15 June, 2006

தமிழர் பிரதேசங்கள்மீது குண்டு வீச்சு.

முல்லைத்தீவில் திடீர் விமானக் குண்டுவீச்சு: 5 பேர் படுகாயம் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான முல்லைத்தீவில் சிறிலங்கா விமானப்படையின் கிபீர் விமானங்கள் மக்கள் குடியிருப்புகளை இலக்கு வைத்து இன்று வியாழக்கிழமை குண்டுத் தாக்குதலை நடத்தின. இரு கிபீர் விமானங்கள் இன்று முற்பகல் 11.45 மணிக்கு முல்லைத்தீவு வான்பரப்பில் நுழைந்து செல்வபுரம் வட்டுவாகல் மக்கள் குடியிருப்புகளை இலக்குவைத்து இரு குண்டுகளை வீசின. இதில் மக்கள் 5 பேர் காயமடைந்தனர். குடியிருப்புகள் சேதமாகின. மேலும் கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன. தொடர்ந்து முற்பகல் 11.57 மணிக்கு இரண்டாவது முறையாக கிபீர் விமானங்கள் குண்டுகளை வீசின. நன்றி-புதினம் இதேவேளை திருகோணமலை முதூர்பிரதேசங்களிலும் தமிழர் குடியிருப்புகள் மீது பாரிய எறிகனை வீச்சுக்கள் நடை பெறுவதாக அறிய முடிகிறது. சம்பூர், மூதூர் பிரதேங்களை இலக்குவைத்து பல்குழல்எறிகணைகள், மற்றும் ஆட்லறிகள் ஏவப்படுகின்றன சேதவிபரம் தெரியவில்லை.

0 comments: