01 July, 2006

பாலசிங்கத்தின் கூற்று குழப்பகரமாக உள்ளது - கருணாநிதி.

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை மிகப் பாரியதொரு வரலாற்றுத் துன்பியல் நிகழ்வு என்று விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் தெரிவித்திருக்கும் கருத்து குழப்பகரமானதாகவும் எதுவுமே தெளிவற்றதாகவும் இருப்பதாக தமிழக முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி கூறியிருக்கிறார். இந்தியாவின் என்.டி.ரி.வி. தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த கலாநிதி பாலசிங்கம் தெரிவித்த கருத்துக் குறித்து கருணாநிதியிடம் `இந்து' பத்திரிகையின் செய்தியாளர் நேற்று வெள்ளிக்கிழமை அபிப்பிராயம் கேட்டபோது, பாலசிங்கம் கூறியிருப்பதை விடுதலைப் புலிகளே மறுதலித்திருக்கிறார்கள். அவரது கூற்று குழப்பகரமானது. எதுவுமே தெளிவில்லை என்று பதிலளித்துள்ளார். நன்றி>பதிவு.

0 comments: