09 July, 2006

போர் நிறுத்தத்தை முறித்துக் கொள்ள விரும்புகின்றனரா?:

போர் நிறுத்தத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் முறித்துக் கொள்ள விரும்புகின்றனரா? என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவர் உல்ப் ஹென்றிக்சன் கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது: போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தினர் செப்ரெம்பர் 1 ஆம் நாளுக்கு முன்னதாக வெளியேற வேண்டும் என்ற விடுதலைப் புலிகளின் கோரிக்கைக்கு மூல காரணம் எதுவும் இல்லை. அவர்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள விரும்புகின்றனரா? விடுதலைப் புலிகளின் நிபந்தனையை இப்படியாகத்தான் அர்த்தம் கொள்ள வேண்டியதிருக்கிறது. நாங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் அல்ல. அவர்களது வாதம் காரணமற்றது. இது விடயத்தில் ஒருதரப்பும் மட்டும் முடிவெடுக்க முடியாது. இது இருதரப்பு ஒப்பந்தம். நீங்கள் இதனை கடைப்பிடிக்கலாம் அல்லது விலகலாம். விடுதலைப் புலிகளின் நிபந்தனை குறித்து எதிர்வரும் நாட்களில் மேலும் சில விளக்கங்கள் கோரப்படும். எதிர்கால செயற்திட்டம் தொடர்பான அனைத்து கேள்விகளுக்குமே பதில் அளித்துவிட முடியாது. செப்ரம்பெர் 1 ஆம் நாளுக்குப் பின்னர் விடுதலைப் புலிகள் எமது பாதுகாப்புக்கான உத்திரவாதத்தை அளிக்காவிட்டால் அரசாங்கம் என்ன செய்யுமோ செய்வார்கள். செப்ரெம்பர் 1 க்குப் பின்னர் விடுதலைப் புலிகள் சினைப்பரை அனுப்புவார்கள் என்று நாம் அச்சம் கொள்ளவில்லை. பிரச்சனைக்கு இதுவரை தீர்வு காணவில்லை. இருப்பினும் பல்வேறு அம்சங்கள் தொடர்பில் விவாதித்து வருகிறோம் என்றார் ஹென்றிக்சன். இதனிடையே போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைமை அதிகாரி டோமி லகென்மியரின் பணிக்காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. இந்த நிலையில் விடுதலைப் புலிகளின் நிபந்தனையின் படி ஹென்றிக்சன் விலகிச் சென்றால் புதிதாக நியமிக்கப்பட உள்ள தலைமை அதிகாரியே கண்காணிப்புக் குழுவின் பதில் தலைமை அதிகாரியாக செயற்படக்கூடும் என்றும் கூறப்படுகிறது. நன்றீ>புதினம்.

2 comments:

Anonymous said...

pls write in Webulagam Debate.
some fools attack Ceylon tamils.
visit:www.webulagam.com

germany

said...

வணக்கம் அனானி வரவுக்கு நன்றி.