19 July, 2006

இந்தியாவில் சில இணையத்தளங்களுக்கு தடை.

இந்தியாவில் 50 மில்லியன் பேர் இணையங்களைப் பயன்படுத்துகின்றனர் இந்தியாவின் மும்பாய் நகரத்தில் கடந்த வாரத்தில் நடத்தபட்ட குண்டு தாக்குதலை அடுத்து, பல்வேறு வெப்சைட் எனப்படும் இணையங்களுக்கு மக்கள் சென்று பார்ப்பதினை தடுக்க, இந்திய அரசு நடவடிக்கை எடுத்து இருப்பதினை இந்தியாவில் இருக்கின்ற இணையத்தளப் பயன்பாட்டாளர்கள் குறை கூறியுள்ளனர். மும்பாய் நகரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இஸ்லாமிய தீவிரவாதிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஒரு குறிப்பிட்ட தலைப்பு தொடர்பாக, பல்வேறு இணைய பயன்பாட்டாளர்கள், தங்களுடைய கருத்துகளை வெளியிடும் ‘வெப்லாக்ஸ்’ அல்லது ‘ப்லாக்ஸ்’ என்று கூறப்படும் இணையங்களை எதற்காக தடை செய்ய முடிவு எடுக்கப்பட்டது என்பதினை அரசாங்கம் கூறவில்லை. ஆனால் வெறுப்பு உணர்வினை ஏற்படுத்தும் செய்திகள் பரவுவதினை தடுக்கவே அரசாங்கம் இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளதாக, அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் தெரிவித்துள்ளனர். அரசாங்கத்தினால் தற்போது தடுக்கப்பட்டுள்ள இணையங்களில், இந்து தேசியத்துவம் மற்றும் கம்யூனிஸத்திற்கு ஆதரவான இணையங்களும் அடங்கும். அரசாங்கத்தின் இந்த முடிவானது, பேச்சு சுதந்திரத்தின் மீது விடுக்கப்பட்டுள்ள தாக்குதல் என இத்தகைய இணையங்களை பயன்படுத்துபவர்கள் கூறுகின்றனர். நன்றி பி பி சி தமிழ்ச்சேவை http://www.eelabarathi.com

0 comments: