31 July, 2006

புலிகளிடம் செஸ்னா ஸ்கை மாஸ்டர் ரக விமானங்கள்.-இந்தியா.

தமிழீழ விடுதலைப் புலிகளிடம் செஸ்னா ஸ்கை மாஸ்டர் வகையைச் சேர்ந்த மேலும் இரண்டு இலகுரக விமானங்கள் இருப்பதாக இந்திய புலனாய்வுத்துறையின் ஊடாக சிறிலங்கா அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாக கொழும்பு நாளேடொன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த இரண்டு விமானங்களும் இரண்டு தடவை வானில் அவதானிக்கப்பட்டுள்ளதுடன் ஒருதடவை வவுனியா விமானப்படை தளத்தில் உள்ள ரேடாரில் பதிவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்திய அரசினால் வழங்கப்பட்ட இந்திரா எனும் ரேடார் கருவிகள் வடமத்திய மாகாணத்தில் பொருத்தப்பட்டிருப்பதனால் விடுதலைப் புலிகளின் விமானப்படை பிரிவு பற்றிய தகவல்களை கண்டறியக் கூடியதாக உள்ளதாகவும் அந்த நாளேட்டின் செய்தி மேலும் தெரிவித்துள்ளது. இணைப்பு : newstamilnet.com Monday, 31 Jul 2006 USA

1 comments:

said...

பாக்கிஸ்தானிடம் இலங்கை கேட்க இந்தியா வழங்கிவிட்டது போல