21 June, 2006

எச்சரிக்கை!!! படங்கள் கோரமானவை.

வங்காலை படுகொலைகள் காட்சிவடிவில், சிறுவர்கள் பார்ப்பதை தவிர்க்கவும். http://www.sankathi.org/vankaalai.html நன்றி<சங்கதி ஏதுமறியாத எம் பிள்ளைகளை அமுக்கிநித்திரையிற் கொல். நிலத்திற் காலுரசத் தூக்கிலிடு. உரித்துச் சதையாக்கிப் பங்கிடு. உறிஞ்சிய இரத்தம் கலந்து கறியாக்கிஎச்சமின்றி சுவைத்துச் சாப்பிட்டு ஏப்பமிடு. பின்னர் பிள்ளைகளின் தாயைப்பிடி. அவள் கணவன் முன்னே கவுணைத்தூக்கிபிணத்தைப் புணருதலுக்கு ஒப்பாகவெறி தீரும் வரையும் முயங்கு. முடிந்ததும் பாதியுயிர் போயிருக்கும்மீதியையும் வெளியேற்றி வீசிப்போ. கணவனை மட்டும் ஏன் விடவேண்டும்?பிடித்து மடக்கி முறி. வதையின் வலியோலம் வெளியேறாதவாறுசோறளித்த உளியாலேயேதோண்டிசுவரோரம் எறிந்து செல். ஏனென்று கேட்கமுடியுமா உன்னையெவரும்?உன் கனத்த சப்பாத்தின்கீழே கசங்குவது தானேஎம் அடிமை ஜீவிதம்? நேற்று நிலவெறித்த இரவில்உன்னைப் பிடித்துலக்கிய உடற்பசி வடிந்திருக்கும். எங்கள் நெஞ்சில் கொதிப்புறும் நெருப்புக்குவடிகால் ஏது? வெசாக் நாளில் மாடுரித்த ஒருவனுக்குபத்தாண்டு ஒறுப்பளித்த பௌத்த பூமியே!என்ன தீர்ப்பு வழங்குவாய் இதற்கு? நாளை நாடாளுமன்றம் கூடும்போதுகண்டனத் தீர்மானம் கொண்டு வருவர் சிலர். செங்கோலேந்திய சேவகன் முன்னேவரசபாநாயகர் சபைக்கு வருவர்வங்காலைக்கு மட்டும் பதில் வரமாட்டாது. பனிஉறையும் தேசத்து குளிர் மலைச்சாரலுக்குபேசலாம் வருகவென அழைத்துச் சென்றவர்களுக்கும்வங்காலையின் வலிக்குரல் கேட்டிருக்காது. தங்கள் கதவுகளைச் சாத்திகாற்றின் வழிகளை அடைக்கும் ஒன்றியமும்இந்த உயிர் வதையைக் கணக்கிலெடுக்கப்போவதில்லை. எங்களை என்ன செய்யச் சொல்லுகின்றனர்எல்லோரும்? கண்காணிக்க வந்துள்ளமுன்னைய களமுனை அதிகாரிகளே!பிணத்தின் முன்னே தொப்பி கழற்றவும்மணக்கும் பிணக்குழி தோண்டி எடுக்கவும்காய்ந்து கிடக்கும் கசங்கிய மலர்களைகணக்கிலெடுக்கவும் தானாநீங்கள் இங்கே காத்திருப்பது? கதிர்காம அழகி “மன்னம்பெரி”யைதென்னிலங்கைப் பேய்கள் குதறியபோதுஎதிர்ப்புக்குரல் முதலில்எங்களிடம் இருந்துதான் வந்தது.“சூரியகந்த” புதைகுழிகளைதோண்டியெடுத்து விசாரணையை தொடக்கு என்றுமுதற்குரல் இங்கிருந்துதான் எழுந்தது. மனிதம் சாகாது கொஞ்சமாயினும் எஞ்சியிருக்கும்சிங்களத் தோழர்களே!தோழியரே!பதிலுக்கு எதிர்பார்க்கின்றோம் உங்களிடமிருந்துஒரு பதிலை. தொடரும் எல்லாக் குற்றங்களுக்கும்இங்கொரு சித்திரபுத்திரன் கணக்கெழுதுகிறான். எழுதும் குறிப்பேடு நிறைந்து வழிகிறதுகுற்றங்களாக வங்காலை வரை. நாளை கைகட்டிக்கொண்டுதரும சபையிற் தலைகுனிந்து நிற்பீர்வழங்கும் தண்டனைகளுக்காக. ஒன்று மட்டும் உறுதிதீர்ப்பெழுதும் கணம் வரைஉம்மைத் திருத்தவே முடியாது. - தாயகக் கவிஞர் புதுவை இரத்தினதுரை-

7 comments:

Anonymous said...

ஜயோ...... என்ன கொடுமை.

Anonymous said...

இன்னும் சில இங்கே... http://eelavali.blogspot.com/

said...

வணக்கம் அனானிஸ் நீங்கள் இட்ட இடுகைகளையும் பார்வையிட்டேன் வரவுக்கு நன்றி.

said...

ஐயோ! இது மனிதனால் தான் செய்யப்பட்ட கொடுமையா?? இதற்கு விரைவில் ஒரு தீர்வு வர இறைவனை மன்றாடுகிறேன்.

//*தொடரும் எல்லாக் குற்றங்களுக்கும்இங்கொரு சித்திரபுத்திரன் கணக்கெழுதுகிறான்.

நாளை கைகட்டிக்கொண்டுதரும சபையிற் தலைகுனிந்து நிற்பீர்வழங்கும் தண்டனைகளுக்காக.*//

அந்த நாள் மிகவிரைவில் வரும்.

இறைவா!

சித்திரபுத்திரனிடம் ஒரு கணினி கொடு
கணக்குகளை விரைந்து முடி,
என் தமிழினம் அழிக்கப்படுவதற்கு முன்!!!

said...

வணக்கம் இந்திய மாக்களே, வரவுக்கு நன்றி,
சித்திரபுத்திரனின் கணக்கெழுதி முடிக்கும் நாளை நாமும் எதிபார்த்து காத்திருக்கிறோம்.

said...

//*வணக்கம் இந்திய மாக்களே, வரவுக்கு நன்றி, *//

ஈழபாரதி அப்படி என்ன எம் மீது கோபம் மாக்களேன்னு சொல்லும் அளவுக்கு!!! ஐந்தறிவாய் போனோம், உதவிக்கு வரவில்லை என்பதனாலா? நான் எப்பொழுதும் மக்கள் பக்கமே என்பதை அழுத்தி சொல்ல கடமைப்பட்டுள்ளேன் :)

said...

வணக்கம் ஜெய்சங்கர், உங்கள் மீது எந்தகோபமும் இல்லை, A யை இரண்டுதடவை அமத்திவிட்டேன் மன்னிக்கவும், உங்களை போன்றவரின் ஆதரவுதான் எமக்கு பெரும் பலத்தையும் , ஒருவித நிம்மதியையும் தருவது வரவுக்கு நன்றி.