06 July, 2006

ஒட்டுக்குழுக்களை கட்டுப்படுத்த இந்தியா அழுத்தம்.

கருணா குழு உட்பட ஒட்டுப் படைகள் இயங்குகின்றன என்றும், அவற்றின் தொல்லைகள் தாங்க முடியாமல் இருக்கின்றன என்றும் தமிழர் தரப்பில் பரவலாகக் குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்படுகின்றன. எனவே, அவை போன்ற ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகளை அடக்குவதன் மூலம் அரசியல் இணக்கப்பாட்டுக்கான புறச்சூழலை ஏற்படுத்துவதில் இலங்கை அரசு தீவிர முயற்சி எடுக்க வேண்டும். இவ்வாறு இலங்கையை இந்தியா கோரியிருக்கின்றது என யாழ் உதயன் பத்திரிகை செய்திவெளியிட்டுள்ளது. அதில் மேலும்தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இலங்கையில் ஒன்றரை நாள் விஜயமாக கடந்த திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் கொழும்புக்கு வந்து தங்கியிருந்த இந்திய வெளியுறவுச் செயலாளர் ஷியாம் சரண், இத் தகைய செய்தியை இந்தியத் தரப்பிடமிருந்து எடுத்து வந்து இலங்கை அரசுக்குத் தெரிவித் தார் எனக் கூறப்படுகின்றது. கடந்த திங்களன்று காலையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சாவை ஷியாம் சரண் சந்தித்தார். பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்த செய்தியை அப்போது ஷியாம் சரண் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சாவிடம் தெரி வித்தார். அந்தச் செய்தியிலேயே கருணா குழு உட்பட ஏனைய ஒட்டுக்குழுக்கள் மற்றும் துணைப்படைகள் போன்றவற்றின் நடவடிக்கைகளை அடக்கி, அமைதித் தீர்வுக்கான சூழ்நிலையை ஏற்படுத்தக்கோரும் வலி யுறுத்தல் அடங்கியிருந்ததாகத் தெரியவந்தது. ""ஏற்கனவே, ஒரு விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் போதும். இன்னொரு புலிகள் அமைப்பை விருத்தி செய்வதற்கு வழி செய்து உபத்திரவத்தைத் தேடிக்கொள்ளாதீர்கள்'' என்ற சாரப்பட அன்புரிமையுடன் கூடிய ஆலோசனை இந்தியத் தரப்பினால் இலங்கை ஜனாதிபதிக்குத் தெரியப்படுத்தப்பட்டதாம். ""புலிகளை மரபு ரீதியான யுத்தத்தில் தோற்கடித்து விடலாம் என்ற தயாரிப்பில் இலங்கை அரசுத் தலைமை முனைப்பாக இருக்கலாம். ஆனால், மீண்டும் போர் வெடித்தால் மரபு ரீதியான யுத்தத்துக்கு அப்பாற்பட்ட வழிகளையும் புலிகள் நாடலாம். அதற்கும் சாத்தியங்கள் உள்ளன. அதன் மூலம் இலங்கை அரசைப் புலிகள் கணிசமான அளவில் முடக்கவும் வாய்ப்புண்டு'' என்ற எச்சரிக்கையும் இந்தியத் தரப்பால் தெரிவிக்கப்பட்டதாம். ஈழத் தமிழர் விவகாரத்தில் தற்போது தமி ழகத்திலும், புதுடில்லியிலும், ஏனைய இந்தியப் பிரதேசங்களிலும் நிலவும் உணர்வு நிலைதான் எப்போதும் தொடரும் என எதிர் பார்க்க முடியாது. இலங்கையில் யுத்தம் வெடித்து, தமிழர்கள் பாதிக்கப்படும்போது இந்தியாவில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உணர்வு நிலை தலைகீழாக மாறி, எழுச்சி கொள்ளும் ஆபத்தும் உண்டு என்ற விடய மும், அத்தகைய நிலைமையின் விபரீதமும் கூட இலங்கை அரசுத் தலைமைக்குத் தற்போது விளக்கமாக இந்தியத் தரப்பால் எடுத்துக் கூறப் பட்டதாகத் தெரிகின்றது. இந்தியா மட்டுமல்ல, சர்வதேச உலகமுமே ஓர் அரசியல் தீர்வுத் திட்டத்தை இலங்கை அரசிடமிருந்து எதிர்பார்க்கின்ற நிலைமை தான் இப்போதுள்ளது. எனவே, தனது திட்டத்தை வெளிப்படுத்தாமல் இலங்கை அரசு இனிமேலும் காலத்தை இழுத்தடிக்கக் கூடாது. சமஷ்டி அடிப்படையிலான அல்லது அதை ஒத்த ஒரு தீர்வு யோசனையை அரசுத் தரப்பு முன்னெடுப்பது இலங்கை அரசுக்கு சர்வதேச ஆதரவை அதிகரிக்கச் செய்யும் என்றும் இந்தியத் தரப்பில் எடுத்துக்கூறப்பட்டதாம். யுத்தம் தீர்வல்ல. அரசியல் இணக்கப் பாட்டுக்கு முயலுங்கள். நோர்வேயின் அனு சரணைப் பணியை முழு அளவில் பயன் படுத்த எத்தனியுங்கள். நோர்வேயை விட அனுசரணைப் பணிக்கு வேறு பொருத்தமான மாற்றுத் தரப்பு இல்லை. இப்படி இந்தியா மேலும் வலியுறுத்தியதாகவும் தெரிகின்றது. நன்றி<பதிவு.

0 comments: