28 May, 2006

நாளை உலகம் முழுதும், ஓங்கி ஒலிக்கிறது உரிமைக்குரல்.

நாளை 29ந்திகதி தடைக்கு எதிரான உலகம் தழுவிய, ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள். தமிழ் உணர்வாளர்களே ஒன்று கூடுங்கள். பாராளமண்றங்களை நோக்கிய முற்றுகை. 'உலகே உனக்கு கண்ணில்லையா?" 'உலக மக்கள்தான் மக்களா? எங்கள் தமிழீழ மக்கள் என்ன கற்களா?" அனைத்துலக மனக்கதவின் மேல் எங்கள் கரங்களை தட்டி எமது உடன் பிறப்புகளை காப்பாற்றுவோம். அமைதி வழிமூலம் தமிழ் மக்கள் தங்களுடைய உரிமைகளை வென்றெடுக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் இவ் வேளையில் சிறிலங்கா அரசும் அதனுடைய கூலிப்படைகளும்; தமிழ் மக்களை கொன்றொழித்து தமிழர்களின் சாத்வீக போராட்டத்தை நசுக்க முயற்சிக்கின்றன. இவர்கள் குழந்தைகள் சிறுவர்கள் என்று கூட பார்க்காமல் நான்கு மாத குழந்தை, நான்கு வயுது குழந்தைகளை கொல்லுகிறார்கள். நியுூசிலாந்து தமிழ் மக்கள், சிறிலங்கா அரசாங்கத்தின் இனப் படுகொலைக்கு எதிராக குரல் கொடுக்கும் முகமாக கவனயீர்ப்பு போரட்டம் ஒன்றை வெலிங்டனிலும, நீர் கூட அருந்தாமல், ஒருநாள் உண்ணாவிரத்தை ஒக்லாந்திலும் நடாத்துகிறார்கள். ஒக்லாந்து - உண்ணாவிரதப் போராட்டம் காலம்: 29.05.2006 (திங்கட்கிழமை) நேரம்: காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை இடம்: அயோத்தியா சதுக்கம் ஒக்லாந்து நகர மையம் வெலிங்டன் - கவனயீர்ப்பு போரட்டம் காலம்: 30.05.2006 (செவ்வாய்கிழமை) நேரம்: மதியம் 12.15 மணி முதல் 1.30 மணிவரை இடம்: பாராளுமன்றம் முன்பாக எமது இனத்திற்கு இழைக்கப்படும் கொடுமைகளை சர்வதேச உலகத்திற்கு எடுத்துச் சொல்லும் இறுதித் தருணம் இது என்பதால் அனைத்;து தமிழ் மக்களையும், மனிதாபிகளையும் உணர்வெழுச்சியுடன் வந்து இவ் உண்ணாவிரதப் போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளுகின்றோம். மனிதாபிமானம் உள்ள உலகத் தமிழினம் அனைத்தும் ஒன்று திரண்டு திடசங்கற்ப்பம் கொண்டிருக்கும் இவ்வேளை நியுூசிலாந்து தமிழர்களாகிய நாங்களும் எழுந்து எமது இனத்தின் உயிர்களை காக்க முயல்வோம். 'புலம் பெயர் தமிழர்களாகிய எமது குரல்களே ஈழத்தமிழர்களின் உயிரைக் காக்கும். தமிழ் மக்கள் மீது தொடரும் சிறீலங்காவின் மனிதப்படுகொலை நடவடிக்கைகளை தடுத்துநிறுத்திட உதவிடுமாறு உலக சமூகத்தினைக் கோரி உரிமைக்குரல்! 29 மே 2006 - திங்கட்கிழமை இடம்: Sergels Torg, Stockholm நேரம்: 14.00 (ஊர்வலமாக பாராளுமன்றம் நோக்கி செல்லல்) சிறிலங்காவின் முப்படைகளும், துணைப்படைகளும் இணைந்து நடத்தும் இன அழிப்பு வன்முறைகள் சமாதான காலத்தில் - சர்வதேச சமூகத்தின் கண்முன்னே - தினசரி நடந்தேறுகின்றது. தமிழின அழிப்பை நோக்காகக் கொண்டு திருமலை - யாழ்ப்பாணம் - மட்டக்களப்பு உள்ளடங்கலாக தமிழர் நகரங்களும் கிராமங்களும் கொலைக்களங்களாக்கப்பட்டு வருகின்றது. பலநு}று மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த மிகப்பெரும் படுகொலைகளை தடுத்து நிறுத்தி சிறீலங்காவின் இனஅழிப்பு நோக்கிற்கு எதிரான சர்வதேச கவனஈர்ப்பைக் கோரி அணிதிரளும் மிகப்பெரும் தேசியப் பணி இது! சர்வதேச சமூகமே... சிறிலங்காவின் இன அழிப்பை தடுத்து நிறுத்து! ஆக்கிரமிப்புப் படைகளே தமிழர் தாயகத்தை விட்டு வெளியேறு! போர்க்குற்றம் புரியும் சிறிலங்காவை குற்றக்கூட்டில் நிறுத்து! தமிழர் விடுதலைக்கான குரலை அங்கீகரி ! தமிழர்களின் தேசிய தலைமைக்கு மதிப்பளியுங்கள்! எங்கள் வேர்கள் ஆழப் பதிந்த தாயகத்தின் பாதுகாப்பிற்குக் குரல்கொடுப்பது எங்கள் சனநாயக உரிமை! அனைவரும் வாருங்கள் - அனைத்துலகையும் திரும்பிப்பார்க்க வைப்போம்! தொடர்புகள்: ராஜன்: 070 594 20 47 புனிதா: 070 759 30 88 வடக்கு-கிழக்கில் இடம்பெறும் மனிதப் படுகொலைகளையும் அவர்களது பாதுகாப்பை சர்வதேச சமூகம் உறுதிப்படுத்தத் தவறியதையும் கண்டித்து புலம்பெயர் தமிழர்கள் சர்வதேச சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டுவரும் உரிமைக்குரல் ஒன்றுகூடல். புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் இந்த உரிமைக்குரல் ஒன்றுகூடலுக்கு அவுஸ்திரேலிய வாழ் தமிழ் மக்களும் தம் ஆதரவை நல்கி, எமது மக்களின் துன்பங்களையும் துயர்களையும் சர்வதேச சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம். மனித உரிமைகளையும் மனித உரிமை மீறல்களையும் பற்றி கண்டனங்களை வெளியிடும் சர்வதேச சமூகம், 4 மாத, 4 வயது குழந்கைள் உட்பட 13 அப்பாவி பொதுமக்கள் ஓரிரவில் அல்லைப்பிட்டியில் கொல்லப்பட்டது தொடர்பாக எந்தவித கண்டனங்களும் தெரிவிக்காமல் மௌனம் சாதிப்பதைக் கண்டித்து அவுஸ்திரேலிய வாழ் தமிழ் மக்களும் தமிழ் அன்பர்களும் சிட்னி, மெல்பேர்ன், கன்பரா, பிறிஸ்பேர்ன் நகரங்களிலிருந்து, பெருந்திரளாக கன்பராவில் அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்திற்கு முன்பாக கூட இருக்கின்றார்கள். அன்புத் தமிழ்ச் சமூகமே, அல்லலுறும் எம்மக்களின் துயர்தீர்க்கவும் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் உங்கள் பங்களிப்பைச் செய்ய வேண்டிய காலம் இது. அனைவரும் பெருந்திரளாக ஒன்றுகூடி, எமது ஒருங்கிணைந்த எதிர்ப்பை சர்வதேச உலகிற்கு எடுத்துக்காட்டவும் சர்வதேசத்தின் கவனத்தை எம்மக்களின் பால் திசை திருப்பவும் ஒன்று கூடுங்கள். காலம்: மே மாதம் 29 ஆம் திகதி (திங்கட்கிழமை) நேரம்: காலை 10 மணி இடம்: கன்பரா பராளுமன்றத்திற்கு முன்பாக சிட்னியில் பிரயாண ஒழுங்குகளுக்கும் மேலதிக விபரங்களுக்கும் ஜெகன் 0410 310 499, 02-9642 1126 ஆகிய இலக்கங்களில் தொடர்பு கொள்ளவும். மெல்பேணில் பிரயாண ஒழுங்குகளுக்கும் மேலதிக விவரங்களுக்கும் டொக்டர் சிவா 03-9803 6239 அல்லது சிவகுமார் 0404 894 591 ஆகியோருடன் தொடர்பு கொள்ளவும்.

2 comments:

Anonymous said...

உணர்வுள்ள ஒவ்வொருவனும் கட்டாயம் பங்கு கொள்ள வேண்டிய போராட்டம்.

said...

தமிழின உணர்வுள்ள அனைவரும் கட்டாயம் கலந்துகொள்ளுங்கள்!!!.