06 July, 2006

புலிகள்மீது தாக்குதலைநடத்த சரியான நேரம் இது-சோமவன்சா.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீது இராணுவத் தாக்குதலை நடத்த சரியான நேரம் இது என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்தவுக்கு ஜே.வி.பி. கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க யோசனை தெரிவித்துள்ளார். கொழும்பு நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற ஜே.வி.பி.யின் சிறப்பு மாநாட்டில் சோமவன்ச அமரசிங்க பேசியதாவது: அரசாங்கத்தில் இணைய வேண்டும் என்று பலமுறை எங்களுக்கு மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். இது விடயத்தில் எங்களுக்குச் சில கருத்துகள் உண்டு. தனது செயற்பாடுகளின் மூலம் மகிந்த ராஜபக்ச தன்னை நிரூபிக்க வேண்டும்.நாட்டினது தற்போதைய மோசமான பாதுகாப்பான சூழ்நிலை உட்பட அரசாங்கத்தை ஆதரிக்க போதுமான காரணங்கள் உள்ளன. பயங்கரவாதத்தை தோற்கடிக்க வேண்டுமெனில் எது பயங்கரவாதம் என்பதை மகிந்த ராஜபக்ச தெளிவாக அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். யுத்தத்தின் அடிப்படையே தாக்குதலும் தற்காப்பும்தான். நம்மை தற்காத்துக் கொள்ளுவதன் மூலம் மட்டுமே பயங்கரவாதத்தைத் தோற்கடித்துவிட முடியாது. இப்போது இராணுவத் தாக்குதல்களுக்கு அரசாங்கம் மாற வேண்டிய அதி உச்ச நேரம் இது.இந்த நாட்டின் தலைவர் என்கிற வகையில் மக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மகிந்தவுக்கு உண்டு. அனைத்து சர்வதேச மற்றும் உள்நாட்டு சக்திகளும் தனிஈழத்தை அமைப்பதற்காக விடுதலைப் புலிகளை ஆதரிக்கின்றனர். சிறிலங்காவை ஒரு தோல்வியடைந்த நாடு என்று அமெரிக்காவின் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளமை குறித்து சந்தேகங்கள் உள்ளன. சூடான், சோமாலியா நாடுகளின் நிலைமை வேறானவை. இந்த நிலையில் மகிந்த ராஜபக்சவை நாங்கள் பாதுகாப்போம். அவருக்கு ஏதேனும் நிகழ்ந்தால் ஒரு ஆட்சியாளர் இல்லாத தோல்வியடைந்த நாடாகத்தான் நிச்சயம் சிறிலங்கா உருவாகும். உள்நாட்டில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சி செயற்படுகிறது. சிறிலங்காவில் தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்யாதிருப்பது முட்டாள்த்தனமானது. விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் களையப்படும் வரை பேச்சுக்களுக்கு அரசாங்கம் செல்லக் கூடாது. தற்போது அவர்கள் அமைதிப் பேச்சுக்கள் மூலமான தீர்வுக்கு தயாராக இல்லை என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழீழ விடுதலைப் புலிகளிடம் உள்ள சிறார்கள் மற்றும் இளைஞர்கள் அதிலிருந்து விலகினால் அவர்களுக்கு முறையான கல்வி மற்றும் வேலைக்கான உத்திரவாதத்தை அரசாங்கம் அளிக்க வேண்டும். அவர்கள் விலகிவந்தால் அந்த இளைஞர்களுக்காக எமது ஜே.வி.பி. உறுப்பினர்கள் தங்களது பணிகளை தியாகம் செய்வதில் இரண்டாம் கருத்துக்கே இடமில்லை என்றார் சோமவன்ச அமரசிங்க. இக்கூட்டத்தில் இனப்பிரச்சனை தொடர்பான 5 தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டன. இனப்பிரச்சனையானது உள்நாட்டுப் பிரச்சனை- உள்நாட்டு விடயத்தில் சர்வதேச சக்திகள் தலையிட அழைக்கக் கூடாது- நாட்டினது இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக உள்ள சக்திகளுக்கு எதிராகப் போராட வேண்டும் என்று அன்று அந்த தீர்மானங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது. நன்றி>பதிவு.

3 comments:

Anonymous said...

EElabarathi!

pls. visit :www.webulagam.com.
some dogs barking against to EELAM and LTTE.
pls. use this chance to explain our trouble to TamilNadu.
thank u

Anonymous said...

நாயின் குரைப்புகள் புலிகளை ஒன்றும் செய்து விட முடியாது"...

said...

அனானி, மீனா வரவுக்கு நன்றி.