03 July, 2006

இந்தியாவின் சிறப்புப் தூதுவர் இலங்கை விரைவில் பயணம்.

சிறீலங்காவில் ஏற்பட்டுள்ள தற்போதைய பதற்ற நிலையை அறிய இந்திய அரசாங்கம் சிறப்புத் தூதுவர் ஒருவரை இலங்கைக்கு அனுப்பவுள்ளது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சின் செயலாளர் சியாம் சரணே இலங்கைக்கு வரவுள்ளார். இவர் இந்திய அரசாங்கத்தின் முக்கிய செய்தியுடன் இலங்கை வரவுள்ளார். சிறிலங்காவின் பாதுகாப்பு நிலைமைகள் மிகவும் சீர்கெட்டுள்ள நிலையில் இந்திய வெளிவிவகார செயலாளர் சியாம் சரண் அவசரமாக பேச்சு நடத்த அடுத்த சில நாட்களில் கொழும்புக்கு வருகை தரவுள்ளார். சியாம் சரணின் சிறிலங்கா வருகை குறித்து உத்தியோகப்பூர்வமாக அரச செயலகம் அறிந்திருந்த போதிலும், இத்தகவலை இரகசியமாக வைத்திருக்க முயற்சி செய்து வருகிறது. இந்திய அரசின் அக்கறை குறித்து சிங்கள இனவாதிகள் அறிந்து கொண்டால், மகிந்தவுக்கு அழுத்தங்கள் அதிகரிக்கலாம் என்ற அச்சத்தினால் சியாம் சரணின் வருகையை அரச செயலகம் மறைக்க முயற்சித்துள்ளது. வடக்கு - கிழக்கில் இராணுவத்தினராலும் துணை இராணுவக் குழுக்களினாலும் நடத்தப்பட்டு வரும் படுகொலைகள் மற்றும் இன அழிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் இந்திய அரசு அக்கறை கொண்டுள்ளதுடன், அது குறித்து விவரங்களை அறியவும் முயற்சியெடுத்து வருகிறது. நன்றி>பதிவு

0 comments: