13 June, 2006

தமிழர் கொலைகளின் பின்நின்று செயல்படுபவர்.

ராஜபச்சவின் சகோதரர்களின் உத்தரவில் வடக்கு கிழக்கில் தமிழர் படுகொலை - TCHR அதிபர் மகிந்த ராஜபச்சவின் சகோதரர்களின் உத்தரவிலேயே வடக்கு கிழக்கில் தமிழர் மீதான படுகொலைகள் நடைபெறுவதாக பிரான்சை தளமாகக் கொண்டு இயங்கும் தமிழர் மனிதர் உரிமைகள் மையம் தெரிவித்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை இது தொடர்பில் வெளியிட்ட அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளது. வடக்கு கிழக்கில் நடைபெறும் அப்பாவி மக்கள் மீதான படுகொலைகள் யாவும் தமிழ் மக்களை பீதி கொள்ளும் நோக்கில் அதிபர் மகிந்த ராஜபக்சாவினாலும், பாதுகாப்பு அமைச்சின் செயலாரான ராஜபக்சாவின் சகோதரன் கொத்பாய ராஜபக்சாவினதும் உத்தரவிலுமேயே தமிழர் கொலைகள் நடைபெறுவதாக தெரிவித்துள்ளது. இப்படுகொலைகளை மேற்கொள்ளும் துணை ஆயுதக்குழுக்களுக்கு சன்மானப்பட்டியல் ஒன்று தாயாரிக்கப்பட்டு அதன் அடிப்படையிலேயே ஒவ்வொரு படுகொலைகளுக்கும் சன்மானம் வழங்கப்படுவதாகவும் தமிழர் மனிதர் உரிமைகள் மையத்தின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சினால் தயாரிக்கப்பட்ட இவ் சன்மானப்பட்டியலில், கைக்குண்டுத் தாக்குதல் செய்வோருக்கு 15.000 ரூபாவும், கிளைமோர் தாக்குதல் செய்வோருக்கு 20.000 ரூபாவும், விடுதலை போராட்டத்திற்கு ஆதரவாக முன்னின்று உழைப்போரை கொலை செய்வோருக்கு 100.000 ரூபாவும் சன்மானமாக வழங்கப்படுவதுடன், அரச படைகள் மன்னிப்புடன், தாம் விரும்பியவர்களை வடக்கு கிழக்கில் கொலை செய்யவும், பாலியல் வன்முறையில் ஈடுபடுத்தவும் ராஜபக்சா சகோதரார்களினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தற்போதைய சிறிலங்காவின் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரிகளாகவும், சிறிலங்காவில் பாதுகாப்பு முடிவுகளை மேற்கொள்பவர்களாகவும் சிறிலங்காவின் தென் பகுதியை சேர்ந்த ராஜபக்சா சகோதரார்ளும், அவர்களது முன்னாள் பாடசாலை தோழர்களும், நண்பர்களும், உறவினர்களுமே உள்ளார்களென்றும் தமிழர் மனிதர் உரிமைகள் மையத்தின் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது. நன்றி>பதிவு.

0 comments: