29 July, 2006

இலங்கையில் போர் நிறுத்தம் செத்துவிட்டது.

இலங்கையில் போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இல்லை. செத்துவிட்டது. ஆனால் பெயரளவிலும் உக்கிரமற்ற தணிவான போரும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் உல்ப் ஹென்றிக்சன் தெரிவித்துள்ளார். இலங்கையில் போர் நிறுத்தம் செத்துவிட்டது: உல்ப் ஹென்றிக்சன இலங்கையில் போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இல்லை. செத்துவிட்டது. ஆனால் பெயரளவிலும் உக்கிரமற்ற தணிவான போரும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் உல்ப் ஹென்றிக்சன் தெரிவித்துள்ளார். ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு உல்ப் ஹென்றிக்சன் அளித்த நேகாணல்: தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் சிறிலங்கா அரசாங்கம் ஆகிய இருதரப்பினரது செயற்பாடுகளினாலுமே யுத்த நிறுத்த ஒப்பந்தமானது உண்மையில் அதிகபட்சமாகவோ குறைந்தபட்சமாகவோ முறிவடைந்துள்ளது. உண்மையான யுத்த நிறுத்தத்திலிருந்து தொலைவில்தான் நாம் உள்ளோம். சிறிலங்கா அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேசிக் கொண்டிருந்தபோது எங்கள் முன்னாலேயே விமானத்திலிருந்து குண்டு வீசப்பட்டது. நிச்சயமாக இது சரியான சமிக்ஞை அல்ல. எந்த ஒருதரப்பும் முழு அளவிலான யுத்தத்துக்குத் தயாராக இருப்பதாக நான் கருதவில்லை. வன்முறைகள்தான் அதிகரிக்கும். வன்முறைகள் அதிகரிப்பது என்பது சிக்கலானது. நிலைமைகளை கவனத்தில் கொள்ளாவிடால் கொழும்புவுக்கும் வன்முறைகள் பரவும். பின்லாந்து, டென்மார்க்கைப் போல் சுவீடனும் வெளியேற முடிவு செய்தால் மூன்றில் ஒரு பங்கு கண்காணிப்புக் குழுவினர் வெளியேற நேரிடும். அனைத்து முறைப்பாடுகளையும் எம்மால் விசாரிக்க முடியாது. கண்காணிப்புக் குழு மூடப்பட்டுவிட்டால் இருதரப்புக்கும் இடையே செய்திகளை எடுத்துச் செல்கிற நபர்கள் இல்லை. அது அப்பாவி மக்களை பாதுகாப்பற்ற தன்மையை மேலும் அதிகரிக்கும் என்றார் உல்ப் ஹென்றிக்சன். நன்றி>புதினம்.

0 comments: