02 August, 2006

மூதூரில் முக்கிய சிங்கள இராணுவ முகாம்கள் தகர்ப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் சம்பூர் முன்னரங்க காவல் நிலைகளிலிருந்து 800 மீற்றர் தொலைவில் உள்ள சிங்கள இராணுவத்தின கட்டைப்பறிச்சான் மற்றும் பலாத்தோப்பு, பச்சானூர் ஆகிய முகாம்கள் தகர்க்கப்பட்டு சிங்கள இராணுவத்தினர் ஓட ஓட விரட்டியடிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து காந்திநகர், பலாத்தோப்பு, தோப்பூர், செல்வநகர் ஆகிய சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்த மூதூர் பகுதிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் மீட்டனர். தற்போது மகிந்தபுரம் பகுதியில் மோதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான சம்பூரில் சிங்கள விமானப் படையின் கிபீர் ஜெட் விமானங்கள் குண்டு வீசி வருகின்றன. மேலும் மாவிலாறு அணைக்கட்டை ஆக்கிரமிப்பதற்காக கல்லாறு பகுதியில் நடத்தி வந்த மோதலை சிங்கள இராணுவம் கைவிட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன. திருமலை சமரினால் திருகோணமலை துறைமுகத்தில் உள்ள சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான எண்ணெய் கிடங்குகள் மற்றும் இந்திய பெற்றோலிய நிறுவனத்திடம் தற்போதும் கைவசம் உள்ள எண்ணெய்க் குதங்கள் ஆகியவற்றுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று சிறிலங்கா பெற்றோலியத்துறை அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்துள்ளார். நன்றி>புதினம்.

0 comments: