23 May, 2006

தடையை நிறுத்த, புலம்பெயர் தமிழரால் முடியும்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கையை தடுத்து நிறுத்துவது புலம் பெயர் தமிழரின் கைகளில் உள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொள்ளவுள்ள விடுதலைப்புலிகளிற்கு எதிரான நடவடிக்கையை தடுத்து நிறுத்துவது புலம் பெயர் தமிழர்களின் கைகளில் உள்ளது என பெயர் குறிப்பிடதா ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஐரோப்பிய ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு சிறிலங்காவின் சரியான நிலைப்பாடு தெரியாது இறமையுள்ள இலங்கை என்ற நாட்டு அரசிற்கு எதிராக தீவிரவாத அமைப்பு ஒன்று போராடுகின்றது என்று தான் பெரும் பாலான ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு தெரியும். தமிழர்களின் உரிமை போராட்டம் பற்றி எதுவும் தெரியாது. எனவே உண்மை நிலையை ஐரோப்பிய மக்களிற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும் எடுத்துச் செல்வது புலம் பெயர் தமிழர்களின் பொறுப்பு அண்மையில் அடக்குமுறையில் இருந்து சேர்பிய போன்ற பல ஐரோப்பிய நாடுகளை விடுவிப்பதற்கு உதவியளித்த ஐரோப்பிய ஒன்றியம் தமிழர்கள் விடயத்தில் தலைகீழாக நடந்து கொள்வது தமிழர்களின் பிரசினையை ஐரோப்பிய நாடுகள் சரியாக புரிந்து கொள்ளமையே என்று தெரிவித்தார். நன்றி>பதிவு.

0 comments: