19 June, 2006

தி.மு.க. கூட்டணி தலைவர்கள் இன்று அவசர கூட்டம்.

கருணாநிதி தலைமையில் தி.மு.க. கூட்டணி தலைவர்கள் இன்று அவசர கூட்டம்: இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து முக்கிய முடிவு முதல்-அமைச்சர் கரு ணாநிதி கடந்த வாரம் பெங் களூர் சென்றார். அங்கு சாப்ட்வேர் நிறுவனங்களை பார்வையிட்டார். பெங்களூரில் 10 நாட்கள் ஓய்வு எடுக்க அவர் முடிவு செய்தார். ஆனால் இலங்கை யில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள் ளதை தொடர்ந்து கருணாநிதி அவசரமாக இன்று சென்னை திரும்பினார். தி.மு.க. கூட்டணித் தலை வர்கள் ஆலோசனை கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது. கருணாநிதி இக்கூட்டத்துக்கு தலைமை தாங்கு கிறார். காங்கிரஸ், பா.ம.க., மார்க்சிஸ்டு கம்ïனிஸ்டு, இந்திய கம்ïனிஸ்டு உள்ளிட்ட கூட்டணித் தலைவர்கள் இதில் பங்கேற்கிறார்கள். இலங்கையில் தற்போது நடைபெற்று வரும் மோதல் குறித்து ஆலோசிக்கப்படுகி றது. தமிழகத்துக்கு ஈழத் தமிழர்கள் அகதிகளாக வருவது குறித்தும் விவாதிக்கப்படு கிறது. பின்னர் இலங்கை பிரச்சினை குறித்து கூட்டத் தில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. நன்றி>லங்காசிறீ

0 comments: