07 July, 2006

மாணவர்களை கைது செய்தால் தாக்குதல் நடத்தப்படும்.

மாணவர்கள் கைதுசெய்யப்படுவது தொடர்ந்தால் பாடசாலை சமூகத்தினரைத் திரட்டி படையினர் மீது தாக்குதல் நடத்த வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு தெரிவித்துள்ளது நெல்லியடி மத்திய மகாவித்தியாலய மாணவர் ஒன்றியம். கரும்புலிகள் தினத்தை முன்னிட்டு மேற்படி ஒன்றியம் வெளியிட்டுள்ள பத்திரிகை அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது பேச்சு என்றும் போலி நாடகமாடிய சிங்கள அரசு எம்மையும் எமது இனத்தையும் முழுமையாக அழிப்பதற்கு ஒட்டுக்குழு என் னும் துரோகிகளான ஈ.பி.டி.பி.யின் உதவியுடன் கங்கணம் கட்டி நிற்கிறது. சிங்கள அரசு ஜெனீவா பேச்சுக்குப் பின்னர் அல் லைப்பிட்டியில் 13 அப்பாவிப் பொதுமக் களையும் புத்தூரில் 5 இளைஞர்களையும் நெல்லியடியில் 7 அப்பாவித் தமிழ் இளை ஞர்களையும் வங்காலையில் இரு சிறுவர் கள் உட்பட ஒரு குடும்பத்தையும் கொடூர மாகக் குத்திக் கொலை செய்துள்ளது. இவை குறித்து மௌனம் சாதித்த ஜனாதிபதி கெப்பிட்டிக்கொல்லாவ கிளைமோரின் போது மட்டும் உணர்ச்சிமிக்கவராகத் தன்னைக் காட்டிக்கொண்டார். இந்நிலையில் எமது மக்கள், எமது மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மீதும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள கொலைகள், கற்பழிப்புகள், கைது செய்தல் என்பன உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இல்லை என்றால் ஒரு சில தினங் களில் பாடசாலை மாணவர்கள் அனைத்து பாடசாலை மாணவர்களையும் ஒன்றி ணைத்து எமது சுதந்திர விடுதலைப் போராட்டத்தில் ஒன்றிணைவர். அதன் பின்னர் சிங் கள வெறியர்கள் மீது தாக்குதல் நடத்துவோம். புனிதமான நாளான கரும்புலிகள் தினத் தன்று சிங்கள வெறியர்களுக்கு இதனைத் தெரியப்படுத்துவதுடன் எமது மக்கள் எமது மாணவர்கள் முழுமையாக போராட்டத்தில் இணைந்து சுதந்திரமான தமிழீழம் உருவாக வழிவகுப்போம். என்று அதில் உள்ளது. நன்றி>பதிவு.

0 comments: