17 January, 2007

புரிந்துணர்வு உடன்படிக்கையிலிருந்து இருகட்சிகளும் விலக வேண்டாம்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியும் செய்து கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருந்து இரண்டு கட்சிகளையும் வில வேண்டாம் என இந்தியாவும் அமெரிக்காவும் அழுத்தம் கொடுத்துள்ளன. ஐக்கிய தேசிய கட்சியின் மாற்று குழுவை சேர்ந்த 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியதை அடுத்து சுதந்திர கட்சிகும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருந்து ஐக்கிய தேசிய கட்சி விலகும் என எதிர்வு கூறப்பட்டிரந்தது. ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களை அரசாங்கத்தில் இணைத்துக் கொண்டால் ஒப்பந்தம் கிழத்தெறியப்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் திஸ்ஸ விதார பகிரங்கமாக அறிவித்திருந்தார். எனினும் சுதந்திர கட்சியுடன் செய்து கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருந்து விலக வேண்டாம் என ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரனில் விக்கிரமசிங்கவிற்கு இந்தியாவும் அமெரிக்காவும் அழுத்தம் கொடுத்துள்ளதாக இராஜதந்திர தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன இதேவேளை சுதந்திர கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியும் செய்து கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தமானது இனப்பிரச்சினை தீர்விற்கான அடிப்படை என்றும் அதனை செயலற்றதாக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் இந்த இரு நாடுகளும் அழுத்தம் கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஆரசாங்கத்தை பலப்படுத்தி அரசியல் இலாபம் தேடுவதை விடுத்து இலங்கையின் நீண்ட கால இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு முன்னுரிமையளித்து செயல்படுமாறும் இந்தநாடுள் மகிந்த ராஜபக்சவை வலியுறுத்தியுள்ளன. எனினும் வெளிநாட்டு அழுத்தங்களுக்கு அடிபணித்து நாட்டை நிர்வகிக்க முடியாது என்றும் அரசாங்கத்தை பலமுள்ளதாக மாற்றினால் மட்டுமே எந்த விதமான நடவடிக்கையினையும் முன்னெடுக்க முடியும் என்று மகிந்த ராஜபக்ச தனக்கு நெருங்கிவர்களிடம் தெரிவித்துள்ளார் இதன் மூலம் அமெரிக்கா மற்றும் இந்தியாக ஆகிய நாடுகளின் எதிர்பார்பிற்கு முரணான வகையில் ஐக்கிய தேசிய கட்சியை பலவீனப்படுத்தி தனது அரசாங்கத்தை பலப்படுத்தும் முயற்ச்சகளை மகிந்த ராஜபக்ச திட்டமிட்டவாறு தொடர்வார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளத நன்றி>பதிவு.