30 July, 2006

திருமலையில் படைநகர்வு ஆரம்பம் உக்கிர மோதல்கள்.

திருமலையில் படைநகர்வு ஆரம்பம் உக்கிர மோதல்கள் புலிகளால் முறியடிப்பு. திருமலை ஈச்சிலம்பற்று மாவியாற்றைக் கைப்பற்றும் நோக்குடன் சிறீலங்காப் படையினர் பாரியளவிலான வலிந்த தாக்கும் படை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. இன்று பகல் வான்படையினரின் உதவியுடன் கிபீர் குண்டு வீச்சு விமானங்கள் குண்டுகளைப் போட கல்லாறுப் பகுதியிலிருந்து மாவிலாறு பகுதியை நோக்கி பாரிய படை நகர்வை சிறீலங்கா படையினர் மேற்கொண்டுள்ளனர். எனினும் விடுதலைப் புலிகளால் படையினரின் நகர்வு நோக்கியும் இராணுவ முகாங்கள் நோக்கியும் மூர்க்கமான எறிகணைத் தாக்குதி படையினரின் படையினரின் படைநகர்வை சூனியப் பிரதேசத்தில் வைத்து விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். அத்துடன் சூனியப் பிரசேத்தில் விடுதலைப் புலிகளால் நிலக்கண்ணிகளும் பொறிவெடிகளும் வெடிக்க வைக்கப்பட்டுள்ளதை அடுத்து படையினரின் முன்னேற முடியாது திணறுகின்றனர். இதேவேளை சூனியப் பிரசேத்தின் ஊடாக முன்னேற முயற்சிக்கும் சிறீலங்கா படையினரை இலக்கு வைத்து விடுதலைப் புலிகளின் சிறப்பு அணிகளால் துப்பாக்கி சூட்டுவலுவை வழங்குகின்றனர். விடுதலைப் புலிகளின் எறிகணை வியூகத்தை கடந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள் செல்லாது முடியாது படையினர் திணறுகின்றனர். படையினரின் படைநகர்வை தடுத்து நிறுத்திய விடுதலைப் புலிகள் திருமலையில் உள்ள சிறீலங்கா இராணுவ முகாம்களை நோக்கி மூர்க்கமான எறிகணைத் தாக்குதல்களை நடத்துகின்றனர். நன்றி>பதிவு

0 comments: