17 June, 2006

படையினரின் வெறியாட்டம் ஐவர் பலி! 44 பேர் காயம்.

மன்னாரில் பொதுமக்கள் இடம்பெயர்ந்து தங்கியிருந்த பேசாலை தேவாலய முன்றலில் இன்று காலை சிறீலங்கா கடற்படையினர் மேற்கொண்ட கைக்குண்டுத் தாக்குதலில் பெண் ஒருவர் கொல்லபட்டதுடன் 44 பேர் காயமடைந்துள்ளனர் அத்துடன் பேசாலைக் கடலில் வைத்து நான்கு மீனவர்கள் சிறீலங்கா கடற்படையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை 6.45 மணியளவில் மன்னார் கடற்பரபில் இடம்பெற்ற மோதலை அடுத்தே கரையோரக் கிராமங்கள் மீது கண்மூடித்தனமான துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளார்கள். இதன் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து பாடசாலை மற்றும் தேவாலயங்களில் தஞ்சம் புகுந்திருந்தனர். இவ்வாறு தேவாலயத்தில் தஞ்சம் புகுந்த மக்கள் மீது சிறீலங்கா படையினர் இந்த கொலை வெறியாட்டத்தை நடாத்தியுள்ளனர். இதில் பெண்னொருவர் சம்பவம் இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளார். மேலும் 44 பேர் படுகாயமடைந்துள்ளார்கள். நன்றி>பதிவு.

0 comments: