13 July, 2006

தமிழர்களின் வங்கிக்கணக்குகளை முடக்க அரசாங்கம்முடிவு.

வடக்கு, கிழக்குப் பகுதிகளில் உரியவர்களால் பராமரிக்கப்படாமலிருக்கும் வங்கிக் கணக்குகளை அரசுடைமையாக்கும் நடவடிக்கைகளை இலங்கை வங்கி ஆரம்பித்துள்ளது. யாழ்.குடாநாட்டில் இந்த நடவடிக்கையை இலங்கை வங்கி ஆரம்பித்திருப்பதன் மூலம் குடா நாட்டிலிருந்து இடம்பெயர்ந்து வெளிமாவட்டங்களிலும் வெளிநாடுகளிலும் வாழும் பல்லாயிரக் கணக்கானோரின் பல கோடி ரூபா வைப்பு அரசுடைமையாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. யாழ் குடாநாட்டில் இதன் முதற்கட்டமாக அதி உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள மயிலிட்டி காசநோய் ஆஸ்பத்திரி வளவிலுள்ள கோயிலின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டு அரசுடைமையாக்கப் போவதாக இலங்கை வங்கி தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கில் பராமரிக்கப்படாதிருக்கும் வங்கிக் கணக்குகளையும் பாதுகாப்பு பெட்டகங்களிலிருக்கும் பணம் மற்றும் நகைகளையும் அரசுடைமையாக்கப் போவதாக மத்திய வங்கி அறிவித்திருந்தது. இதன் முதற்கட்டமாகவே மயிலிட்டி கோயில் கணக்குகளை முடக்கப் போவதாக இலங்கை வங்கி அறிவித்துள்ளது. பதிவு.கொம்

0 comments: