலுக்காக எல்லாவற்றையும் நேசிக்கிறார்கள - தங்கள் தேசத்தின் நினைவுகளோடு- தேசத்தைக் கட்டியெழுப்பும் நினைவோடு உறங்குகிறார்கள்- வாழ்கிறார்கள். வெளிநாடுகளில் உள்ள ஒரு தொகை தமிழர்கள் தங்கள் தேசத்தை நேசிக்கிறவர்களாக இருகின்றனர். அதற்காக உழைத்துக் கொண்டிருக்கின்றனர். வன்னியை இரண்டாகப் பிரித்து தொடங்கப்பட்ட ஜெயசிக்குறு நடவடிக்கையை முறியடித்த வெற்றிக்குப் பின்னால் வெளிநாட்டுத் தமிழர்கள் இருக்கின்றனர் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. அந்தத் தமிழர்கள் அளித்த நிதியிலிருந்து வாங்கப்பட்ட போர்க்கருவிகள்தான் அந்த வெற்றிக்குத் துணையாக இருந்தன. ஆனையிறவு தளம் 350 ஆண்டுகளாக மாற்றாரின் கையில் இருந்தது. யாழ்ப்பாணத்தைப் போர்த்துகேயர் கைப்பற்றியபோது வன்னி தனித்து இயங்கியது. வன்னியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு யாரும் ஊடுருவிவிடக் கூடாது என்பதற்காக ஆனையிறவில் தடை முகாம் அமைத்தனர். அதன் பின்னர் அந்த முகாம் ஒல்லாந்தரால் பேணப்பட்டது. பின்னர் யாழை பிரிட்டிசார் கைப்பற்றினர். பண்டாரவன்னியனையும் தோற்கடித்து வன்னியைக் கைப்பற்றினர். அதற்குப் பின்னர் சிங்கள அரசாங்கத்தின் கைக்கு ஆனையிறவு சென்றது. ஆனையிறவை நாங்கள் மீட்டெடுத்ததற்கு பின்னால் அந்த மாபெரும் வரலாற்றுக்குப் பின்னால் தேசப்பற்றுள்ள- வெளிநாட்டுத் தமிழர்கள்தான் உள்ளனர் என்பதை மறுக்கிறவர் யாரும் இல்லை. ஆனால் யூதர்களைப்போல் நாம் முழுவதுமாக இல்லை. அதுதான் நாம் முன்னேற தடை. நாம் ஒன்றுபடவேண்டிய சூழல் வந்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் தமிழேந்தி. நன்றி>புதினம்

15 May, 2006

சிங்களவனின் வெறியாட்டம் இன்னமும் தீரவில்லை.

இது 21 ஆண்டுகளின் முன் தீவக மக்கள் பயனிக்கும், குமுதினி படகில் பயனித்த மக்களை சிங்களவன் கத்திகளாலும், கோடரிகளாலும், வாள்களினாலும் வெட்டிப்போட்ட காட்சி.

இது 21 ஆண்டுகளின் பின்னரும் கத்திகளாலும் , கோடரிகளாலும், வாள்களினாலும் தூக்கத்தில் இருந்த தீவக மக்களை சிங்களவன் வெட்டிப்போட்ட காட்சி. ஆண்டுகள் 21 ஆகியும் அவன் வெறி இன்னமும் தீரவில்லை, இவர்களோடு எப்படி தமிழன் ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழ்வது? குழந்தைகள் கூட அவ்ர் கொலை வெறிக்கு தப்புவதில்லை. குழந்தைகள் உரிமைபற்றி வானளவுகதைக்கும் வையகம் இதற்கு என்ன கூறப்போகிறது? சிலவேளை இவர்களும் குட்டிப்புலிகளோ?

படங்கள் நன்றி> எரிமலை, பதிவு.

குமுதினி படுகொலை, ஆண்டுகள் 21.

குமுதினியில் பயணம் செய்து கொண்டிருந்த மக்கள் ஸ்ரீலங்கா படையினரால் அழிக்கப்பட்டது நடந்தேறி இருதொரு ஆண்டுகளாகி விட்டன. 'குமுதினி" நெடுந்தீவுக்கு பயணிகளை ஏற்றிச் செல்லுகின்ற படகு. 1960களிலிருந்து இன்று வரை நெடுந்;தீவு மக்களை வெளியுலகத்தொடர்பில் வைத்திருக்க உதவிய படகு. குமுதினி அந்த மக்களின் உயிராகிவிட்டது. அது ஒரு நினைவுச்சின்னம். ஒரு போர் நினைவுச்சின்னம். அந்த மக்களின் வாழ்வின் நினைவுச்சின்னம். அந்த சடப்பொருள் இன்று வரலாறாகி விட்டது. இப்போது நயினாதீவுக்கு செல்வதற்காக, குறிகாட்டுவான் இறங்குதுறைக்குள் ஸ்ரீலங்கா கடற்படையினர் மக்களை மூடியிருந்த கதவைத்திறந்து அனுமதிக்கின்றனர். அப்பொழுதுதான் என் வரலாற்றில் முதல் தடவையாக 'குமுதினி" என் கண்களில்படுகின்றது. உண்மையில் குமுதினியில் மக்கள் உயிர்கள் ஸ்ரீலங்கா கடற்படையினரால் காவு கொள்ளப்பட்ட வேளையில் குமுதினியின் தோற்றம் எனக்குத் தெரியாவிட்டாலும், அந்த முதல் கடற் படுகொலையால் குமுதினி எல்லா மக்களின் மனங்களிலும் நிலைத்துவிட்டதைப் போலவே. தோன்றாப்பொருளாக நிலைத்துவிட்ட குமுதினியின் நேர்த்தோற்றம் எனக்குள்ளும் நிலைத்துவிட்டது என்பதை என்னால் உணரமுடிந்தது. அவ்வேளை அதன் தோற்றம் ஒரு சடப்பொருளாய் வெறும் படகாய் இருக்கவில்லை. கொல்லப்பட்ட எமது மக்களின் உயிராகவும் தெரிந்தது. குறிகாட்டுவான் இறங்குதுறையின் முழு நீளத்ததையும் தாண்டி அறுபது அடி நீளத்தில் இறங்குதுறையில் குமுதினி கிடந்தது. குமுதினியின் அரசியல் வரலாற்றின் முதற்பகுதி. குமுதினி 1960களில் இலங்கை பொது வேலைத்திணக்களத்தினால்நெடுந்தீவுக்கு போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. இது திருகோணமலை 'டொக்யாட்டில்" கட்டப்பட்டு ஜேர்மனியின் புக் எந்திரம் பொருத்தப்பட்ட ஒரு குட்டிக்கப்பலின் பரிமாணத்தில் மரக்கலமாக குமுதினி உருவாகியிருந்தது. தீவகத்தின் ஆழக்கடலில் தனித்துநின்ற நெடுந்தீவு மக்களின் வெளியுலகத்ததரிசிப்புக்கான பாதையை திறந்துவைத்தது. குமுதினியுடன் காலத்துக்கு காலம் பல படகுகள் நெடுந்தீவுக்கான போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டாலும் குமுதினிதான் தன் வாழ்வை உழைப்பை 40 ஆண்டுகளாக தொடர்ந்துவந்தது. 1980களில் போர்முனைப்புற்ற காலத்தில் போராட்டப்பணிகளையும் ஒரு வகையில் அது ஆற்றியது.அ தனால் குமுதினிமீது நயினாதீவு ஸ்ரீலங்கா கடற்படையினர் கண்வைக்கத்தொடங்கினர்.நடுக்கடலில் வைத்து குமுதினி அடிக்கடி கடற்படையினரால் சோதனைக்குள்ளாக்கப்படத்தொடங்கியது. கடலில் குமுதினிக்கே இந்த விசேடகவனிப்பு. இதற்கு அடிப்படை காரணம் நெடுந்தீவு இந்திய கடல் எல்லைக்கு மிக அருகில் இருப்பதாகும். அத்தடன் நெடுந்தீவின் ஒரு கிராமசேவையாளர் பிரிவின் கீழ் உள்ள இந்திய கடற்கரைக்கு அண்மையாக உள்ள கச்சதீவும் ஒரு காரணமாகும். நடுக்கடல் சோதனையைத் தவிர நயினாதீவில் உள்ள ஸ்ரீலங்கா கடற்படைத்தளத்திலும் அதிக சோதனைக்கு குமுதினி உள்ளாக்கப்பட்டு வந்தது. அதில் செல்லும் மக்கள் விசாரிக்கப்படுவது, தாக்கப்படுவது வழமையானதாகியும் விட்டது. அன்றும் அப்படித்தான்பொழுது விடிந்தது. நெடுந்தீவின் மாவலித்துறை இறங்குதுறையில் குமுதினி காலை 7 மணிக்கு பயணத்துக்கு தயாராகியிருந்தது. குமுதினியின் அரசியல் வரலாறின் தொடக்கம 1985 மே 15 நெடுந்தீவு மாவலித் துறைமுகத்தில் இருந்து 64 பயணிகளுடன் காலை 7.00 மணிக்கு புறப்பட்டது. முதலில் பொது வேலைகள் திணைக்களத்தின் படகாக இருந்து, தற்போது வீதி அபிவருத்தி அதிகார சபையின் கீழ் இயங்கி வருகிறது. குமுதினிப்படகு அரைமணி நேரத்தின் பின் கடலில் ஸ்ரீலங்கா கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டது. இயந்திர அறை முன்பகுதி பின்பகுதி என மூன்று பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கடற்படையினர் குமுதினியை நிறுத்தினர். எட்டு கடற்படையினர் முக்கோண கூர்க்கத்தியும் கண்டங்கோடலிகள் இரும்புக்கம்பிகள் சகிதம் குமுதினியில் ஏறினர். பின் புறமிருந்த பயணிகளை இயந்திர அறையின்; முன்பக்கம் செல்லுமாறு மிரட்டினர். அவர்கள் அனைவரும் சென்றுவிட்டனர். பின்புறம் இருபுற இருக்கைகளுக்கு நடுவே பலகைகளினால் இயந்திரத்தில் இருந்து பின்புறம் 'புறொப்பிலருக்கு" செல்லும் ஆடு தண்டுப்பகுதி மூடப்பட்டிருந்தது மூடப்பட்டிருந்த அப்பலகைகளை கடற்படையினர் அகற்றினர். இருக்கை மட்டத்தில் இருந்து சுமார் 4அடி ஆழமானதாக அது இருந்தது. இதன்பின் முதலில்படகுப்பணியாளர்கள் ஒவ்வொருவராக உள்ளே அழைக்கப்பட்டனர். குமுதினியின் இருபக்க வாசல்களிலும் உள்ளும் வெளியும் கடற்படையினர் இருந்தனர். ஒவ்வொருவராக கடற்படையினர் அழைத்து கத்தியால் குத்தியும் கண்டங்கோடலியால் வெட்டியும் இரும்புக்கம்பியால் தாக்கியும் கொன்று அந்த நடுப்பள்ளத்தில் போட்டனர். இப்படி கொல்லப்படுபவர்கள் எழுப்பும் அவல ஒலி முன்புறம் இருப்பவர்களுக்கு கேட்கக்கூடாது என்பதற்காக அவர்கள் பெயரையும் ஊரையும் உரக்கச் சொல்லுமாறு பணிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் உரத்துச் சொல்ல அதில் பின்புறம் கொல்லப்படுபவர்கள் எழுப்பும் அவல ஒலி மறைந்தது.பின்புறம் செல்பவர்களுக்கு என்ன நடக்கிறது என்பது முன்புறம் இருப்பவர்களுக்கு தெரியவே தெரியாது. பின்புறம் செல்பவர்கள் உள்ளே சென்று கிடங்காக உள்ள பகுதியில் குத்திக்கிடப்பவர்களை காணும் வரை அவர்களுக்கு முன் சென்றவர்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியாது. அவலக் குரல் எழுப்ப முடியாது செத்தவர் போல் இருந்தவர்களும் உண்டு. கடுமையாகத் கடற்படை தாக்க குரல் எழுப்பியவர்கள் அதிகளவில் தாக்கப்பட்டு இறந்து விட்டார்கள் என கடற்படையினரால் கருதப்பட்டும் போடப்பட்டனர். உள்ளே பள்ளமாக இருந்த பகுதியில் உடல்கள் போடப்பட்டதால் முன்புறம் இருந்து செல்லுபவர்களுக்கு முதல் சென்றவர்களும் கொல்லப்படுவது தெரியாது மறைக்கப்பட்டது. கார்த்திகேசு நுழைவாயிலிலேயே கொலையுண்டோரைக் கண்டு கடலில் குதித்தார். வேட்டி அணிந்திருந்த படியால் அவர் கடலில் மிதக்கத் தொடங்கினார். துப்பாக்கியால் சுடப்பட்டு அவர் கொல்லப்பட்டார். ஏழு மாத குழந்தை; முதல் வயோதிபர் வரை ஈவிரக்கமின்றி கொலை செய்யப்பட்டனர். அதில் செத்தவர் போல் கிடந்து மூன்று அல்லது நான்கு படகுப்பணிகள் மட்டுமே உயிர் தப்பினார். நடுக்கடலில் இப்படியாக சகலரும் கொல்லபட்டும் காயப்பட்டும்போக அனைவரையும் கொன்று விட்டதாக கடற்படையினர் கருதிக் கொண்டு திருப்திப்பட்டனர்.அந்த திருப்தியால் மகிழ்வடைந்த கடற்படையினர் தமது படகில் நயினாதீவு தளத்துக்கு சென்று தமக்கும் இச் சம்பவத்திற்கும் தொடர்பில்லாதது போன்று இருந்து விட்டனர்.குமுதினி எந்திரம் நிறுத்தப்பட்டதால் அது நடுக்கடலில் தத்தளித்தது. குமுதினியில் சென்றோர் அனைவரும் இறந்தும் குற்றுயிரும் குலைஉயிருமாக பின்புற புறப்பலரை சுழற்றும் ஆடுதண்டு கிடங்குக்குள் கிடக்கின்றனர். படகின் ஓட்டிகள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனர். சம்பவ வேளையில் ஏழு படகுப்பணியாளர்களில் ஆறு பேர் மட்டும் இருந்துள்ளனர். அவர்களுடன் இருவர் ஒட்டிகளான ஹொக்ஸன்கள் அவர்கள் இருவரும் கொல்லப்பட்டுவிட்டனர். இவர்களை விட படகை ஒட்டக்கூடிய நிலையில் காயமடைந்து ஒருவரும் இல்லை.படகின் இயந்திர இயக்குனர் மட்டும் மண்டையில் கத்திக்குத்துடன் மயங்கிக் கிடந்தார். முப்பது நிமிடங்களாக குமுதினி ஆழக்கடலில் தத்தளித்துக்கொண்டலைந்தது.பின்புறக்கிடங்கில் மயங்கிக் கிடந்தவர்களில் தெளிந்த திடகாத்திரமான மயிலிட்டி வாசி தம்மை சுதாகரித்து எழுந்து மயங்கிக் கிடந்த இயந்திர இயக்குனரை எழுப்ப முயன்றார். ஆனால் அவர் அரை மயக்கத்திலிருந்து எழ வில்லை. இருந்தும் அந்த நிலையில் அவரை இழுத்துக்கொண்டு இயந்திர அறைக்குள் அவரை அவர்கள் இழுத்துச்செல்கின்றனர். இயந்திர இயக்குனரை இயந்திர அறைக்குள் அவர்கள் கொண்டு செல்கின்றனர். அவரை இயந்திரத்தை இயக்குமாறு செய்யச்சொல்கின்றனர். ஆனால் அவர் மயக்கமடையவே இயந்திரம் இயக்கப்பட முடியாது போனது. அவர் சுதாகரித்து இயந்திரத்தை இயக்கியிருந்தால் மிகுந்த ஆபத்து உருவாகியிருக்கும். ஏனென்றால் குமுதினியை ஸ்ரீலங்கா கடற்படையினர் மறித்தபோது அது இயக்கநிலையில் கியரிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் அந்தவேளை எந்திரம் இயக்கப்பட்டிருந்தால் இயந்திரம் சுழல் ஆடுதண்டு புறப்பலரை சுற்றியிருக்கும். அந்த ஆடுதண்டுக்கு மேலேயே கொல்லப்பட்ட மக்களும் காயப்பட்ட மக்களும் போடப்பட்டிருந்தனர். ஆடுதண்டு சுழன்றிருந்தால் அவர்கள் சக்கையாக்கப்பட்டிருப்பர். எந்திரம் இயங்காத நிலையில் குமுதினி நடுக்கடலில் அலைந்து கொண்டிருந்தது.கடல் நீரோட்டத்தில் அது அடித்துச் செல்லப்பட்டது. புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோயில் கரையை நோக்கி தானாகவே நகரத் தொடங்கியது. கடலில் அலைந்து திரிந்த குமுதினி புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோயிலுக்கு நேராக சென்றது. அதன் பின் நீரோட்டத்தால் நயினாதீவு நோக்கி அலையத் தொடங்கியது. குறிகாட்டுவானில் எட்டு மணிக்கு வரவேண்டிய குமுதினி வந்து சேராததால் பதட்டம் ஏற்பட்டது. எந்திரக் கோளாறா, எரிபொருள் தீர்ந்ததா என்ற கேள்வியே அங்கு எழுந்தது. ஆனால் படுகொலை ஒன்று நடந்திருக்கும் என எவரும் எதிர்பார்க்கவில்லை. குமுதினியை தேட ஆயத்தம்நடந்தது. குமுதினி நயினாதீவு நோக்கி அலைந்தது நயினாதீவு அருகே ஆழ்கடல் ஆரம்பிக்கும் பகுதியை அடைந்து களப்பு கடலின் ஒரு மேடருகே பொறுத்துப் போனது.குறிகாட்டுவான் துறையின் நுழைவாயிலில் ஒரு சில கடைகள் இருந்தன. உணவுக்கடைகள் அவை. திடீரென கடையொன்றின் உரிமையாளரான திருமதி. திருநாவுக்கரசு அவர்கள் இச் சம்பவத்தைக் கண்டு பரபரப்படைந்தார். தொலைவில் குமுதினி அலைவதைக்கண்டார். குமுதினிக்குள் இருந்து ஒரு வெள்ளைத்துணி ஒன்று அசைவதைக் கண்டார். குமுதினிக்குள் தப்பியவர் ஒருவர் காட்டிய அழைப்பு அது. அப்போது குமுதினி பழுதடைந்ததாகவே கருதி உடனடியாக அதனைநோக்கி படகில் மீட்புப்பணிக்காக குறிகாட்டுவான் இறங்குதுறையிலிருந்து குழு ஒன்று சென்றது. அவர்கள் குமுதினியை நெருங்கி அதனுள் ஏறிப்பார்த்தபோது இரத்தத்தை உறைய வைக்கும் பிணக்குவியலை கண்டனர். உடனடியாக குமுதினி குறிகாட்டுவான் நோக்கி இழுத்து வரப்பட்டது. விடுதலைப்புலிகள் அங்கு விரைந்து மீட்பு நடவடிக்கையைத் தொடங்கினர். காயமடைந்தோர் உடனடியாக புங்குடுதீவு மருத்துவமனைக்குகொண்டு செல்லப்பட்டனர். இறந்தோர் உடல்கள் யாழ் போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. புங்குடுதீவு மருத்துவமனையிலிருந்து கடுமையாக காயமடைந்தோர் பின்னர் யாழ் போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.இப்படுகொலையின் பின் காயமடைந்தவர்கள் புங்குடுதீவு மருத்துவமனையிலும் யாழ் போதனா வைத்திய மனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் தாக்கப்பட்ட விடயம் மருத்துவமனை ஸ்ரீலங்கா பொலிசாரிடம் முறையிடப்பட்டும் எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. பதிலாக சில நாட்களில் தப்பியவர்களை மருத்துவமனைக்கு வந்த ஸ்ரீலங்கா கடற்படையினர் தேடத் தொடங்கினர். உடனடியாக மருத்துவமனையில் இவர்கள் விடுதிகளுள் இடம் மாற்றி மறைக்கப்பட்டனர். உயிர் தப்பிய படகுப்பணியாளர் மருத்துவமனையில் கடற்படையினர் தேடப்படுகின்றபோது அவர் மறைக்கப்பட்டு கடைசிவரை தலைமறைவிலேயே சிகிச்சை பெற்றார். இரு பெண்களைத்தவிர ஏனையோர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றனர். படுகொலை சாட்சியங்கள் தப்பிவிடக்கூடாது என்பதற்காக கடற்படையினர் அவர்களை தேடித்திரிந்தனர். இன்றும் தேடிக்கொண்டிருக்கின்றனர். எதுவித விசாரணைகளும் நீதி வழங்கலும் இல்லாது அந்த கடற்படுகொலை மறைக்கப்பட்டுவிட்டது.ஆனால் ஆட்களை தேடுவதில் இன்றும் ஸ்ரீலங்காப்படையின் அக்கறை தீவிரமாக இருப்பது தெரிகின்றது.குமுதினி குறிகாட்டுவான் இறங்கு துறைக்கு கொண்டு வரப்பட்டு அதற்குள் இருந்த இறந்தோரையும் காயமடைந்தோரையும் வெளியேற்றும் பணி விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்டது.அப்போதைய தீவகப் பொறுப்பாளர் உடனடியாக களத்தில் இறங்கி செயற்பட்டார்.காயமடைந்தோர் முதலுதவிக்காக புங்குடுதீவு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவியின் பின் யாழ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இறந்த முப்பத்தி மூன்று பேரின் உடல்கள் புங்குடுதீவு மருத்துவ மனையில் வைக்கப்பட்டன. புங்குடுதீவுமக்கள் அங்கு திரண்டனர். சிங்களப்படைகளின் கொடுமை கண்டு கொதிப்புற்றனர். அம் மக்கள் உடனடியாகவே பணம் திரட்டிக் கொடுத்தனர்.அந்த பணத்தைக் கொண்டு உடனடியாக தீவகப் பொறுப்பாளர் பாய்களை கொள்வனவு செய்து இறந்தோர் உடல்களை அவற்றைக் கொண்டு கட்டி யாழ் போதனா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அடுத்த கட்டமாக இறந்தோரின் இறுதிக்கிரியைக்காக புங்குடுதீவு மக்களின் பணத்தைக்கொண்டு சவப்பெட்டிகள் கொள்வனவு செய்யப்பட்டன. மரண விசாரணையின் பின்னர் மருத்துவ மனையிலும் இறந்தவர்களுடன் முப்பத்தியாறுபேரின் உடல்கள் அவரவர் இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. நெடுந்தீவுக்கு கொண்டு செல்லப்பட வேண்டிய உடல்களை கொண்ட சவப் பெட்டிகள் புங்குடுதீவு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு இனவாதத்தில் பலியான மக்களின் நினைவு கூரல் நிகழ்வு இடம்பெற்றது.குமுதினியில் கொலையுண்ட மக்களின் குடும்பங்களிற்காக அம் மக்கள் திரட்டிக் கொடுத்த பணத்தில் மிகுதியான பணத்தில் தமிழர் வரலாறில்முக்கியமான ஒர் பதிவு நடந்தது. எஞ்சிய பணத்தில் படுகொலைக்கான நினைவுப் பிரசுரம் ஒன்று அச்சிடப்பட்டது. அதில் முக்கிய விஞர்களான சு.வில்வரத்தினம்,மு.பொன்னம்பலம் ஆகியோரின் கவிதைகளும் நிலாந்தனின் முதல் கவிதையும் பிரசுரமானது. சு.வில்வரத்தினத்தின் கவிதை 'காலன் கடைவிரிக்கிறான்" என்ற தலைப்பில் அமைந்தது என்ற தகவல் மட்டும் இருக்கிறது. ஆனால் கவிதையை காணக்கிடைக்கவில்லை. மு.பொவின் கவிதையும் அப்படியே. ஆனால் நிலாந்தனின் 'கடலம்மா" கவிதைதான் அழியாப் பதிவாக இலக்கிய சாட்சியமாக இன்றும் இருக்கிறது.காலத்தால் அழியாத பதிவாக அது இருக்கிறது. கடல் என்ற சடப்பொருளை 'கடலம்மா" என விழித்து கடலுக்கு உயிர்ப்பைக் கொடுத்த கவிதை. கடலை தமிழருடன் உயிர்ப்பாக பிணைத்த கவிதை. கடலை கடலம்மாவாக கருத்துருவாக்கிய முதல்கவிதையாகவும் அதுதான் அமையும் என கருதலாம்.அந்த கடலம்மா என்று கடலுக்கு உயிர்கொடுத்தது அந்த கவிதை. கடலுடன் குமுதனி என்ற சடப் பொருளான படகுக்கும் உயிர் கொடுத்த கவிதை.இன்றும் குமுதினி தமிழ்மக்களின் உயிர்களின் இருப்பிடமாக இல்லாமல் குமுதினியாகவே மாறி இருக்கிறாள். இதனையும் நிலாந்தனின் கவிதை சாதித்துக் கொடுத்திருக்கிறது. கடலம்மா...... நீயே சொல்குமுதினி ஏன் பிந்தி வந்தாள்? எம்மவரின் அவலங்களைச்சடலங்களாய்ச் சுமந்துகொண்டுகுமுதினி குருதி வடிய வந்தாள்கடலம்மா கண்டாயோகார்த்திகேசு என்னவானான்?எந்தக்கரையில் உடலூதிக்கிடந்தானோஓ....! சோழகக் காற்றேநீ,வழம்மாறி வீசியிருந்தால்....குமுதனி வரமாட்டாள் என்றுநெடுந்தீவுக்குச் சொல்லியிருப்பாய்.பாவம்மரணங்களின் செய்தி கூடக்கிட்டாத தொலைவில்ஏக்கங்களையும் துக்கங்களையும்கடலலைகளிடம் சொல்லிவிட்டுக்காத்திருக்கும் மக்கள்....... கடலம்மா நீ மலடிஏனந்தத் தீவுகளைஅனாதரவாய்த் தனியே விட்டாய கடலம்மாஉன் நீள் பரப்பில்அனாதரவாய் மரணித்த எம்மவரைபுதிய கல்லறைகளை எழுப்பிஅனாதைக் கல்லறைகள் என நினைவூட்டுஆனால்,இனிவருங் கல்லறைகள்வெறும்இழப்புகளின் நினைவல்லஎமதுஇலட்சியங்களின் நினைவாகட்டும். 1985 அலை 26 கவிஞர் நிலாந்தன இதை மையமாக கொண்டு 1990களின் பிற்பகுதியில்குமுதினியின் படுகொலை அவலத்தை சுவிசில் ஏ.ஜி.யோகராஜாவின் எழுத்தில் அன்ரன் பொன்ராஜாவின் நெறியாள்கையில் கடலம்மாஎன்ற நாடகத்தை அரங்கேற்றினர்.அது அங்குள்ள மற்றைய மொழிக்காரரின்கவனத்தை ஈர்த்தது. குமுதினி ஒரு மிதக்கும் ஒஸ்ட்விச என்ன இது புதிதான சொல் என திகைக்கவேண்டாம்.ஒஸ்ட்விச் என்பது ஜேர்மனியை ஆண்ட ஹிட்லர் யூதர்களை படுகொலை செய்த வதை முகாம்.அந்த வதைமுகாமில் நடந்த மாதிரிதான் குமுதினியில் எமது மக்கள் சிங்களப்படைகளால் படுகொலை செய்யப்பட்டனர். தாம் கொல்லப்படும் வரை என்ன நடக்கப்போகின்றது எனத்தெரியாமலே குமுதினியில் மக்களின் படுகொலை நடந்தது. குமுதனி படுகொலை நடந்த விதம் எப்படி என்பதை நாம் அறிந்திருக்கிறோம் .இப்போது ஒஸ்ட்விச் கொலை பற்றி யூதர்களின் ஆவணம் ஒன்றிலிருந்து பார்ப்போம்.அறுபது ஆண்டுகள் கடந்தோடிவிட்டன. ஆயினும் மனித குலவரலாற்றில் ஆறாத காயாமாகவே இந்நிகழ்வு பதிந்துவிட்டது. உலகமே வெட்கித் தலை குனியும் அந்;த நாளை பத்திரிகைகள் ,வானொலிகள், தொலைக்காட்சிகள் யாவும் முக்கியத்துவம் அளித்துப் பேசின. வளர்ந்து வரும் இளம் சந்ததியிடம் - மனிதகுல வரலாற்றில் நிகழ்ந்த அந்த அநீதியை மறக்கக்கூடாத ஒரு பாடமாகக் கையளிப்பதற்காகவும்,அவர்களை மனிதநேயம்மிக்கவர்களாக வளர்ப்பதற்காகவும் இந்த நாள் நினைவுகூரப்படுகிறது.இரண்டாம் உலக மகாயுத்தக் காலத்தில்,நாசிப்படையானது பல வதைமுகாங்களை உருவாக்கியுள்ளது. பல லட்சக்கணக்கான மக்களை, குறிப்பாக யூதர்களை உலகத்தின் பார்;வையிலிருந்து மறைத்து இரகசியமாக சிறையில் அடைக்கவும்,சித்திரவதை செய்யவும்,கொல்லவுமாக அமைக்கப்பட்டதே இந்த வதை முகாம்கள்.இவற்றுள் போலந்து நாட்டில், Nஐர்மனியின் எல்லைக்கு அருகிலுள்ள ஒஸ்விச் என்ற நகரத்தில் 1940 ஆம் ஆண்டளவில் அமைக்கப்பட்ட வதைமுகாம் மிகவும் ுக்கியமானது. இங்கு 1942 க்கும் 1945 இடையில், பத்துலட்சத்திற்கும் மேற்பட்ட யூத மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 6 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏனையோர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் ஒஸ்விச்சினுடைய பெயர் என்றென்றும் மறக்க முடியாததாக இருக்கிறது.அங்கே துன்பங்களும் அதைத் தொடர்ந்த மரணங்களும் பின்னிப் பிணைந்திருக்கின்றன.அம் முகாமில் யூத மக்களை அழிப்பதற்காகவென்றே நச்சுவாயு அறைகளும்,இறந்தவர்களது உடல்களை எந்த அடையாளமுமின்றி எரிக்கக்கூடிய மின்சார அடுப்புக்களும் நன்கு திட்டமிட்டு அமைக்கப்பட்டிருந்தன அந்நேரம் ஒரு ரயில் கூவலின் சத்தம் அந்த அமைதியை கிழித்துக்கொண்டு கேட்கும். அங்கு நாய்களின் சத்தத்தைக் கேட்கமுடியாது. அல்லது அந்த அவலத்துக்குட்பட்ட பெற்றோர்களிடமிருந்து பிள்ளைகளை பிரிப்பதன் கதறல் >ஒலிகளைக் கேட்கமுடியாது. அமைதி மட்டும்தான்; அங்கு குடியிருக்கும்.அப்போது பொதுவாக யாருடைய மனக்கண்களிலும்,பல லட்சக்கணக்கான பெண்களை விரியும்.அப்படி அனுப்பப்பட்ட அம் மக்களுக்கு தாம் எங்கே கொண்டு செல்லப்படுகின்றோம் என்பது தெரியாது.அவர்கள் தங்களது குடும்பத்திலிருந்து பிரிக்கப்பட்டவர்களாக, நிர்வாணமாக்கப்பட்டவர்களாக, தலை மொட்டையடிக்கப்பட்டவர்களாக, அழுதுகொண்டேயிருப்பவர்களாக, தொடர்ச்சியான உடல் வதைக்குட்பட்டவர்களாக, தாங்கள் வாழ்ந்த இடங்களை விட்டு பிரிக்கப்பட்டவர்களாக, பல கொடுமைகளை சுமந்து அந்த வதை முகாம்களுக்குள் அடைக்கப்பட்டார்கள். பின்பு அவர்கள் வி~சவாயு மூலம் கொல்லப்பட்டார்கள். கடைசிவரை தாம் கொல்லப்படப்போகிறோம் என்பது தெரியாது ஒஸ்டவிச்சில் யூதர்கள் படுகொலையானதைப்போல சில அடி தூரத்துக்குள் தம் சக மக்கள் கொல்லப்படுவது தெரியாது கொல்லப்பட்ட அவலம், ஏழு மாத குழந்தை பறித்தெடுக்கப்பட்டு குத்திக் கொல்லப்பட்ட கொடுமை குமுதினியில் நிகழ்ந்தது. யூதமக்களின் படுகொலையை நினைவில் வைத்திருக்க அந்த வதை முகாம் இன்றும் பராமரிக்கப்படுகின்றது.நமது தாயகத்திலும் இன்றும் வாழும் படுகொலை வரலாற்றுச்சின்னம் குமுதினி. யாழ்பொது நூலக அழிப்பு மறைக்கப்பட்டது போல விடக்கூடாது எம் உயிர்களை பலிகொண்ட அந்த கொடுமை மறக்கப்படக்கூடாது. எம் மக்கள் படுகொலை செய்யப்பட்ட நினைவுச்சின்னங்கள் வேறு எமக்கு இல்லை. குமுதினியில் கொல்லப்பட்ட மக்களின் சடலங்களை நெடுந்தீவுக்கு கொண்டு செல்லப்பட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. குமுதினி குறிகாட்டுவான் இறங்குதுறையில் கட்டப்பட்டுக்கிடந்தது.அதனுள் மக்களின் இரத்தமும் கடல்நீரும் டீசலும் கலந்து இருந்தன. அந்தப்பக்கமே மக்கள் செல்லமுடியாத படி நிண நாற்றம் எடுத்தது. இந்தக் குமுதினியில்தான் உடல்கள் நெடுந்தீவுக்கு கொண்டு செல்லப்படவேண்டும் .அதற்கு குமுதினி சுத்தப்படுத்தப்பட வேண்டும். ஆனால் எல்லோருமே அதற்குக் கிட்ட செல்ல பயப்பட்டார்கள். ஒன்று நிணநாற்றம், அடுத்தது அதற்குள் மக்கள் படுகொலை செய்யப்பட்டதால் ஏற்பட்ட பயம். இறுதியாக சாராயம் வாங்கிக் கொடுக்கப்பட்டு சிலரைக்கொண்டு குமுதினி கழுவப்பட்டது. மூன்றாம் நாள் தனது மக்களை சடலங்களாக காவிக்கொண்டு குமுதினி நெடுந்தீவு நோக்கி புறப்பட்டது. இந்தக் கல்வெட்டு நெடுந்தீவின் மாவலித்துறையில் அமைக்கப்பட்டுள்ள குமுதினிப்படுகொலை நினைவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ளது.இந்த நினைவாலயம் ஸ்ரீலங்கா கடற்படையினதும், பொலிசாரினதும் காவல் நிலையமாக இப்போது இருக்கிறது. அதனுள் நுழைந்து அந்த கல்வெட்டை பார்ப்பதே பெரும் துன்பம்.ஒரு நாள் இந்தப் பெயர் விபரத்தை எடுப்பதற்காக நெடுந்தீவிற்குச் சென்றேன். மாவலித்துறையில் நுழைந்து குமுதினி நினைவாலயத்துள் செல்லமுற்பட கடற்படையினர் என்னை மறித்தனர். 'என்ன" என்று கேள்வி எழுப்பினர். நான் குமுதினி கல்வெட்டைப் பார்க்கப்போகிறேன் எனக் கூறினேன். 'அது முடியாது" எனத்தடுத்தனர். அதற்கு நான் இது இராணுவ இலக்கல்லவே எனப் பதிலளித்தேன்.அப்பொழுது அங்கு நின்ற ஸ்ரீலங்கா பொலிசாரிடம் கடற்படையினர் கேட்டனர். அவர் உடன் வந்து 'யார் நீ, எதற்கு இந்த பேர் விபரம்" எனக்கேட்டார். அதற்கு நான் கட்டுரை ஒன்றுக்கு தேவை என்றேன். அதற்கு அவரோ மேலதிகாரியிடம் கேட்கவேண்டும் என்றார். சிறிது நேரம் சிங்களத்தில் தொலைத்தொடர்புக் கருவியில் கதைத்தார். பிறகு திரும்ப விபரம் கேட்டார், சொன்னேன், அடையாள அட்டை காட்டச் சொன்னார். காட்டினேன், அரைகுறை மனதுடன் சம்மதிக்க பையிலிருந்து கமரா எடுக்க 'எதற்குக் கமரா" எனக் கேட்டார்.கல்வெட்டைப் படமெடுக்க எனப் பதிலளித்தேன். அதற்கு அவரோ 'முடியாது" என்றார். கல்லை மட்டும் எனக்கேட்டேன். அரைகுறை மனதுடன் பொலிஸார் சம்மதித்தார். உடனடியாக கல்வெட்டுடன் சார்த்தி வைத்திருந்த துப்பாக்கிகள், ரவைக்கூடு, தாங்கி அணிகள் என்பவற்றை வேகமாக அகற்றினர். கல்லை மட்டுமா படமெடுக்கிறேன் என அவதானித்தனர் படையினர். அதைமட்டும் படமெடுத்துவிட்டு வெளியேறி நெடுந்தீவை சுற்றிப்பார்த்துவிட்டு திரும்ப ஒரு மணிக்குகுறிகாட்டுவான் திரும்பவென மாவலித்துறைக்கு திரும்பி அதன்மடத்துச் சுவரில் அமர்ந்திருந்தவாறு அங்கிருந்த ஒருவருடன் கதைத்துக்கொண்டிருந்தேன். அப்பொழுது குமுதினி நினைவாலயத்தில் இருந்து ஸ்ரீலங்கா பொலிசார் என்னைக்கூப்பிட்டார். என்ன எனக்கேட்டேன் 'இந்தப்படம் எதற்கு" என்றார். இது ஒரு கட்டுரைக்கு என்றேன். மீளவும் அரைமனதுடன் அந்தப் பொலிசார் 'சரி" என்றார். எந்தப் படையினர் எமது மக்களை குமுதினிப் படகில் கொன்றனரோ அந்தப்படையினரே அந்த மக்களின் நினைவாலயத்தை ஆக்கிரமித்தும்நின்றனர். 6 குமுதினி படுகொலையின் பின்னரும் அது நெடுந்தீவு மக்களை ஏற்றிப்பயணித்துக் கொண்டேயிருந்தது.அந்த காலத்தில் குமுதினிக்கு சகோதரப்படகுகள் வீதி அபிவிருத்தி அதிகார சபையால் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.கப்பலின் வடிவிலான உருக்கினால் உருவாக்கப்பட்ட வசதி மிக்க மணிமேகலை, வடதாரகை ஆகிய படகுகளும்,எலரா என்ற மரத்தினாலான படகும் சேவையில் இறங்கின. இவற்றில் எலரா வல்வெட்டித்துறையைச்சேர்ந்த தனியார் ஒருவரின் படகு. கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட போது அது ஸ்ரீலங்கா படையினரால் பிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு அரச உடமையாக்கப்பட்டது. அரசுடைமையாக்கப்பட்ட அந்த இழுவைப்படகு அரசால்நெடுந்தீவுக்கு கடல் போக்குவரத்துக்காக வழங்கப்பட்டது.வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குரிய படகு திருத்தத் தளம் காரைநகர் ஸ்ரீலங்கா கடற்படைத்தளத்துக்கு மேற்காக நீலாங்காடு என்ற இடத்தில்இருந்தது. கடலில் இருந்து படகை துலாவினால்(வின்ச்) டொக்கில் ஏற்றப்பட்டு தண்டவாளம் மூலம் திருத்த வேலைத்தளத்திற்கு கொண்டு செல்லக்கூடிய வசதியினை இந்த வேலைத்தளம் கொண்டிருந்தது. வீதி அபிவிருத்தி அதிகார சபை முன்னர் பொது வேலைத்திணைக்களம் என்ற பெயரில் இயங்கிவந்தது. அப்போது இந்தத்தளம் 'பிடபிள்யுடி" வேலைத்தளம் என்ற பெயராலேயே அழைக்கப்பட்டது. 1986ல் மணிமேகலை, வடதாரகை ஆகியன திருத்தப்பணிக்காகநீலாங்காடு தளத்துக்கு கொண்டு வரப்பட்டன.இவற்றில் மணிமேகலை டொக்கில் ஏற்றப்பட்டு நிறுத்தப்பட்டிருந்தது. வடதாரகை டொக்கில் ஏற்றப்படுவதற்காக கடலில் நீலாங்காடு தளத்தின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்தது. ஈ.பி.டி.பி டக்ளஸ்தேவானந்தா ஈ.பி.ஆர்.எல்.எவ் இராணுவத்தளபதியாக இருந்தபோது 1986ல் காரைநகர் கடற்படைத்தளத்தை தாக்கியழிக்கிறேன் என்று ஒரு தாக்குதலை நடத்தினார்.தாக்குதல்களுக்குரிய உபாயங்கள், இரகசியம் பேணும் தன்மை என்பவற்றை கொண்டிராத நிலையில் அந்த தாக்குதல் தோல்வியடைந்தது.இதில் இவர்களைக் காப்பாற்றியதில் விடுதலைப்புலிகளின் பங்கு இருந்துள்ளது. இந்த தாக்குதலையடுத்து காரைநகர் கடற்படைத்தளத்தில் நின்ற ஸ்ரீலங்கா கடற்படையினர் சரமாரியாக நீலங்காடு திருத்த தளம் மீது தாக்குதல் நடத்தினர்.இந்த தாக்குதலில் மணிமேகலையும், வடதாரகையும் அழிந்து போயின. திருத்தத்தளமும் அழிந்து போனது. இந்த வசதி மிக்க இரு படகுகளும் அழிந்து போன நிலையில் குமுதினிதான் நெடுந்தீவின் போக்குவரவிற்கான உயிரானாது. எலரா படகும் பழுதடைந்து கைவிடப்பட்டது. இதற்கு பிறகு 1980களின் கடைசியில் மீளவும் ஒரு உருக்கினாலான வசதிமிக்க வேகமாக பயணிக்கத்தக்க படகு ஒன்று வீதி அபிவிருத்தி அதிகாரசபையால் வழங்கப்பட்டது. அதற்கு இடப்பட்ட பெயர் வலம்புரி. இந்த பெயர் பரீட்சயமான ஒன்றாக இருக்கிறதா. ஓம், போரில் ஸ்ரீலங்கா கடற்படையின் பயன்பாட்டில் இருந்து தமிழ்மக்கள் அழிப்பு நடவடிக்கையில்ஈடுபடுத்தப்பட்டிருந்த வேளையில் வலம்புரி பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்கரும்புலித்தாக்குதலில் அழிக்கப்பட்ட தகவலை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அந்த அதே வலம்புரிதான் நெடுந்தீவுக்கு வழங்கப்பட்டது. அதன் கதையைப்பார்ப்பம். 1980 களின் கடைசியில் கையளிக்கப்பட்ட வலம்புரி சிறிது காலமே மக்களுக்கு சேவையாற்றியது.வசதியான இந்தப்படகு தமிழ் மக்களுக்கான சேவையில் ஈடுபட்டிருப்பது. ஸ்ரீலங்கா கடற்படையின் கண்களை உறுத்தியது. அதனை தாம் கைப்பற்ற வேண்டும் என அவர்கள் திட்டமிட்டனர். நயினாதீவு ஸ்ரீலங்கா கடற்படையினர் இதன் மீது கண்வைத்தனர்.ஆயினும் கைப்பற்றும் சந்தர்ப்பம் அவர்களுக்கு கிட்டவில்லை. இந்திய இராணுவ காலம் என்பதும் ஒரு காரணமாக இருந்தது. 1990 மார்ச்சில் இந்திய இராணுவம் போய்விட்டது. அதற்கு பிறகு கொஞ்சக்காலம் பிரேமதாசவுடனான சமாதானக் காலம். 1990 யூனில் 2ம் ஈழப்போர் தொடங்கிவிட்டது.அப்போது வலம்புரியை கடற்படை பறிக்கும் என்று தெரிந்த காரணத்தால் வலம்புரியை மாவலித்துறையில் கட்டிவிட்டு. குமுதினியையும் கட்டிவிட்டு சாதாரண போக்குவரவுப்படகுகளில் பயணம் மேற்கொள்ளப்பட திட்டமிடப்பட்டது. இருந்தும் வலம்புரியை அவசர பயணமொன்றிற்காக குறிகாட்டுவான் கொண்டு செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டது.வலம்புரி குறிகாட்டுவன் சென்றது. அதனை நயினாதீவிலிருந்து கடற்படையினர் கண்டு விட்டனர். படையினர் பார்த்துவிட்டது படகுப்பணியாளர்களுக்கு தெரிந்துவிட்டது. அதனால் அவர்கள் வலம்புரியை குறிகாட்டுவான்துறையில் கட்டிவிட்டு அதனை பூட்டிவிட்டனர்.அவர்கள்வேறு படகில் அதாவது நெடுந்தீவு கூட்டுறவுச் சங்கப்படகில் நெடுந்தீவு திரும்பினர். அந்தப்படகை கடற்படையினார் நயினாதீவுக்கு வருமாறு அழைத்தனர். அப்போது குறிகாட்டுவான் விடுதலைப்புலிகளிடம் இருந்தது. நயினாதீவுகுறிகாட்டுவான் இரண்டும் கால் மைல் இடைவெளியில் நேருக்கு நேர் தெரியும் வகையில் உள்ளன.இந்தப்படகு நயினாதீவு ஸ்ரீலங்கா கடற்படை இறங்கு துறைக்கு சென்றது. வலம்புரிப் படகுப் பணியாளர்களை கடற்படைக்கு தெரியும்அவர்களை அழைத்து 'வலம்புரியை பார்க்கவேணும் கொண்டு வரும்படி" அவர்களிடம் கேட்டனர் கடற்படையினர்.அதற்கு அவர்கள் 'வலம்புரியில் எஞ்சினியர்களை கொண்டு வந்தனாங்கள். அதில சின்னப்பழுது. எஞ்சினியர் பூட்டித் திறப்புக்கொண்டு போயிற்றார்." என்றனர் அவர்கள். அரைகுறை மனதுடன் கடற்படையினர் அவர்களை விட்டுவிட்டனர். அடுத்தடுத்த நாட்கள் அவர்களுக்கு அழுத்தம் கடற்படையால் கொடுக்கப்பட்டது. 'வலம்புரியை கொண்டு வரவேணும்.பார்த்துவிட்டுவிடுகிறோம்" என அழுத்தமாக கடற்படையினர் சொல்லினர். வலம்புரியின் உண்மை நிலையை கடற்படைக்கு அவர்களின் உளவாளிகளாக இருந்த தமிழர்கள் சிலர் சொல்லிக்கொடுத்துவிட்டனர். ஒரு வார காலத்துக்கு மேல் கடற்படையினரைத் தாக்காட்டமுடியாத நிலையில் வலம்புரியை கொண்டு செல்ல முடிவு எடுக்கப்பட்டது. பயணிகளுடன் சென்றால் படகை விட்டுவிடுவார்கள் என்று பயணிகளையும் வலம்புரியில் ஏற்றிச் சென்றனர். நயினாதீவுக்கு வலம்புரி கொண்டு செல்லப்பட்டுஇறங்கு துறையுடன் அணைக்கப்பட்டது. அவசர அவசரமாக கடற்படையினர் அங்கு குவிந்தனர். அவர்களுடன் நயினாதீவின் விகாரையில் இருந்த பௌத்தபிக்கு ஒருவரும் நின்றிருந்தார். வலம்புரியிலிருந்து மக்களை வெளியே வருமாறு கடற்படையினர் மிரட்டினர். பயத்துடன் மக்கள் வெளியில்;வந்தனர்.கடற்படையினர் வலம்புரிக்குள் ஆவலுடன் சென்று பார்த்தனர். பிறகு வெளியில் வந்தனர். அதிகாரிகள் தரத்தில் ஒருவர் வந்தார். படகுப் பணியாளரிடம் வலம்புரியின் திறப்பைத் தருமாறு கேட்டனர்.'ஏன்" என்று அவர்கள் கேட்டனர்.அதனை நாம் பொறுப்பேற்கிறோம் என்றார் கடற்படையின் அதிகாரி 'அதனை நாங்கள் செய்யமுடியாது. எமது அதிகாரிகள்தான் அதனை தீர்மானிக்கவேண்டும்" என்றனர் அவர்கள்.'அதனை ஏற்கமுடியாது திறப்பைத் தாருங்கள்" கடற்படை இதனை பொறுப்பேற்கிறது என தெரிவித்து கடற்படையினர் திறப்பை பறித்து விட்டனர். நயினாதீவிலிருந்த படகு ஒன்றில் மக்களை நெடுந்தீவுக்கு அனுப்பப்பட்டனர்.இந்த காலம் தொட்டு நெடுந்தீவு பயணிகள் படகுகள் நயினாதீவுக்கு வந்து செல்ல வேண்டும் என்று சொல்லப்பட்டது. இதேபோல் அனலைதீவு, எழுவைதீவு பயணிகள் படகுகளும் நயினாதீவு வந்துதான் குறிகாட்டுவான் செல்லவேண்டும் என கடற்படையினாரால்கட்டளையிடப்பட்டது. வலம்புரி பறிகொடுக்கப்பட்டது. சில நாட்களில் அது காரைநகருக்கு கடற்படையினரால் கொண்டு செல்லப்பட்டது. இனி கடற்படையின் அடுத்தஇலக்கு என்ன? அடுத்ததாக நெடுந்தீவு பயணிகள் படகான குமுதினி இலக்கானது. குமுதினி போக்குவரத்தில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டது.இரண்டாம் ஈழப்போர் தொடங்கி ஒரு வாரமளவில் குமுதினி பயணிகளை ஏற்றி குறிகாட்டுவான் நோக்கிப்புறப்பட்டது. ஆழ்கடல் கடந்து குறிகாட்டுவான் போக முன் சோதனைகளுக்காக குமுதனி நயினாதீவு கடற்படை இறங்க துறைக்குச் சென்றது. அங்குவழமைபோல் எதுவும் சொல்லாமல் சோதனையை படையினர் மேற்கொண்டனர். இதன் மர்மம் குமுதினி ஓட்டிகளுக்கு புரிந்தது. குமுதினி பறிக்கப்படத்தான் போகிறது என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள்.குறிகாட்டுவானில் பயணிகளை இறக்கிவிட்டு குமுதினி நெடுந்தீவுக்கு பயணிகளை ஏற்றிப்புறப்பட்டது. சோதனைக்காக நயினாதீவு கடற்படைத்துறைக்கு அது சென்றது. இறங்குதுறையுடன் குமுதினி அணைக்கப்பட்டது. அதிலிருந்து பயணிகள் சோதனைகளுக்காக இறங்கினர். கடற்படையினர் சாமான் மூட்டைகளையும் இறக்கச் சொல்லினர். சோதனைக்காக்கும் என நினைத்து மக்கள் பொருட்களை இறக்கினர். இறக்கப்பட்டதும் நயினாதீவிலிருந்து ஒரு பயணிகள் படகை கடற்படையினர் வரவழைத்தனர். அதில் ஏறி நெடுந்தீவுக்குப்போங்கள். பாதுகாப்புக் காரணங்களுக்காக குமுதினியை கடற்படை பொறுப்பேற்கின்றது என கடற்படையினர் சொல்லிவிட்டு அதனை தமது கட்டுப்பாட்டில் எடுத்தனர்.அப்போதும் நயினாதீவு விகாரையைச் சேர்ந்த பிக்கு ஒருவர் வெறித்தனமாக நின்றிருந்தார். 1990 யூனில் வலம்புரியுடன் குமுதினியும் பறிபோனது.துயரத்துடன் மக்கள் சென்றனர்.வலம்புரியை விட அவர்கள் குமுதினி மீதுஉயிரைப்போன்ற பற்றை வைத்திருந்தனர். அவர்களின் உறவுகளின் உயிர்களின் ஆத்மா உலாவும் இல்லமாக அவர்கள் குமுதினியைக் கருதியிருந்தனர். அந்த குமுதினி பறிபோன போது மக்கள் அழுதனர். பறிக்கப்பட்ட குமுதினியும் வலம்புரியும் ஸ்ரீலங்கா கடற்படையால் திருகோணமலை சீனன்குடா ஸ்ரீலங்கா கடற்படைத்தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.அங்கு அவற்றுக்கு ஸ்ரீலங்கா கடற்படையின் கடற்கலங்களுக்குரிய சாம்பல் கடும் நீல வண்ணங்கள் ப+சப்பட்டது. ஆம் தமிழ் மக்களின் இன அழிப்புக்குவலம்புரியும், குமுதினியும் ஸ்ரீலங்கா கடற்படையால் தயார் செய்யப்பட்டன. 1990 ஆவணியில் தீவகம் ஊர்காவற்றுறையில் இருந்து-மண்டைதீவுக்கு நகர்ந்து ஸ்ரீலங்கா படைகள் மக்களை படுகொலை செய்த திரிவிடபலயஇராணுவ நடவடிக்கைக்கு இராணுவத்தினரை தரையிறக்க குமுதினியும் வலம்புரியும் கடற்படையால் பயன்படுத்தப்பட்டன. இதனைஎழுவைதீவிலிருந்த மக்கள் நேரடியாகக் கண்டுள்ளனர். அடுத்ததாக ஆனையிறவு இராணுவ முகாமை விடுதலைப்புலிகள் 1991; தாக்கிய ஆகாய-கடல்-வெளி நடவடிக்கையின்போது ஸ்ரீலங்கா இராணுவத்தினர் வடமராட்சி கிழக்கில் வெற்றிலைக்கேணியில் கடற்படை தரையிறக்கக்கப்பலிலும் குமுதினியிலும் கொண்டு வந்து தரையிறக்கப்பட்டனர். இதன் பின்னர் படையினரின் போக்குவரவுப்படகாக குமுதினியும் வலம்புரியும் படையினரால் பயன்படுத்தப்பட்டன. 1993ம் ஆண்டளவில் குமுதினியின் இயந்திரம் அதன் கட்டமைப்பு பழுதடைய கடற்படையினர் ஊர்காவற்றுறை கடற்பகுதியில் அதனை கைவிட்டனர். குமுதினி கடலில் தரைதட்டி அனாதரவாகக் கிடந்து சிதைந்தகொண்டிருந்தது.நெடுந்தீவு மக்கள் பாதுகாப்பற்ற திறந்த படகுகளான உதயதாரகை, சமுத்திரதாரகை ஆகிய கூட்டுறவுச் சங்கப்பொருளேற்றும் படகுகளையும், தனியாரின் சிறிய அக்குவாட்டிக் நிறுவனப் படகுகளையும் பயன்படுத்தினர். இவற்றில் அக்குவாட்டிக் நிறுவனப் படகு ஒன்றையும் சமுத்திரதாரகை என்ற படகையும் ஈ.பி.டி.பி.யினர் இரவொன்றில் கடத்திச்சென்றுவிட்டனர்.இதுவரை அவற்றின் கதை தெரியாது. அவை மூலம் ஈ.பி.டி.பி.யினர் இந்தியா சென்றதாக தகவல் உள்ளது. 1992ல் தீவகம் முழுமையையும் ஸ்ரீலங்காபடையினர் ஆக்கிரமித்தபின்னர் குறிகாட்டுவானுக்கான படகுப்போக்குவரவு ஸ்ரீலங்கா கடற்படையினரால் துண்டிக்கப்பட்டது.காரணம் குறிகாட்டுவானில் இறங்கும் மக்கள் புங்குடுதீவு வழியாகவே செல்லவேண்டும்.யாழ்ப்பாணத்துக்கு மக்கள் செல்லமுடியாத காரணங்களால் அரச படைத்தலைமையகம் ஊர்காவற்றுறையில் இருந்ததால் மக்களை அங்கு மட்டும் செல்ல படையினர் அனுமதித்தனர்.அதைவிட புங்குடுதீவு முழுமையாக ஸ்ரீலங்கா படையினரிடம் இல்லை. அதில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியாக இருப்பதாகவும் மக்கள் அவர்களுக்கு பொருட்களை கொண்டு சென்று கொடுக்கலாம் என்று தெரிவித்தே புங்குடுதீவுக்கான பயணம் ஸ்ரீலங்கா படையினரால் தடுக்கப்பட்டது. பாதுகாப்பற்ற படகுகளில் நீண்ட தூரம் பயணித்து ஊர்காவற்றுறைக்கு செல்லவேண்டியிருந்தது. அப்போது குமுதினி கடலில் அனாதாரவாக சிதைந்து கிடந்ததை கண்டு மக்கள் துயருற்றனர். 1996ல் யாழ்ப்பாணத்தை ஸ்ரீலங்கா படையினர் ஆக்கிரமித்த பின்னர் தீவகத்துக்கான பண்ணை வீதி ஸ்ரீலங்கா படையினரால் திறக்கப்பட்டு தீவகம் யாழ்ப்பாணத்துடன் இணைக்கப்பட்டது.இதன் பின் தீவகத்தில் மக்களின் போக்குவரவு சிறியளவில் அதிகரித்தது. அவ்வேளையில் குமுதினியை மீட்க வீதி அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை மேற்கொண்டது. படகின் பணியாளர்கள் சகிதம் குமுதினியை மீட்க அது இருக்கும் இடத்தை அடையாளப் படுத்தினர். 1997ல்.அதன்பின் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் அதனை மீட்டுத் திருத்த காரைநகர் ஸ்ரீலங்கா படையினரிடம் அனுமதிகேட்டனர். அதனைக்கொண்டு செல்ல கடற்படையினர் அனுமதி மறுத்தனர். தமது ஒட்டுக்குழுவான ஈ.பி.டி.பி.யுடன் தொடர்புகொண்டு அதனை எடுக்குமாறு ஒரு அரசியல் களத்தை அந்த குழுவுக்கு கடற்படை அதிலும் உருவாக்கிக்கொடுத்தது. அந்த ஒட்டுக்குழுவும் குமுதினியின் எந்திரத்தை திருத்துகிறோம் என்ற நாடகத்தை நடத்தியது. அது நிறைவேறாமல் கைவிடப்பட்டது. இதன் பின் கடற்படைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. அவர்கள் பறித்துச் சென்ற குமுதினிக்கு இந்த நிலை ஏற்பட்டது என்ற போர்வையில் இந்த அழுத்தம் கொடுக்கப்பட்டது. அதனையடுத்து தாம் குமுதினியின் எந்திரத்தை திருத்தி தருவதாக காரைநகர் கடற்படையினர் சம்மதித்தனர்.இது இந்த பிராந்தியத்தில் தம்மைத்தவிர வேறு எவரும் வந்து திருத்தக்கூடாது என்ற இராணுவ நோக்கில்தான்.கடற்படை ஒரு இழுவைப்படகு 'அசோக் லேலன்ட்" எந்திரத்தை பொருத்தியது. இது புதிதாக அல்லது அவர்கள் கைப்பற்றிய இந்திய இழுவைப்படகில் இருந்து கைப்பற்றியதா தெரியாது. ஒரு நாள் அதனை பொறுப்பெடுக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபையினரிற்கு குமுதினியை பொறுப்பெடுக்குமாறு கடற்படை அறிவித்தது. வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் குமுதினியின் பணிக்குழுவையும் கூட்டிக்கொண்டு காரைநகர் கடற்படைத்தளத்துக்கு சென்றனர். குமுதினியைப்பெற்றுக் கொண்டோம் என கடிதம் ஒன்றில் கையெழுத்திடும் படி கடற்படையினர் கேட்டனர். குமுதினி என்ன நிலையில் ருக்கிறது எனத்தெரியாமல் கையெழுத்துப்போடுவதில் வீதிஅபிவிருத்தி அதிகார சபையினருக்கிடையில் இழுபறி ஏற்பட்டது. படகுப்பணிக்குழுவினர் முதலில் கடற்படையிடம் இருந்து குழுதினியை எடுப்பம் என வலியுறுத்தினர்.அவர்கள் கையெழுத்திட்டனர்.அதன் பின் கடற்படையினர் தமது துறையில் கட்டப்பட்டிருந்த குமுதினியை ஒப்படைத்தனர். பணிக்குழுவினர் படகைப்பொறுப்பேற்று அதன் எந்திரத்தை இயக்கி கடற்படையிடமிருந்து அதனை விடுவித்துக்கொண்டு புறப்பட்டனர். குமுதினி கடலில் பயணிக்கத்தொடங்கியது. அது அலைகளை கிழித்துக்கொண்டு போனது. திடீரென்று ஏதோகழன்று விழும் உணர்வு குமுதினியில் ஏற்பட்டது.அலை கிழித்து குமுதினியால் தொடர்ந்து நகரமுடியவில்லை. அலைகளால் எற்றி அலைக்கழிக்கப்பட்டுக்கொண்டு. நடுக்கடலில் நின்றது. குமுதினியின் சுக்கான் கழன்று விட்டதே அது நடுக்கடலில் நகராமைக்கு காரணம் ஆகும்.படகுப்பணியாளர்கள் ஆராய்ந்து அந்தப்பிழையைக் கண்டுபிடித்தனர். நடுக்கடலில் இருந்து கடற்படைக்கு அவர்கள் சைகை காட்டினர்.அதன் பின் ஸ்ரீலங்கா கடற்படையினரின் படகு ஒன்று அப்பகுதிக்கு வந்த குமுதினியை கரைக்கு இழுத்துச் சென்றது. மீளவும் குமுதினி கடற்படை வசம் சென்று விட்டது.கடற்படையினர் கடலில் வைத்து சுக்கானை பொருத்தியிருக்கின்றனர். அதனால் சுக்கான் ஒழுங்காகப் பொருத்தப்படவில்லை.இப்பொழுது மீளவும் பல நாட்கள் குமுதினி கடற்படை வசம் இருந்தது. பிறகொரு நாள் குமுதினியைப்பொறுப்பெடுக்குமாறு கடற்படை அறிவித்தது. மீளவும் குமுதினிபொறுப்பேற்கப்பட்டது. இதன் பின் குமுதினி ஊர்காவற்றுறைக்கு கொண்டு செல்லப்பட்டு யாழ்ப்பாணம் புரோமோட்டஸ் நிறுவனத்தால் அதற்கு காப்பு செப்புத்தகடு அடிக்கப்பட்டது. அதாவது குமுதினியின் கடலில் மூழ்கும் பகுதியில் நீர்உட்புகாமல் கடல்புழுக்கள் அதன் மரத்தை அரிக்காமல் அடிப்பது இந்த செப்புத்தகடு. மற்றப்படகுகளில் இதற்கு குங்கிலியம் சீமெந்து ப+சுவார்கள். அதை காறை என்பார்கள். இந்திய இழுவைப்படகுகளில் பைபர்கிளாஸ் பூசுவார்கள். இது வேறு படகுத்தொழில்நுடபம்.புரோமோட்டஸ் செப்புத்தகடு அடித்தபின்னர் குமுதினிக்கு வண்ணமாற்றம் செய்யப்ட்டது. அப்போது குமுதினிக்கு ஸ்ரீலங்கா கடற்படை படகுகளின் கடும் நீல வண்ணமே இருந்தது.அந்த வண்ணம் மாற்றபட்டு வெள்ளை வண்ணம் அதற்கு பூசப்பட்டது. வெள்ளை நிறம் கடலில் அது மக்களின் பயணப் படகு என்பதை தெளிவாகக் காட்டுவதற்காகும். 1990ல் ஸ்ரீலங்கா கடற்படை குமுதினி கைப்பற்றப்படுகையில் அது வெளிர்நீல நிறத்தைக் கொண்டிருந்தது. 1998ல் மீளவும் குமுதினி நெடுந்தீவுக்கான பயணத்தை ஆரம்பித்தது. அப்போது குறிகாட்டுவான்துறை கடற்போக்குவரவுக்கு ஸ்ரீலங்கா கடற்படையால் தடை செய்யப்பட்டிருந்து.இதற்குகாகரணம் .குறிகாட்டுவானில் இருந்து யாழ்ப்பாணம் செல்ல புங்குடுதீவு வழியாகவே செல்ல வேண்டும்.அப்போது புங்குடுதீவு முழுதாக ஸ்ரீலங்கா கடற்படையிடம் இருக்கவில்லை.அது விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலும் இருப்பதாகவும் மக்கள் அங்கு சென்றால் விடுதலைப்புலிகளுடன் தொடர்பு கொண்டு விடுவர் என்று குறிகாட்டுவான் இறங்குதுறையை போக்குவரவுக்கு தடை செய்த ஸ்ரீலங்கா படையினர் சகல போக்குவரவுகளையும் ஊர்காவற்றுறை இறங்குதுறைக்கு மாற்றினர்.1996 முதல் இதனை படையினர் நடைமுறைப்படுத்தினர். இதனால் மக்கள் ஊர்காவற்றுறை சென்று அங்கிருந்தே யாழ்ப்பாணம் செல்லவேண்டியிருந்தது. அப்போது குமுதினி நெடுந்தீவுக்கு பயணிகளை கொண்டு சென்று விட்டு மாலை வேளையில்அது நயினாதீவு கடற்படை இறங்குதுறையில் நிறுத்தப்படவேண்டும் என கடற்படையினால் கட்டளையிடப்பட்டது.அதன்படி மாலையில் அது நயினாதீவு சென்று காலையில் ஏழு மணிக்கு முன்பாக நெடுந்தீவு மாவலித்துறைக்கு சென்று திரும்ப பயணிகளுடன் ஊர்காவற்றுறைக்கு திரும்பும் இடர் பயணத்தை மேற்கொண்டது. இதேவேளை நெடுந்தீவு மாவலித்துறை ஈ.பி.டி.பி தேசவிரோத சக்திகளின் பிடியில் இருந்தது. இவர்கள் மாவலித்துறையை சூழ தமது நிலைகளை அமைத்திருந்தனர் .அதனால் மாவலி இறங்குதுறையை மக்கள் பயன்படுத்த ஈ.பி.டி.பி.யினர் தடைவிதித்தனர் .இதனால் மக்கள் இறங்குதுறைக்குச் செல்லமுடியாமல் இறங்குதுறையின் வெளிப்புறச்சுவரின் வழியாக கரடுமுரடுமுருகைக்கல்மதில் மீது ஏறி நடந்து ஆற்றுக்கட்டை எனப்படும் இறங்குதுறை நுழைவாயிலுக்கு சென்றே குமுதினியில் அல்லது போக்குவரவுப்படகில் ஏறவேண்டும்.ஒரு பக்கம் அலையெறியும் ஆழக்கடல் மறுபக்கம் இறங்குதறைமுகம். இதற்கு நடுவிலான சுவரில் ஏறியே மக்கள்படகில்ஏறிப்பயணிக்கவேண்டும்.இந்த இடர்பயணம் ஆண்டுக்கணக்கில் 1996 முதல் மக்களால் அனுபவிக்கப்பட்டது. இடையில் குமுதினி பழுதடைந்து இறங்குதுறையில் தரித்து நின்றது.அவ்வேளை குமுதினி ஈ.பி.டி.பி.யினரால் பிடிக்கப்படுவோர் அடைத்து வைக்கும் வதைமுகாமாகவும் இருந்தது. இறங்குதுறையில் குமுதினி கடல்நீரின் நடுவில் நின்றது.அதனால் அதனுள் அடைத்துவைக்கப்படுவோர் அதலிருந்து தப்பமுடியாது. இதனால் அங்கு ஈ.பி.டி.பியால் பிடிக்கப்படுவோர் அடைத்து வைக்கப்பட்டனர்.அவர்கள் அதனுள் வதைக்கப்பட்டனர். அவ்வாறு வதைபடுவோர் எழுப்பும் அவல ஒலி குமுதினியையும் தாண்டி மாவலித்துறையிலும் பெரும் கடலிலும் எதிரொலிக்கும்.அப்படி ஒரு வதைமுகாமாகவும் குமுதினி வரலாற்றில் இயங்கியது.இந்த ஈ.பி.டி.பியின் வதைகளுக்கு முற்றுப்புள்ளிவைக்கும் ஒரு நாள் அந்த தீவில் வந்தது. 7 1998ம் ஆண்டு நெடுந்தீவு மாவலித்துறையில் ஈ.பி.டி.பி தேசவிரோதிகள் முகாமில் தம்மை அசைக்கமுடியாது என்று இறுமாந்திருந்தனர்.இதற்கு வேட்டு வைக்கும் வகையில் அன்று விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்துவதற்காக படகு ஒன்றில் வந்து மாவலித்துறைக்கு அருகாக தரையிறங்கினர்.இருளோடு இருளாக நகர்ந்து வந்து காலைவேளை அந்த முகாம் மீது திடீர்த்தாக்குதலை நடத்தினர். அந்த தாக்குதலால் நிலைகுலைந்த ஈ.பி.டி.பியினர் அங்கிருந்து ஓடத்தொடங்கினர். அவர்களின்முகாம் எரியூட்டப்பட்டது. அவர்களில் இருவர் கொல்லப்பட்டனர். தாக்குதலை விடுதலைப்புலிகள் நடத்தியவேளை அவர்களுக்கு உதவ உடனடியாக ஸ்ரீலங்கா கடற்படையினர்வரவில்லை. அவர்களால் உடனடியாக வரவும் முடியாது. ஏனெனில் அந்த தனித்த ஆழ்கடலில் கடற்புலிகளிடம் தாம் மாட்டிக்கொண்டால் தப்பமுடியாது என்ற பயம்தான். அதனால் அவர்கள் தப்பித்துக்கொள்ள முடியாது மக்கள்குடியிருப்புகளை நோக்கி ஓடினர்.அந்த தாக்குதலின் பிறகுதான் மாவலித்துறை விடுதலை பெற்றது. ஆம் அங்கிருந்து ஈ.பி.டி.பி.யினர் மக்கள் குடியிருப்புகள் உள்ள இடங்களில் முகாம்அமைத்தனர். அப்போது தமது துணைப்படையான ஈ.பி.டி.பியினர் அங்கு தமக்குப்பதிலாக நிலைகொள்ளவேண்டும் என்பதற்காக அடுத்தடுத்த நாட்களில் ஸ்ரீலங்கா கடற்படையினர் நெடுந்தீவில் நிலைகொண்டனர்.ஒரு மாத காலமளவில் நிலைகொண்ட அவர்கள் பிறகு அச்சம்மிகுந்தவர்களாக அங்கிருந்து நயினாதீவுக்கு சென்றுவிட்டனர்.இதற்கிடையில் நெடுந்தீவில் போராளி ஒருவர் காட்டிக்கொடுப்பவன் ஒருவனால் உணவளிப்பதாக அழைத்துவந்து கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது. அதே போல் புங்குடுதீவிலும் இவ்வாறு போராளி ஒருவர் காட்டிக்கொடுக்கப்பட்டு கொல்லப்பட்டார். இந்த துரோகிகளுக்கு தண்டனை கொடுக்கும் வகையில் புங்குடுதீவில் தேசத்துரோகிகளின் முகாம் விடுதலைப்புலிகளால் தாக்கியழிக்கப்பட்டது. 1998 ஜனவரி 23 ம் திகதி புங்குடுதீவு ஈ.பி.டி.பி முகாம் தாக்கி அழிக்கப்பட்டது. இதில் ஒன்பது பேர் ஈ.பி.டி.பியினர் கொல்லப்பட்டனர். அவர்களில் எட்டுப்பேர் அப்போது நடைபெறவிருந்து உள்ளுராட்சி தேர்தலில் ஈ.பி.டி.பியினரால் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டவர்களாவர். இந்த தாக்குதல் புங்குடுதீவில் அவர்களின் அட்டகாசத்தை குறைத்தது. நெடுந்தீவில் அட்டகாசத்தை ஒரு அளவுக்கு மட்டுப்படுத்தியது. இந்த தேசவிரோதிகளின் பிடியிலிருந்து மாவலித்துறை விடுதலைபெற்றதன் மூலம் குமுதினியும் வதை முகாமாக இருந்து விடுதலைபெற்றது.அ த் பின் குமுதினி திருத்தம் பெற்று மீள போக்குவரவில் ஈடுபடத்தொடங்கியது. இதற்கிடையில் 2000 ஆண்டு காரைநகர் ஸ்ரீலங்கா கடற்படைத்தளத்தை அதிகம் பலப்படுத்தும் நோக்கில் கடற்கோட்டைமுதல் ஊர்காவற்றுறை வரையான கடற்பகுதியை அதிஉயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தி அங்குபயணிகள் படகுகள் வருவதை ஸ்ரீலங்கா கடற்படை தடைசெய்திருந்தது.ஆனால் அந்தப்பயணிகள்லோஞ்சுகள் குறிகாட்டுவானுக்கு செல்லவும் ஸ்ரீலங்கா கடற்படை தடை செய்திருந்தது.இந்த நிலையில் மக்கள் லோஞ்சுகள் செல்லஇறங்குதுறை தேவைப்பட்டது. ஊர்காவற்றுறையில் கரம்பன் என்ற கிராமத்தின் கடற்கரையில் பழைய கண்ணகை அம்மன்கோயில் ஒன்று இருக்கின்றது. ஆண்டுக்கொருமுறைநிகழும் பொங்கல் மூலமே இவ் ஆலயம் அறியப்பட்டிருந்தது.அந்த இறங்குதுறை தேசவிரோதிகளின் பயன்பாட்டில் இருந்து வந்தது. கடற்படை தனது பாதுகாப்புக்காக அவர்களை எப்பொழுதும் தனதுதளங்களுக்கருகில் இருக்கவிடுவதில்லை. அவர்களை அந்த விடயத்தில் கடற்படை எட்டவே வைத்திருந்தது. இதனால் தான் ஈ.பி.டி.பியினருக்குகண்ணகை அம்மன்கோயிலடியில் இறங்குதுறையை அமைக்க அனுமதித்திருந்து. ஊர்காவற்றுறை இறங்குதுறைக்கு லோஞ்சுகள் நுழைவதற்கு தடை விதித்த கடற்படை லோஞ்சுகளை அணைவதற்கான துறையாக கண்ணகை அம்மன்கோயில் துறையை தெரிவு செய்து அங்குதமது பெரிய முகாமை அமைத்து ஈ.பி.டி.பியை வெளியேற்றிவிட்டு தாம் அங்கு நிலைகொண்டனர். ஆனால் ஈ.பி.டி.பியினர் மக்களுக்கு தாம் அமைத்துக்கொடுத்த இறங்குதறை என்ற அரசியல் நாடகத்தை அரங்கேற்றினர். அது அப்படி அல்ல. ஸ்ரீலங்கா கடற்படைக்கு மக்களின் இறங்குதுறையை அபகரித்து வசதியற்ற ஆழமற்ற இந்த துறையை தயாhர் செய்து கொடுத்துள்ளது. இதுதான் உண்மை. இந்த நிலையில் குமுதினியும் ஆழமற்ற இந்த இறங்குதுறைக்கு போக்குவரவு செய்ய ஆரம்பித்தது. ஆழமற்ற காரணத்தால் குமுதினி அடிக்கடி போக்குவரவில் ஈடுபடமுடியாத நிலைமை காணப்பட்டது. 2002 வரை இந்த அவலமே காணப்பட்டது. 2002 போர்நிறுத்தஉடன்பாடு வந்த பின்னர் தான் குறிகாட்டுவான் இறங்குதுறையை ஸ்ரீலங்கா கடற்படை போக்குவரவுக்கு திறந்து விட்டது. அந்த உடன்பாட்டின் பிறகும் குமுதினி அடிக்கடிபழுதடைந்து போக்குவரத்தில் ஈடுபட்டுக்கொண்டுதான் இருக்கின்றது. அந்த மிதக்கும் போர்நினைவுச்சின்னம் தமிழரால் பாதுகாக்கப்படவேண்டிய அரும்பொருளாகும்.எமது வரலாற்றில் அது மிதக்கும் ஒரு 'ஒஸ்ட்விச்" முகாமாக அலைந்து கொண்டிருக்கிறது. நன்றி>எரிமலை.