01 July, 2006

இலங்கைக்கு சர்வதேச மன்னிப்புச்சபை கண்டனம்.

அரசின் பொறுப்பற்ற போக்கால் மக்கள் அல்லல்படும் நிலைமை இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து கடும் விசனத்துடன் மன்னிப்புச்சபை அறிக்கை இலங்கையில் அதிகரித்து வரும் வன்செயல்கள், மனித உரிமை மீறல்கள் காரணமாக இடம் பெயர்ந்த மக்கள் மேலும் துன்பப்படுகின்றனர் எனத் தெரிவித்திருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபை, போதிய பாதுகாப்பை வழங்குவதற்கு அரசு தவறிழைத்து வருவதும், பொது மக்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்துவோரை இனங்கண்டு சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனைக்குட்படுத்துவதற்குத் தவறுவதும் சாதாரணமக்கள் மத்தியில் பய பீதியை ஏற்படுத்தி அவர்களைப் பெரும் அல்லல்பட வைத்துள்ளது என்றும் கடும் விசனத்துடன் சுட்டிக்காட்டியிருக்கிறது. லண்டனைத் தளமாகக்கொண்டியங்கும் மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பான சர்வதேச மன்னிப்புச்சபை கடந்த புதன் கிழமை இலங்கை நிலைவரம் தொடர்பாக விடுத்த அறிக்கை ஒன்றிலேயே இந்த விட யம் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. மன்னிப்புச் சபையின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: இடம்பெயர்ந்து வாழுகின்ற ஆறு லட் சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வன்செயல் களின் தீவிரம் காரணமாக இலங்கையில் பெரும் கஷ்டங்களுக்கு, வேதனைகளுக்கும் முகம்கொடுத்து வருகிறார்கள் என்றும், அவர் களின் இந்த அவல வாழ்வுக்கு விடுதலைப் புலிகளும், அரசாங்கம் மற்றும் இதர ஆயுதக் குழுக்களுமே காரணம் என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை லண்டனிலிருந்து வெளி யிட்டுள்ள பத்திரிகை அறிக்கையொன்றில் குற்றஞ்சாட்டியுள்ளது. வன்செயல்கள் தீவிரமடைந்ததன் காரண மாக கடந்த ஏப்ரல் 7 ஆம் திகதிக்குப் பின்னர், வடக்கு கிழக்கில் மட்டும் 40 ஆயிரம் பேர் இடம்பெயர நேர்ந்திருக்கிறது என்றும் அறிக்கையில் மன்னிப்புச் சபை சுட்டிக் காட்டி யிருக்கிறது. பெருகிவரும் வன்செயல்கள், இடம்பெய ரும் மக்கள் அலையைப் புதிதாகக் கிளப்பி யிருக்கிறது. மோதல்கள் காரணமாகவும், பேரலை அனர்த்தத்தாலும் ஏலவே இடம் பெயர்ந்து வாழும் ஆயிரக்கணக்கான மக் கள் மத்தியில் பெரும் பயப்பீதியையும், பாது காப்பற்ற தன்மையையும் இது ஏற்படுத்தி வருகிறது. போதிய பாதுகாப்பை வழங்குவதற்கு அரசு தவறிழைத்து வருவதும், பொதுமக் களுக்கு எதிரான தாக்குதல்களை மேற்கொள் வோரைக் கண்டறிந்து சட்டத்தின் முன் அவர் களை நிறுத்தித் தண்டனைக்கு உள்ளாவதை உறுதிப்படுத்துவதற்கு அரசு தவறுவதும், மக் கள் மத்தியில் பரந்துபட்ட அளவில் பெரும் பயத்தையும், பீதியையும் ஏற்படுத்தி வருகிறது. இதனை சர்வதேச மன்னிப்புச் சபை யின் ஆசிய பசுபிக் பணிப் பாளரான பூர்ணா சென் என்பவரே கூறுகிறார். சமீப சில மாதங் களாக நடந்த பாரிய தாக்குதல்கள் ஒவ்வொன் றும், மக்கள் மத்தியில் பெரும் கிலியை உண்டு பண்ணி, வீடு வாசல்களையும், கிராமங்களை யும் விட்டு வெளியேறி வேறு இடங்களில் அபயம் தேடி ஓட வைத்துள்ளன. இவ்வாறு இடம்பெயர்ந்து, முகாம்களி லும் வேறு புகலிடங்களிலும் வாழ்வோர் கூட, வன்செயல்களுக்கு முகம்கொடுக்க வேண் டிய பரிதாப நிலையிலேயே இருக்கிறார்கள். அத்தோடு, விடுதலைப் புலிகள் மற்றும் இதர ஆயுதக் குழுக்களினதும் ஏன் இலங்கை பாதுகாப்புப் படை உறுப்பினர்களினதும் தொல்லைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி யவர்களாகவும் இருந்து வருகின்றனர். கடந்த ஜூன் 17 ஆம் திகதி, பேசாலையி லுள்ள தோவாலயம் ஒன்றுக்குள் கைக்குண்டு கள் வீசப்பட்ட பொழுது, அங்கு புகலிடம் தேடிய பெண் ஒருவர் கொல்லப்பட்டார். வேறு 44 பேர் காயமடைந்தனர். இந்த கைக் குண்டுத் தாக்குதலை பாதுகாப்புப் படை உறுப்பினரே மேற்கொண்டார். இதனை நேரில் கண்டவர்கள் தெரிவித்திருக்கிறார் கள். சாட்சியமும் கூறியிருக்கிறார்கள். ஒரு முறை இடம்பெயர்ந்தோர் மீண்டும் மீண்டும் இடம்பெயரும் சம்பவங்கள் தொடர் வதால், மக்கள் மத்தியில் பாதுகாப்பு இல்லா உணர்வு அதிகரித்து வருவதும் அவதானிக் கப்பட்டிருக்கிறது என்று சர்வதேச மன்னிப் புச் சபை பிறிதொரு அறிக்கையில் தெரிவித் திருக்கிறது. இடம்பெயர்ந்த மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங் கத்தினுடையதாகும். ஐந்து லட்சத்துக்கு மேற் பட்ட மக்கள் இவ்வாறு உள்ளூரில் இடம் பெயர்ந்து இருக்கிறார்கள். நாட்டின் பாது காப்பு நிலைமை மோசமடைந்து வருவ தால், இந்த மக்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டிய கடப்பாடும் அரசுக்கே இருக்கிறது என்று பூர்னா சென் மேலும் தெரிவித்திருக் கிறார் என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது. நன்றி>உதயன்

0 comments: