03 July, 2006

ஐரோப்பியத் தடை தவறு, அயர்லாந்து தலைவர் மக்கன்ஸ்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பியத் தடையானது பாரிய தவறு என்று வட அயர்லாந்து விடுதலை அமைப்பின் முன்னாள் தலைவர் மக்கன்ஸ் தெரிவித்துள்ளார். வட அயர்லாந்து விடுதலை அமைப்பான ஐ.ஆர்.ஏயின் முன்னாள் தலைவரும் அதன் அரசியல் பிரிவான சின்பெய்ன் பிரதிநிதியுமான மார்ட்டின் மக்கன்னஸ் கிளிநொச்சியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளை இன்று திங்கட்கிழமை சந்தித்துப் பேசினார். கிளிநொச்சியில் உள்ள விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தில் இன்று முற்பகல் 11 மணியளவில் இச்சந்திப்பு நடைபெற்றது. விடுதலைப் புலிகளின் தரப்பில் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், சமாதான செயலகப்பணிப்பாளர் சீ.புலித்தேவன் ஆகியோர் இச்சந்திப்பில் பங்கேற்றனர். இச்சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் மக்கன்ஸ் கூறியதாவது: நாம் அயர்லாந்திலிருந்து வந்திருக்கிறோம். உலகில் மிகவும் வெற்றிகரமான அமைதிப் பேச்சுவார்த்தையை நாம் நடத்தியிருக்கிறோம். எமது சின்பெய்ன் இயக்கத்தின் அனுபவங்களை தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மட்டுமல்லாது சிறிலங்காத் தரப்பினருடனும் பகிர்ந்து கொள்ள உள்ளோம் எம்மீது பிரித்தானியா பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடை விதித்திருந்த நிலையில்தான் நாம் பேச்சுக்களை நடத்தினோம். அயர்லாந்து விடுதலை அமைப்பான ஐ.ஆர்.ஏ.வில் 1970 ஆம் ஆண்டில் தனது 20 ஆவது வயதில் மக்கன்ஸ் தன்னை இணைத்துக் கொண்டார். ஐ.ஆர்.ஏவின் இரண்டாம் நிலை தலைவராக 21 வயதில் பொறுப்பேற்றார். அயர்லாந்து விடுதலை அமைப்பான சின்பெய்ன் இயக்கத்தில் மூத்த தலைவராக உருவான மக்கன்ஸ் 1972 ஆம் ஆண்டு பிரித்தானியாவுடன் நடந்த பேச்சுக்களில் பங்கேற்றார். அதன் பின்னர் 1994 ஆம் ஆண்டில் பிரித்தானியாவின் பல்வேறு பேச்சுக்களில் அவர் கலந்து கொண்டார். புதிய வட அயர்லாந்து சபையின் கல்வி அமைச்சராக 1999 ஆம் ஆண்டு நவம்பரில் தெரிவு செய்யப்பட்டார். நன்றி>பதிவு

0 comments: