28 July, 2006

உங்கள் முன்னால் குண்டுகள் வீசப்படுகின்றன!!!

உங்கள் முன்னால் குண்டுகள் வீசப்படுகின்றன, இப்போது என்ன கூறப்போகின்றீர்கள்?: கண்காணிப்புக் குழுவிடம் புலிகள் கேள்வி [சனிக்கிழமை, 29 யூலை 2006, 05:51 ஈழம்] [கொழும்பு நிருபர்] உங்கள் கண்முன்னாலேயே குண்டுகள் வீசப்படுவதை பாருங்கள். இது தொடர்பாக என்ன கூறப் போகின்றீர்கள் என்று திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவரிடம் கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக சி.எழிலன் கொழும்பு ஊடகமொன்றுக்கு கூறுகையில், இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவின் தலைவர் உலப் ஹென்றிக்சனுடன் நேற்று மாலை 3.30 மணியளவில் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தேன். எமது அலுவலகத்திற்கு 750 மீற்றர் தூரத்தில் விமானப்படை விமானங்கள் குண்டுகளை வீசின. உங்கள் கண்முன்னாலேயே குண்டுகள் வீசப்படுவதை பாருங்கள். இது தொடர்பாக என்ன கூறப் போகின்றீர்கள் என்று உலப் ஹென்றிக்சனிடம் கேட்டேன். உண்மை நிலைகளை தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறினேன். அரசாங்கத்துடன் பேசி முடிவெடுத்துவிட்டு வாருங்கள் என்று கூறி பேச்சுவார்த்தையை முறித்துக்கொண்டு அவரை வழியனுப்பிவிட்டேன் என்றார் எழிலன். உல்ப் ஹென்றிக்சனுடனான சந்திப்பில் மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். நன்றி>புதினம்.

0 comments: