28 July, 2006

சிறீலங்கா விமானத் தாக்குதலானது போர் நிறுத்த மீறலாகும்.

சிறீலங்கா விமானத் தாக்குதலானது போர் நிறுத்த மீறலாகும் - கண்காணிப்புக் குழு. விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளுக்குள் நேற்று வியாழக்கிழமை சிறீலங்கா வான்படையினர் நடத்திய தாக்குதல்கள் யுத்த நிறுத்த மீறல் என கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. சிறீலங்கா வான்படையினரின் தாக்குதல் குறித்து கருத்துத் தெரிவித்து கண்காணிப்புக் குழு பேச்சாளர் ஒமர்சன் விடுதலைப் புலிகளின் ஆளுகைக்கு உட்பட்ட முல்லைத்தீவு மற்றும் திருமலையிலும் நடத்தப்பட்ட விமானத் தாக்குதலானது போர் நிறுத்த உடன்படிக்கையின் சரத்துக்களின் படி அரசாங்கம் யுத்த நிறுத்த மீறலை செய்துள்ளதாக ஒமர்சன் தெரிவித்துள்ளார். இதுகுறித்த முழுமையான அறிக்கை ஒன்றை தாயாரித்துக்கொண்டிருப்பதாகவும் விமானத் தாக்குதல் குறித்து விடுதலைப் புலிகள் இதுவரை முறைப்பாடு எதனையும் செய்யவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். -பதிவு-

0 comments: