25 June, 2006

சிறீலங்கா ஆயுதப்படை=ராஜபக்சா, வேறுபடுத்தமுடியாது.

சிறீலங்கா ஆயுதப் படைகளையும் அதிபர் ராஜபக்சவையும் வேறுபடுத்திப் பார்க்க முடியாது என, தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து விளக்கமளித்திருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆலோசகரும், தத்துவாசிரியருமான கலாநிதி அன்ரன் பாலசிங்கம், சிறீலங்கா ஆயுதப் படைகளின் தளகர்த்தாவாகவும், பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவாறு, சகோதரர் கோட்டபாய ராஜபக்சவை பாதுகாப்புத்துறை செயலாளராகவும் கொண்டுள்ள அதிபர் ராஜபக்சவை, ஆயுதப் படைகளில் இருந்து வேறுபடுத்திப் பார்ப்பது நகைப்புக்கிடமானது என சுட்டிக் காட்டியுள்ளார். சமாதான முன்னெடுப்புக்களில் இருந்து நோர்வேயை வெளியேற்றும் சதி நோக்கத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கான திரைமறைவு முயற்சிகளில், சிறீலங்கா அதிபர் ராஜபக்ச ஈடுபட்டுள்ளார்.கடந்த செவ்வாய்க்கிழமை, உதயன் - சுடரொளி நாளேடுகளின் ஆசிரியர் வித்தியாதரன் அவர்களை சந்தித்துக் கலந்துரையாடிய சிறீலங்கா அதிபர், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகளை நடாத்த விரும்புவதாகவும், இதற்கு மாற்றீடாக, கருணா ஒட்டுக்குழுவின் வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், உறுதியளித்திருந்தார். இதற்கு முன்னோடியாக, தமிழீழ விடுதலைப் புலிகளும் சிறீலங்கா அரசாங்கமும் இரண்டு வார காலத்திற்கு வன்முறைகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது எனவும், அதன் பின்னர் ஏற்படக் கூடிய நல்லெண்ண சூழலை அடிப்படையாகக் கொண்டு, இரு தரப்பும் சமாதானத்தை முன்னகர்த்திச் செல்வது என்றும், புதிய திட்டமொன்றை சிறீலங்கா அதிபர் முன்வைத்திருந்தார். மேலும், சிறீலங்கா படைகளுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தான் சிக்கியிருப்பதாகவும், இதில் இருந்து விடுபட்டு சமாதானத்தை முன்னகர்த்திச் செல்வதற்கு விரும்புவதாகவும், உதயன் நாளேட்டின் ஆசிரியரிடம், அதிபர் ராஜபக்~ கூறியிருந்தார். சிறீலங்கா அதிபரின் இந்தக் கூற்றிற்கு விளக்கமளித்திருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆலோசகரும் தத்துவாசிரியருமான கலாநிதி அன்ரன் பாலசிங்கம், அதிபர் ராஜபக்வை ஆயுதப் படைகளில் இருந்து வேறுபடுத்;திப் பார்க்க முடியாது என்றும், இவ்வாறான நிலையில், அதிபர் ராஜபக்வின் கூற்று, நகைப்புக்கிடமானது என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.இதேவேளை, சிறீலங்கா அதிபரின் திட்டத்திற்கான தமிழீழ விடுதலைப் புலிகளின் பதில், நாளை உதயன் நாளேட்டின் ஆசிரியர் வித்தியாதரன் அவர்களின் ஊடாக கையளிக்கப்பட இருப்பதாக தெரிய வருகின்றது இணைப்பு : newstamilnet.com

0 comments: